India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.

தருமபுரியில் இருந்து 25 கி.மீ. தொலைவில், 3000 அடி உயரத்தில் வத்தல்மலை அமைந்துள்ளது. இது ‘ஏழைகளின் குட்டி ஊட்டி’ என அழைக்கப்படுகிறது. 24 கொண்டை ஊசி வளைவுகளுடன் ரம்மியமான பயணத்தை அளிக்கும் இது, குளிர்ச்சியான காலநிலை மற்றும் மூலிகைச் செடிகள் நிறைந்தது. காபி, மிளகு சாகுபடி இங்கு பிரபலம். வியூ பாயிண்ட், வத்தல்மலை அருவி ஆகியவை முக்கிய சுற்றுலா அம்சங்களாகும். இது ஒரு சிறந்த பட்ஜெட் சுற்றுலாத் தலமாகும்.

ரயில்வேயின் கீழ் செயல்படும் ரயில்வே உணவு, சுற்றுலா நிறுவனத்தில் (ஐ.ஆர்.சி.டி.சி.,) காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளது. விருந்தோம்பல் கண்காணிப்பாளர் பிரிவில் மொத்தம் 64 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கு,கல்வித்தகுதி பி.எஸ்சி.,/ பி.பி.ஏ.,/ எம்.பி.ஏ ஆகிய பட்டம் பெற்று இருக்கவேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. சி.ஐ.டி வளாகம், தரமணி நவ.15 தேதி நேர்காணல் நடைபெறுகின்றது.

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சாலையில் அமைந்துள்ள ஜோதி திருமண மண்டபத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் இல்ல திருமண விழா நம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது.இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் பங்கேற்கும் விழா பந்தலில் இன்று தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் மற்றும் காவல் துறை அதிகாரிகள் விவரங்களைக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர்.

காரிமங்கலம் வட்டம், எலுமிச்சனஅள்ளி, வாக்கன்கொட்டாய் பேருந்து நிறுத்தம் அருகே முனுசாமி என்பவர் வசிக்கிறார். விவசாயி. நேற்று (நவ.1) சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மிக வேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், தர்மபுரி ஜி.ஹெச்-ல் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார். இது குறித்த காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் முழுவதும் (நவ .01) இரவு 9 மணி முதல் இன்று (நவ.2) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. பாரி சங்கர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக் கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்

தருமபுரி மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான மின் நிறுத்த தேதி தன்கேட்க்கோ அறிவித்துள்ளது. அதன்படி நவ.01 அரூர் மற்றும் இலக்கியம்பட்டி. 5ம் தேதி மாம்பட்டி. 7ம் தேதி அதியமான் கோட்டை. 11ம்தேதி பொம்மிடி.13ம் தேதி ராமியானஅல்லி.15ம் தேதி பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், தருமபுரி.18ம் தேதி சொகத்தூர், வெள்ளிச்சந்தை. 20ம் தேதி மொரப்பூர். 27ம் தேதி பென்னாகரம் ஆகிய தேதிகளில் 9am – 2pm வரை மின்னிருத்தம்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இன்று (நவ.01) , தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து ஆட்சியர் சதீஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். மேலும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரமும், 27 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு ஏழு கிலோமீட்டர் தூரமும் மாரத்தான் நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.