Cuddalore

News May 7, 2025

கடலூர்: பதக்கங்களை குவிக்கும் 13 வயது மாணவி

image

கடலுாரைச் சேர்ந்த 13வயது மாணவி யாழினி, டேக்வாண்டோ போட்டிகளில் பல்வேறு நிலைகளில் பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளார். மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் மாணவி யாழினி, புனித மரியன்னை பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மாநில அளவிலான போட்டிகளில் இதுவரை ஒன்பது முறை பங்கேற்று 6 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

News May 7, 2025

கடலூர்: 10th பாஸ் போதும்.. அரசு வேலை ரெடி

image

மத்திய அரசின் ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் காலியாக உள்ள Seaman, Greaser, Tradesman போன்ற 14 குரூப்-சி காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.18000 முதல் ரூ.56900 வரை வழங்கப்படும். 10 th, ஐ.டி.ஐ முடித்த 18 – 25 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு www.cbic.gov.in என்ற இணையத்தை பார்க்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE செய்யவும்!

News May 7, 2025

கடலூர்: தரமற்ற உணவு குறித்து இனி எளிதாக புகார் அளிக்கலாம்

image

உணவகம், பேக்கரிகளில் உள்ள தரமற்ற உணவு குறித்து மக்கள் புகார் அளிக்க ‘TN FOOD SAFETY CONSUMER’ எனும் செயலியை அரசு வெளியிட்டுள்ளது. இந்த செயலியின் மூலமாக கலப்படம், தரமற்ற உணவு குறித்து டைப் ஏதும் செய்யமால் மிக எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்தில் உணவு பாதுகாப்பு துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்!

News May 7, 2025

பண்ருட்டி: திருமணமான 9-ஆவது மாதத்தில் இளைஞர் விபத்தில் பலி

image

பண்ருட்டி பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் (27). இவருடைய மனைவி ஜெனிதா (19). இவர்களுக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆகிறது. இவர் நேற்று ராசாப்பாளைம் -கட்டமுத்துப்பாளையம் சாலையில் டூவீலரில் சென்றபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த தினேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News May 7, 2025

கடலூர்: மீனவர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் வரும் 14.5.2025 அன்று மீன்வளத்துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. அதனால் மீனவர்கள் தங்காள் படகுகளுக்கு பச்சை வர்ணம் பூசி, படகின் பதிவு எண்ணை தெளிவாக எழுதி ஆய்வுக்கு கட்டாயம் உட்படுத்த வேண்டும். ஆய்வுக்கு உட்படுத்தப்படாத மீன்பிடி விசைப்படகுகளுக்கான மானியம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News May 7, 2025

கடலூர்: ரூ.49,000 சம்பளத்தில் பேங்க் வேலை

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான யூனியன் வங்கியில் உதவி மேனேஜர் பதவிக்கான 500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் பட்டப்படிப்புடன் கூடிய CA/CS/CMA முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். 22 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் www.unionbankofindia.co.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பேங்க் வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்!

News May 7, 2025

கடலூரில் எஸ்.ஐ., தேர்வுக்கு இலவச பயிற்சி

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் 1,299 சார்பு ஆய்வாளர் காலி பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதனை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் அலுவலகம் வளாகத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் 1.5.2025 அன்று இலவச பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9940056641, 9840789750, 9498152944 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். அரசு வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க

News May 7, 2025

கடலூரில் எஸ்.ஐ., தேர்வுக்கு இலவச பயிற்சி

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் 1,299 சார்பு ஆய்வாளர் காலி பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதனை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் அலுவலகம் வளாகத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் 1.5.2025 அன்று இலவச பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9940056641, 9840789750, 9498152944 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். அரசு வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 30, 2025

அட்சய திருதியை: செல்வம் பெருக இந்த கோயிலுக்கு போங்க

image

கடலூர், இன்று அட்சயதிருதியை முன்னிட்டு செல்வம் பெருக வழிபட வேண்டிய கோயில்கள்: 1.சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள மகாலட்சுமி, 2.திருவந்திபுரம் பெருமாள் கோயிலில் உள்ள வைகுண்ட நாயகி, 3.சேந்திரக்கிள்ளை லட்சுமி குபேரர், 4.குறிஞ்சிப்பாடி பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் உள்ள செங்கமல வல்லி தாயார், 5.பரங்கிப்பேட்டை வரதராஜ பெருமாள். நேரம் கிடைத்தால் சென்று வாருங்கள். பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 30, 2025

கடலூரில் மதுபான கடைகளை மூட வேண்டும் – ஆட்சியர் அறிவிப்பு

image

தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி ஒரு நாள் கடலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து FL-1 மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மதுபானக்கூடங்கள், FL-2 / FL-3 உரிமம் பெற்று இயங்கும் மனமகிழ் மன்றங்களை மூட வேண்டும். அதை மீறி கடைகளை திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!