India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மக்களே, Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
✅பணி: Specialist Officer
✅கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
✅சம்பளம்: ரூ.64,820
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅வயது வரம்பு: 24 முதல் 40 வரை
✅கடைசி தேதி: 03.10.2025
✅இத்தகவலை இப்போதே உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
ஆண்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அபிநயா(25). இவர் தனது குழந்தைகள் அனித்ரா(4), ஆதிரன்(1) ஆகியோரை மொபட்டில் ஏற்றிக்கொண்டு விக்கிரவாண்டி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று, முன்னாள் சென்ற டூவீலர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய டூவீலர் அபிநயாவின் மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி அனித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள்.
கடலூர் மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இங்கே <
நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்தவர் கணேசன் மனைவி சந்திரகலா (40). முன்விரோதம் காரணமாக இவரது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய 8 பேர் மீது நெய்வேலி போலீசார் வழக்கு பதிந்து 4 பேரை ஏற்கனவே கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய ராஜதுரையை (20) நேற்று போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர், தப்பி ஓடிய போது தவறி விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ராஜதுரைக்கு மாவுகட்டு போடப்பட்டுள்ளது.
கடலூர் மாநகராட்சி ஆணையர் அனு 128 நாட்கள் ஈட்டிய விடுப்பில் செல்கிறார். இதனால் அவருக்கு பதிலாக கடலூர் மாநகராட்சியின் கமிஷனராக, நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் முஜிபுர் ரகுமான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதன் ரெட்டி பிறப்பித்துள்ளார். இந்நிலையில் முஜிபுர் ரகுமான் விரைவில் கடலூர் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்க உள்ளார். SHARE NOW!
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(செப்.13) இரவு 10 மணி முதல் இன்று (செப்.14) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் அடுத்த கீழ்செங்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் தேவி (19). இவருக்கு திருமணமாகி 1 வருடம் ஆகிறது. இந்நிலையில், தேவி அதே பகுதியில் உள்ள தனது அண்ணன் தேசிங்குராஜன் வீட்டில் படுத்திருந்த போது, விஷ பூச்சி கடித்துள்ளது. பின்னர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தேவி, நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ரெட்டிச்சாவடி அடுத்த கீழ்குமாரமங்கலத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (36). குடிப்பழக்கம் உடைய இவர், மதுகுடிக்க தனது மனைவி சிவமதியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த ஆனந்தராஜ் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் இன்று (செப்.13) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கடலூர் மாவட்ட காவல் அலுவலர்களுக்கு எஸ்பி அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், இன்று (செப்.13) காலை நிலவரப்படி கடலூரில் 37.4 மி.மீ, பண்ருட்டி 34 மி.மீ, சிதம்பரம் 21 மி.மீ, புவனகிரி 15 மி.மீ, விருத்தாசலம் 10 மி.மீ, சேத்தியாத்தோப்பு 7 மி.மீ, பரங்கிப்பேட்டை 6 மி.மீ மற்றும் காட்டுமன்னார்கோவிலில் 2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.