India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தொழிற்கல்வி மட்டப் படிப்பு முடித்தவர்கள், 45 வயது குட்பட்டவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரில் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி கதிரவன் (32). இவர் நேற்று மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது, இரும்பு டேப் மூலம் அளவீடு செய்தார். அப்போது அந்த மாடியின் அருகில் சென்ற மின் கம்பியில், அந்த இரும்பு டேப் பட்டதில் கதிரவன் மின்சாரம் தாக்கி பலியானார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

கடலூர் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வாகன திருட்டு தொடர்பாக தணிக்கை மேற்கொண்டனர். அப்போது மேல் பூவானி குப்பத்தை சேர்ந்த வேல்முருகன் (27), என்பவரை விசாரணை செய்ததில் புதுச்சத்திரம், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, வடலூர், உள்ளிட்ட இடங்களில் திருடிய 11 இருசக்கர வாகனம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்து நேற்று கைது செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் வருகிற நவ.1-ம் தேதி உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு, காலை 11 மணியளவில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இதில் ஊராட்சியின் நிதி செலவீனம், தணிக்கை அறிக்கை உள்ளிட்டவற்றை விவாதிக்க வேண்டும் என்றும், அனைத்து பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.28) இரவு 10 மணி முதல் இன்று (அக்.28) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்!

கடலூர் மாவட்டத்தில் கவுரவ நிதிஉதவி பெறும் விவசாயிகளில் இதுவரை 62,095 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 17,374 பேர் தனித்துவ அடையாள அட்டை பெறாமல் உள்ளனர். நவம்பர் 2025ம் மாத தொடக்கத்தில், 21-வது தவணை பெறுவதற்கு, விவசாயிகள் விரைவாக தனித்துவ விவசாய அடையாள அட்டைப் பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் பெண் ஒருவர் தனது காலனி மற்றும் கைப்பையை கரையில் வைத்துவிட்டு, திடீரென்று கடலில் இறங்கினார். சிறிது நேரத்தில் அலையில் சிக்கிய அந்தப் பெண் மீண்டும் கரைக்கு வரவில்லை. அதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து தேவனாம்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் வருகிற நவ.1ஆம் தேதி உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு, காலை 11 மணியளவில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியஎ சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஊராட்சியின் நிதி செலவீனம், தணிக்கை அறிக்கை உள்ளிட்டவற்றை விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதில், ஊராட்சி உள்ள அனைத்து பொதுமக்களும் இதில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் பெண் ஒருவர் தனது காலனி மற்றும் கைப்பையை கரையில் வைத்துவிட்டு, திடீரென்று கடலில் இறங்கினார். சிறிது நேரத்தில் அலையில் சிக்கிய அந்தப் பெண் மீண்டும் கரைக்கு வரவில்லை. அதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து தேவனாம்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.