India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூரில் அற்புதமான சுற்றுலா தலங்கள் உள்ளன. அதில் நாம் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள், 1. கடலூர் வெள்ளி கடற்கரை, 2. சிதம்பரம் பிச்சாவரம் காடு, 3. ஸ்ரீ முஷ்ணம் பூவராகவசாமி கோயில், 4. புவனகிரி ராகவேந்திரர் அவதரித்த தளம், 5. காட்டுமன்னார் கோவில் வீரநாராயணன் ஏரி, 6. சிதம்பரம் நடராஜர் கோயில், 7. பரங்கிப்பேட்டை சாமியார்பேட்டை கடற்கரை. மேலும் உங்களுக்கு தெரிந்த இடங்களை கமெண்ட் பண்ணுங்க..
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து 29.03.2025 (சனிக்கிழமை) அன்று பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் நடத்தப்படவிருந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களினால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த கீழக்கொல்லையை சேர்ந்தவர் செந்தில்நாதன் மகன் அஸ்வந்த் (4). கடந்த 26.1.2022 அன்று அதே பகுதியை சேர்ந்த முருகவேல் மகள் ரஞ்சிதா (26) என்பவர் முன்விரோதம் காரணமாக செந்தில்நாதன் மகன் அஸ்வந்தை கொலை செய்தார். இந்த நிலையில் சிறுவனை கொலை செய்த ரஞ்சிதாவுக்கு நேற்று கடலூர் ஏ.டி.ஜே. கோர்ட்டில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சோபனா தேவி உத்தரவிட்டார்.
வானிலை ஆய்வு மைய தகவலின்படி கடலூர் மாவட்டத்தில் எதிர்வரும் கோடை காலத்தில் வெப்ப அலை தாக்குதல்கள் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகரிக்கும் வெப்ப நிலையால் தலைவலி, மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டால் மருத்துவ உதவியை உடனடியாக நாட வேண்டும். தேவைப்பட்டால் அவசரகால உதவி எண். 104ஐ அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE NOW
சேத்தியாத்தோப்பு அருகே ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்தவர் குமார். அதே பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் மனமுடைந்த குமார் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சிவராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பையில் தான் இறந்ததற்கான காரணம் சிவராஜ்தான் என எழுதிவைக்கப்பட்ட கடிதம் இருந்தது கண்டறியப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் 4 கோவில்களில் அபூர்வ கோலத்துடன் காட்சி தரும் 4 தெய்வங்கள் : மேலக்கடம்பூர் சிவாலயத்தில் சனி பகவான் கருட வாகனத்துடன் காட்சி தருகிறார். திருவதிகையில் நரசிம்மர் சயன கோலத்தில் காட்சி தருகிறார். சிவபுரியில் நாய் வாகனம் இல்லாமல், 27 மண்டை ஓட்டுடன் காட்சி தருகிறார். வேலுடையான்பட்டில் முருகன் வில்லும் அம்பும் ஏந்தி காட்சி தருகிறார்.
கடலூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு மருத்துவ சேவை நிலையங்களில் பணிபுரிய மருத்துவ அலுவலர், பல்நோக்கு சுகாதார மேற்பார்வையாளர், செவிலியர் அடிப்படை பணியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு 16 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு இங்கே <
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு 4 கோபுர வாசல்கள் உண்டு. இவ்வழியாக சமயக்குரவர்கள் நால்வர் வந்து வழிபட்ட சிறப்பு இந்த கோயிலுக்கு உண்டு. கிழக்கு வாசல் வழியாக மாணிக்கவாசகரும், மேற்கு வாசல் வழியாக அப்பரடிகளும், வடக்கு கோபுர வாசல் வழியாக சுந்தரரும், தெற்கு கோபுர வாசல் வழியாக ஞானசம்பந்தரும் நுழைந்து சிதம்பரம் நடராஜப் பெருமானை வழிபட்டனர்கள். இதுவே சிதம்பர கோபுர ரகசியமாகும். பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..
கடலூர், கேப்பர் மலை மத்தியச் சிறைச்சாலை 1865ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் ராணுவத் தளபதி பிரான்சிஸ் கேப்பரால் உருவாக்கப்பட்டது. சுமார் 180 ஏக்கர் பரப்பளவுள்ள திறந்த வெளிச் சிறைச்சாலையாக உள்ள இது தமிழ்நாட்டின் மிகப் பெரிய சிறச்சாலையாகும். உங்கள் ஊரில் உள்ள பெருமை வாய்ந்த இடங்களை கமெண்ட் பண்ணுங்க.. தெரியாதவங்களுக்கு உங்க ஊர் பெருமையை SHARE பண்ணுங்க..
தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் சண்முகம் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி உட்பட கிராம மக்கள், மலையடிக்குப்பம் பகுதியில் அதிகாரிகள் அகற்றிய முந்திரி மரங்கள் இருந்த அதே இடத்தில் மீண்டும் முந்திரிக் கன்றுகளை நடும் போராட்டத்தில் ஈடுபட வந்தனர். பின், தடையை மீறி, முந்திரிக் கன்றுகளை நட முயன்ற பெண்கள் உள்ளிட்ட 125 பேரை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.