Cuddalore

News July 9, 2025

கடலூர்: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய விஸ்வேஷ்

image

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் நேற்று நடைபெற்ற ரயில் விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், செம்மங்குப்பம் ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மாணவர் விஸ்வேஷ் வீடு திரும்பினார். ரயில் விபத்தில் அவரது சகோதரர் நிமலேஷ் உயிரிழந்த நிலையில், இன்று அவர் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

News July 9, 2025

கடலூர்; 10th முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை

image

கடலூர் மாவட்ட மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு, 10,12, ஐடிஐ முடித்தவர்கள் <>https://www.rrbapply.gov.in<<>> என்ற இணையம் மூலம் ஜூலை 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை சம்பளம்m வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உடனே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News July 9, 2025

செம்மங்குப்பம்: புதிய கேட் கீப்பர் நியமனம்

image

கடலூர் அருகே செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் என்பவர் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ளார். முன்னதாக ரயில்வே விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அவருக்கு அறிவுறுத்தியதாக ஆனந்தராஜ் தகவல் தெரிவித்துள்ளார். மொழி தெரியாதவரை தமிழகத்தில் பணியமர்த்தியது சர்ச்சையான நிலையில், தற்போது தமிழகத்தை சேர்ந்த நபர் புதிய கேட் கீப்பராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

News July 9, 2025

கடலூர் ரயில் விபத்து : விசாரணையில் பகீர் தகவல்

image

கடலூர் அருகே நேற்று பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் இதுபோல 5-க்கும் மேற்பட்ட முறை ரயில்வே கேட்டை திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளதாகவும், பணி நேரத்தில் தூங்குவதையே அவர் வழக்கமாக வைத்திருந்ததாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

News July 9, 2025

கடலூர்: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை !

image

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இதற்கு B.E / ஐடிஐ / டிப்ளமோ முடித்தவர்கள் வரும் ஜூலை.12-க்குள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு சிதம்பரத்தில் வரும் ஜூலை.31 அன்று நடைபெற உள்ளது. இந்த தகவலை உங்க நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News July 9, 2025

கடலூர்: ரயில்வே கேட் கீப்பருக்கு சிறை

image

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் நேற்று (ஜூலை 08) காலை தண்டவாளத்தை கடந்த பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரயில் மோதி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் செம்மங்குப்பம் ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை நேற்று கைது செய்த போலீசார், அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிதம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News July 9, 2025

கடலூர்: விபத்தில் பறிபோன 3 உயிர்கள்

image

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் நேற்று (ஜூலை 8) செவ்வாய்க்கிழமை நான் எங்க போட்டோ காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாணவி சாருமதி, மாணவர்கள் செழியன் (15) மற்றும் நிமலேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்தவர்கள் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News July 8, 2025

கடலூர் விபத்து: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

image

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். ரயில் விபத்தில் உயிரிழந்த சுப்ரமணியபுரம் பகுதியைச் சார்ந்த திராவிடமணி என்பவரது மகள் சாருமதி மற்றும் அவரது மகன் செழியன் ஆகியோரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கண்ணீர் மல்க கலந்து கொண்டனர்.

News July 8, 2025

கடலூர்: வேலை வேண்டுமா? இந்த கோயிலுக்கு போங்க

image

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள நகராமலை கிராமத்தில் அகஸ்திய மகரிஷி பூஜை செய்த, சிறப்பு வாய்ந்த கோயிலாக கருதப்படும் அகஸ்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரதோஷ தினத்தில் பிரார்த்தனை செய்தால் தங்களது மனதுக்கு பிடித்த வேலை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு பகிரவும்.

News July 8, 2025

கடலூர்: 3 ரயில்கள் பகுதியளவு ரத்து – தெற்கு ரயில்வே

image

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் விபத்து நடந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடையாததால் 3 ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மைசூர் – கடலூர் போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் புதுச்சத்திரம் வரையும், தாம்பரம் – திருச்சி ரயில் சிதம்பரம் வரையும், திருவாரூர் மயிலாடுதுறை பயணிகள் ரயில் ஆலப்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

error: Content is protected !!