India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திட்டக்குடி, கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் கரைகள் மற்றும் வாய்க்கால்களை சீரமைக்க ரூ.130 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாணை பிறப்பித்துள்ளார். இதன் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் நிலையில், நீர்த்தேக்க கரைகள், முதன்மை மற்றும் உபரி கால்வாய்கள் புனரமைக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கை திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகா விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனை, நர்சிங் கல்லூரி மாணவிகள் சென்னையில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் 11 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்று சாதனை படைத்தனர். அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் நடராஜன், நர்சிங் கல்லூரி முதல்வர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவிகளைப் பாராட்டினர்.
கடலூர் மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போட வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மின்துறை கோட்ட அலுவலகத்தில், இன்று (செப்.11) காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர் முகாம் நடக்கிறது. இதில், விருத்தாசலம் கோட்ட அலுவலகத்தைச் சேர்ந்த உட் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள், மின்துறை சம்பந்தமாக குறைகளைக் கூறி நிவர்த்தி பெறலாம் என கோட்ட செயற்பொறியாளர் சுகன்யா தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று நடைபெற உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (11/09/2025) சிதம்பரம் செங்குந்தர் திருமண மண்டபம்; வரக்கால்பட்டு அபிராமி திருமண மண்டபம்; எய்யலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி; உச்சிமேடு சமுதாய நலக்கூடம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வரும் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு லயன் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து பயன்பெறுங்க.
கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் மாவட்டம் நாணமேடு பகுதியில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, தென்பெண்ணை ஆற்றின் கரைகள் பலப்படுத்துவது குறித்து இன்று (செப்டம்பர் 10) புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் இன்று (10.9.2025) கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என கூறினார்.
கடலூர், திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில், கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கிட முகாம் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் இன்று (10.09.2025) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் உள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடலூர் மாவட்டம் மிக முக்கிய நகரமாக இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக கடலூர் மாவட்டம் தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து 1993-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. தற்பொழுது கடலூர் மாவட்டம் 9 சட்டமன்ற தொகுதிகள், 2 நாடாளுமன்ற தொகுதிகள், 3 கோட்டங்கள், 10 தாலுகாக்கள், 32 உள்வட்டம் மற்றும் 883 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
Sorry, no posts matched your criteria.