India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டம், பி.முட்லூரில் அமைந்துள்ள மகா கைலாயம் கோயிலில் சகஸ்ரலிங்கம், ராஜராஜேஸ்வரி, விநாயகர் என அனைத்து தெய்வங்களுக்கும் தனி சன்னதிகள் இருந்தாலும், தமிழ்நாட்டில் எமனுக்கு என்று தனி சன்னதி அமைந்துள்ள கோயில் இதுவே என்பது இதன் சிறப்பம்சமாகும். தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்கள் எமனை வழிபட்டால் மனநிலையில் மாற்றம் ஏற்படும் என்பது நம்பிக்கையாக உள்ளது. உங்க நண்பர்களுக்கு மறக்காம இதை SHARE பண்ணுங்க!
தேசியத் தலைநகர் பிராந்தியப் போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 9 பதவிகளின் கீழ் 72 காலிப்பணிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிப்ளமோ, ஐடிஐ & பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.18,250 முதல் 75,850 வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஏப்.24-க்குள் (நாளை) https://ncrtc.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE செய்யவும்!
கோடையில் சொந்த ஊர் செல்லும் பயணிகள் நலன் கருதி, நெரிசலை குறைக்கும் வகையில் கடலூர், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து ஏப்.29ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அதிகாலை 5:35 மணிக்கு இந்த சிறப்பு ரயில் புறப்பட்டு பகல் 12:30க்கு தாம்பரத்தை அடையும். ஷேர் பண்ணுங்க.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 222 அங்கன்வாடி பணியிடங்கள், 3 குறு அங்கன்வாடி பணியிடங்கள் மற்றும் 243 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை இங்கே <
காடாம்புலியூர் உதவி ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் போலீசார் நேற்று வேலன்குப்பம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணிகண்டன், விக்ரம், சந்தானபிரபு ஆகிய 3 பேரை சோதனை செய்தபோது அவர்களிடம் பிளாஸ்டிக் துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் முயல், எலி, காட்டு பன்றிகளை வேட்டையாட யூடியூபில் பார்த்து தயாரிக்கப்பட்டது எனக் கூறினர். உடனே 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை அடுத்த சிறுவம்பாரில் கடந்த 1997ஆம் ஆண்டு ஏற்பட்ட இருதரப்பினர் மோதலில் கைதான அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி அரசு (47) என்பவர் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் விருத்தாசலம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் அவர் மீது நீதிமன்ற பிடியாணை நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அரசை நேற்று மங்கலம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்மருக்கு கடலூரில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒருசில இடங்கள் இருக்கின்றது. அதில் மிக முக்கியமான இடங்களாக இருப்பவை: சாமியார் பேட்டை கடற்கரை, புனித டேவிட் கோட்டை, பிச்சாவரம் காடுகள், தேவநாதசுவாமி கோயில், புகழ்பெற்ற சில்வர் பீச், குடிநீர் ஆதாராமாக விளங்கும் வீராணம் ஏரி, திருவேந்திபுரம் கோவில் , பாடலீஸ்வரர் கோயில் ஆகியவை ஆகும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணி இங்கெல்லாம் போலாம்னு கூப்பிடுங்க..
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 25.4.2025 அன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
உங்கள் பகுதியில் ஏதேனும் தீ விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தொடர்பு கொள்ளவும். ▶ நிலைய அலுவலர் குமராட்சி – 04144-296201, ▶ நெல்லிக்குப்பம் – 04142-272399, ▶ பண்ருட்டி- 04142-242100, ▶முத்தாண்டிகுப்பம் – 04142-266166, ▶குறிஞ்சிப்பாடி- 04142-258370, ▶ விருத்தாசலம்- 04143-238701, ▶ மங்களம்பேட்டை- 04143-244360, ▶வேப்பூர்-04143-241229. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் 25.4.2025 முதல் 15.5.2025 வரை கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் நடைபெறுகிறது. எனவே இப்பயிற்சி முகாமில் 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் நேரில் வந்து கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..
Sorry, no posts matched your criteria.