India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புவனகிரி அருகே சாக்காங்குடி சேர்ந்தவர் அருண்ராஜ(34). இவர் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு, வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு, குடிபோதையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அருண்ராஜை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நிலஅளவைப் பதிவேடுகள் துறை உதவி இயக்குநரின் அலுவலகப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட கழிவு செய்யப்பட்ட வாகனம் நவ.14ம் தேதி அன்று ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் விடப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஏலத்தில் கலந்து கொள்கிறவர்கள் 10% பிணையத்தொகை வரைவோலையாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருத்தாசலம் வட்டம், முதனை பெரியாண்டவர் கோயில் அருகில் உள்ள மயானத்தில் புதருக்குள் நேற்று (நவ.1) அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்ததுள்ளது. இதனை கண்ட கிராம மக்கள் ஊ.மங்களம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் (01.11.2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஐபிஎஸ், கடலூர் மாவட்டம் கோண்டூர் அருகே இரண்டு வாகனங்கள் மோதி 3 நபர்கள் உயிரிழந்த சம்பவ இடத்தினை, இன்று நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு காவல் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். உடன் காவல் துறையினர் உள்ளனர்.

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <

கடலூர் மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு கிளிக் செய்து நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.

பண்ருட்டியை சேர்ந்தவர் கார்த்தி (31). கடந்த 2013-ம் ஆண்டு திருட்டு வழக்கில் கைதான கார்த்தி, ஜாமீனில் வந்தார். பிறகு வழக்கு விசாரணைக்கு பண்ருட்டி கோர்ட்டில் ஆஜராகாமல் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். எனவே அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பண்ருட்டி போலீசார், அவரை தேடி வந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கம்மசெட்டி சத்திரத்தில் வசித்த கார்த்தியை நேற்று போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள மீன் குட்டையில் நேற்று சிலர், வலைவீசி மீன் பிடித்தனர். அப்போது குட்டைக்குள் முதலை ஒன்று கிடந்ததை பார்த்த அவர்கள், சிதம்பரம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து வலைவீசி, அந்த முதலையை பிடித்தனர். பிடிபட்ட சுமார் 7 அடி நீளமுடைய முதலை ஆகும். பின்னர் அது வக்காரமாரி ஏரியில் விடப்பட்டது.

கடலூர் மாவட்டம், முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அருள்மணி மனைவி ஜனனி (வயது 21). இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் நேற்று இரவு முத்துகிருஷ்ணாபுரத்தில் உள்ள வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.