India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்களும் தங்களது குறைகளை எடுத்துரைத்து நேற்று மனு வழங்கினர். இதில், பொதுமக்கள் இலவச பட்டா, இலவச வீட்டுமனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற 493 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தர்மபுரி மாவட்ட காவல்துறையினர், விசாரணை அமைப்புகளில் இருந்து பேசுவதாக உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம் என கூறிவரும் போலியான அழைப்புகளை நம்பி உங்கள் பணம் மற்றும் தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம். மேலும், சைபர் கிரைம் புகார்களுக்கு 1930 என்ற எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனனர்.
தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் பணிக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி அதகப்பாடி, தடங்கம், அதியமான்கோட்டை, பாலஜங்கமனஅள்ளி கிராமங்களில் சிப்காட் தொழில் பூங்கா அமைகிறது. நில எடுப்பு பணிகள் முடிக்கப்பட்டு 1724 ஏக்கர் நிலம் சிப்காட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சிப்காட் தொழில் பூங்காவில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.14.08 கோடி செலவில் வழங்கியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி பெறப்படாத நிலுவையில் இருந்தது. தற்போது அதற்கான அனுமதி பெறப்பட்டது. ரூ. 462 கோடியில் அமையவுள்ள இந்த சிப்காட் தொழில் பூங்கா மூலம் 18300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் அறிக்கை வெளியீடு: தர்மபுரி மாவட்டத்தில் நவம்பர் 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சுருக்க திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், பூத் முகவர்கள் கலந்து கொண்டு வாக்காளர் சுருக்கத் திருத்த முகாமில் கலந்து கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பங்கு நத்தம் கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நூற்றுக்கணக்கான கல்வட்டங்கள் கண்டறியப்பட்ட பகுதியை சுற்றுலா மையமாக மேம்படுத்த தொல்லியல்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், பங்கு நத்தம் பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெருங்கற்கால மக்கள் வாழ்ந்துள்ளதாக கூறுகின்றனர். ஈமச்சின்னங்களான கல்வட்டங்கள் பெருங்கற்கால மக்களின் நாகரிகம், வாழ்க்கை முறை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.
தர்மபுரி மாவட்டத்திற்கு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் (நவம்பர் 10) நேற்று வருகை தந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி கிழக்கு திமுக மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் தர்மசெல்வன் சால்வை அணிவித்து அமைச்சரை வரவேற்றனர்.
தருமபுரி மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு, RBI-யால் அங்கீகரிக்கப்படாத செயலிகளின் மூலம் கடன் பெறாதீர்கள் எச்சரிக்கையோடு இருங்கள். இல்லையெனில் மோசடி நபர்கள் உங்கள் சுய விவரங்கள் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி ஆபாசமாக சித்தரித்து உங்களிடம் பணம் கேட்டு மிரட்டுவார்கள். மேலும் சைபர் கிரைம் புகார்களுக்கு: 1930 எண்களை அழைக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி, கெரகோட அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன், இவரது மனைவி சுஜிதா (29), இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சுஜிதா, டி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வுக்கு படித்து வருகிறார். 4 ஆண்டுகள் நடந்த தேர்வில் தேர்ச்சி பெறாததால் விரக்தியில் இருந்த சுஜிதா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா நேற்று ( நவ 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மற்றும் அரூர் கல்வி மாவட்டங்களில் உள்ள 1355 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 26 வட்டார கல்வி அலுவலர்கள் மூலமாக செயல்பட்டு வரும் 1355 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகை மற்றும் கற்பித்தல் பணி குறித்து நேரடி ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.