India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் ஆலயத்தின் நான்கு திசைகளிலும் எல்லை தெய்வமாக நான்கு அம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. அவை எது தெரியுமா? கிழக்கு:-கீழத்தெரு மாரியம்மான், மேற்கு:-எல்லையம்மன், வடக்கு:-தில்லைக்காளி, தெற்கு:-வெள்ளந்தாங்கி அம்மன். நான்கு கோயில்களும் சிதம்பரத்தில் மிகப் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் ஆகும். அங்கு வெள்ளிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..
கடலுார் மாவட்டத்தில், கிராம சபை கூட்டம், நாளை (29ஆம் தேதி) காலை 11 மணிக்கு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடக்கிறது. கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றியும், மதசார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தாமல் பொதுவான இடங்களில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்கும் வகையில் நடத்த வேண்டும் என்று கடலூர் ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் சைபர் குற்றங்களில் சிக்காமல் இருக்க அவரவர்களது வங்கி கணக்கு விபரங்களையோ மற்றும் செல்போன் எண், ஆதார் எண், ஓட்டுநர் உரிமம் போன்ற அரசு ஆதாரங்களையோ, சுய விபரங்களையோ முகம் தெரியாத நபர்களிடம் பகிர வேண்டாம். மேலும் சைபர் குற்றவாளிகளிடமிருந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோயிலில் சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய நிகழ்வு, ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று அந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த சூரிய உதய பூஜையில் பங்கேற்று, தரிசனம் செய்தால் பல்வேறு தோஷங்கள் நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் மேற்கொண்டனர். பாலமுருகன் அருள் பெற பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..
தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 98 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.28) காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் இன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார். SHARE பண்ணுங்க.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி மைக்ரோ பயாலஜி படிக்கும் மாணவி தர்ஷினி இன்று (மார்ச்.27) மாலை கல்லூரி முடிந்ததும் அரசு பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். இந்நிலையில் கடலூர் பீச் சாலை தீயணைப்பு நிலையம் அருகே பேருந்தில் இருந்து மாணவி இறங்க முயன்றபோது, ஓட்டுனர் கவனக்குறைவுடன் பேருந்தை இயக்கியதில் மாணவி தர்ஷினி தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
கடலூர் மாவட்டத்தில் கட்டாயம் செல்ல வேண்டிய 8 சிவாலயங்கள்! 1.சிதம்பரம் நடராஜர் கோவில், 2.கடலூர் பாடலீஸ்வரர் கோவில், 3.விருத்தாசலம்: விருதகிரீஸ்வரர் கோவில், 4.மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், 5.புவனகிரி வேதபுரீஸ்வரர் கோவில், 6.பரங்கிப்பேட்டை ஆதிமூலேசுவரர் கோவில், 7.திட்டக்குடி வைத்தியநாதர் கோவில், 8.தீர்த்தனகிரி சிவ சிவக்கொழுந்தீசுவரர் கோவில். மறக்காமல் இதை உங்களது நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
ஊரகப் பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் (SHGs), ஊராட்சி, வட்டார மற்றும் நகர அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மாநில மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருது பெற கடலூர் மகளிர் திட்ட இணை இயக்குநர், பூமாலை வணிக வளாகம் முதல் மாடி, 607001 என்ற முகவரிக்கு 30.4.2025-க்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE NOW
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரம்மாண்டமாக இருக்கும் ஆயிரக்கால் மண்டபத்தில் எவ்வளவு ரகசியங்கள் ஒளிந்திருக்கிறது தெரியுமா? இந்த மண்டபத்தில் தான் பதஞ்சலி முனிவர், பதஞ்சலி பத்ததி என்னும் நூலை இயற்றினார். இம்மண்டபத்தில் திருவாசகத்தைப் பாடிய போது இறைவனே அவர் பக்கத்திலிருந்து பிரதி எடுத்தார். பெரியபுராணம் அரங்கேறியது இங்குதான். மார்கழி, ஆணி, இரு திருவிழாக்களிலும் மகா அபிஷேகம் நடைபெறும்.
Sorry, no posts matched your criteria.