Cuddalore

News September 12, 2025

கடலூர் மக்களே… தேர்வு இல்லாமல் வங்கியில் வேலை!

image

கடலூர் மக்களே… SBI வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு BE, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க.

News September 12, 2025

கடலூரில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக போஸ்டர்

image

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு நகர செயலாளர் தனசேகரன் என்வர் நகரம் முழுவதும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி உள்ளார்‌. போஸ்டரில் “பூனைக்கு மணி கட்டுவது யார்” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. மேலும் செங்கோட்டையன் கருத்தைப் வரவேற்பதாகவும் அதில், குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கடலூர் அதிமுக அரசியல் வட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News September 12, 2025

போலீஸ் ஸ்டேஷன் எதிரில் வாலிபர் தற்கொலை முயற்சி

image

சிதம்பரம் அடுத்த கிள்ளை பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார் இவர், நேற்று(செப்.11) சிதம்பரம் நகர போலீஸ் ஸ்டேஷன் எதிரே நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தனது மீது ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின் அஜித்குமாரை மீட்ட போலீசார் விசாரணை நடத்தியதில், குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை முயன்றது தெரிய வந்தது. இதை அடுத்த அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

News September 12, 2025

கடலூர்: பாம்பு கடித்து பள்ளி மாணவன் பலி

image

வேப்பூர் அடுத்த தீவலூரை சேர்ந்தவர் சுதாகர் மகன் சுனில் கண்ணன் (15). அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் சுனில் கண்ணன் வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது வலது காதில் பாம்பு கடித்தது. இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுனில் கண்ணன் நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News September 12, 2025

கடலூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று (செப்.12) கடலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News September 12, 2025

கடலூர்: ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு

image

கடலூர் மக்களே, இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள Officers பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கி வேலைக்கு செல்ல ஆசை உள்ளவர்கள், உடனே Register பண்ணுங்க!
⏩ துறை: மத்திய அரசு
⏩ தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
⏩ மாத சம்பளம்: ரூ. 78,450/-
⏩ மொத்தம் பணியிடங்கள்: 120
⏩ வயது வரம்பு: 21-30
⏩ கடைசி தேதி: 30.09.2025
⏩இணைய வழியில் விண்ணப்பிக்க: <>Click Here<<>>
⏩ இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 12, 2025

கடலூர் அருகே மின்னல் தாக்கி பெண் பலி

image

கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த அத்தியநல்லூரை சேர்ந்தவர் ஆதிமூலம் மனைவி சுந்தரி (50). இவர் நேற்று மாலை 5 மணி அளவில் அத்தியநல்லூர் காசி விஸ்வநாதர் கோயில் அருகே தனது மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இடி மின்னலுடன் மழை பெய்த போது, மின்னல் தாக்கியதில் சுந்தரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News September 12, 2025

கடலூரில் இன்று சிறப்பு கல்விக் கடன் முகாம்

image

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்கிட கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை (செப் 12) கடலூர், கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் கல்விக்கடன் கோரும் மாணவ, மாணவியர்கள்<> http//www.vidyalakshmi.co.in/students<<>> என்ற இணையவழி மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 12, 2025

பண்ருட்டி: பாலம் கட்டும் பணியை ஆட்சியர் ஆய்வு

image

கடலூர் மாவட்டம், பண்ருட்டி மலட்டாற்றின் குறுக்கே நபார்டு நிதியின் கீழ் ரூ.8.13 கோடி மதிப்பீட்டில் திருவாமூர்-சோமாசிப்பாளையம் சாலையில் இணைப்பு உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை நிறைந்தது மனம் திட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (11.09.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

News September 11, 2025

கடலூர்: இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (செப்.11) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW !

error: Content is protected !!