India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பணிகள் சரியாக மேற்கொள்ளப்படாமல் இருந்தது. தூய்மை பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரருக்கு ரூபாய் 10,000/- அபராதம் விதித்ததோடு, தனியார் ஒப்பந்ததாரரை மருத்துவமனையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும், இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் எச்சரித்தார். ஷேர் பண்ணுங்க
+2 பொதுத் தேர்வு இன்றுடன் முடிவடையும் நிலையில். பள்ளி மாணவர்கள் தங்களது உயர் படிப்பை “எங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம்”என்ற தலைப்பின் கீழ் நாளை மற்றும் நாளை மறுநாள் (மார்ச். 26,27) இரு தினங்களுக்கு. தர்மபுரி மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் ஹோட்டல் அதியமான் பேலஸில் இந்த இலவச உயிர் கல்வி வழிகாட்டி நிகழ்வு நடைபெறுகிறது. இச்செய்தியை 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள், வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தவறும் பட்சத்தில் குடும்பஅட்டை ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
கொட்டுமாரன அள்ளியை சேர்ந்தவர் தலைகொண்டான் விவசாயி. இவர் டூவீலரில் பெரியாம்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பிய போது, நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.
சேலத்தை சேர்ந்தவர் அந்தோணிராஜ், திருவண்ணாமலை அடுத்த தன் சகோதரர் வீட்டிற்கு, தாய் மல்லிகா, 64, 4 மகள்களையும் உறவினர் செல்வா என்பவரின் காரில், நேற்று முன்தினம் அனுப்பினார். கார் சேலம் – அரூர் தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சவாடி கணவாயை கடந்து செல்லும் பொழுது காரின் மீது லாரி மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலயே மல்லிகா உயிரிழந்தார்.மீதம் 4 பேரும் பலத்த காயங்களுடன் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
சேலம், டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <
மத்திய அரசின் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயர்மேன், ரிஜ்ஜர், ஸ்கபோல்டர் என மொத்தம் 12 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். 18-45 வயதிற்குட்பட்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு வடிவில் தேர்வுகள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (மார் 24) இந்த <
அதியமான் கோட்டையில் தான் இந்த சென்னராயப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மத்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருக்கும் இக்கோயிலின் மகாமண்டபத்தின் விதானத்தில் மகாபாரத, இராமாயண காட்சிகளை விளக்கும் பழங்கால சுவரோவியங்கள் உள்ளன. இவை சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்தவையாகக் கருதப்படுகிறன. இக்கோவில் இன்றளவும் தர்மபுரி மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் எடுத்துக்கூறும் சான்றாகவே உள்ளது.
தர்மபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”ஆயுதப்படையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் நாளை (மார்ச் 24) ஏலம் விடப்பட உள்ளது. 6 இருசக்கர வாகனங்கள், 15 நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 21 வாகனங்களுக்கு தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் காலை 8 மணிக்கு ஏலம் நடைபெறுகிறது. குறைந்த விலையில் வண்டி வாங்க விரும்பும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.