Cuddalore

News July 6, 2025

குறிஞ்சிப்பாடியில் மேலும் ஒரு சில பள்ளிகளுக்கு விடுமுறை

image

குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை (ஜூலை 7) ஆம் தேதி குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ச.கு.வே மேல்நிலைப் பள்ளி, அருணாச்சலா பதின்ம மேல்நிலைப்பள்ளி, செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீ ராம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 6, 2025

கடலூரில் உள்ள காசிக்கு நிகரான கோயில்

image

கடலூரில் உள்ள பாடலீஸ்வரர் கோயில் தேவார பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் 18ஆவது தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காசியில் 16 முறை இறைவனை வணங்குவதும், இங்கு ஒரு முறை வணங்குவதும் சமம் என நம்பப்படுகிறது. திருவண்ணாமலையில் 8 முறையும், சிதம்பரத்தில் 3 முறையும், இத்தலத்தில் ஒருமுறையும் வணங்குவது சிறப்பாகும். தெரியாத உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க !

News July 6, 2025

கடலூர்: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை

image

கடலூர் மக்களே! தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

News July 6, 2025

கடலூர்: விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்

image

மத்திய அரசின் ‘கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் முதலீடு செய்தால் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள 18 – 40 வயதுடைய விவசாயிகள், உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News July 6, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று விண்ணப்பம் வழங்கும் பணி திங்கள்கிழமை (ஜூலை.7) முதல் தொடங்க உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வரும் 15-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

News July 6, 2025

கடலூர்: ரூ.85,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

image

IBPS வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் உள்ள IT Officer (203), Marketing Officer (350) உட்பட ‘1007’ காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ. 48,480-ரூ.85,920 வரை வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News July 6, 2025

சிங்கிரிகுடி: கஞ்சா விற்ற இளைஞர் கைது

image

ரெட்டிச்சாவடி போலீஸ் எஸ்.ஐ. எழிலரசி மற்றும் போலீசார் நேற்று சிங்கிரிகுடி கோயில் அருகில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த புதுச்சேரி மாநிலம் நோனாங்குப்பம் புதுகாலனியை சேர்ந்த செல்வவிநாயகம் மகன் சந்தோஷ் (29) என்பவரை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

News July 6, 2025

கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் தொலைபேசி எண்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (05/07/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 5, 2025

கடலூர்: வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை!

image

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாகியும், தொடர்ந்து பதிவை புதுப்பித்து வரும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்கும் இளைஞர்கள் கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இதில், 3 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும். இதனை அனைவருக்கும் SHARE செய்யவும்.!

News July 5, 2025

கடலூரில் சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி..!

image

கடலூர் மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் (அ) அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் தகவலுக்கு மாவட்ட தொழில் மையத்தை (04142- 290116) தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க

error: Content is protected !!