Cuddalore

News March 29, 2025

கடலூரில் ஆங்கிலேயர் கட்டிய அதிசய கோயில்

image

சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் பகுதியில் உள்ள குட்டியாண்டவர் கோயில் “பேஸ்பரங்கி” என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்ட ஒரு கோயிலாகும். இந்த ஆலயத்தின் கருவறையில் சிலை கிடையாது. 3 ஆணிகள் மட்டுமே மூலவராக உள்ளது. அதற்கே வழிபாடு நடைபெறுகிறது. இவ்வாலயத்தில் மாதந்தோறும் பவுர்ணமி அன்று கிரிவலம் நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் சுதை சிற்பங்கள் மிகச் சிறப்பு வாய்ந்தது. ஒருமுறை சென்று வாருங்கள். SHARE பண்ணுங்க..

News March 29, 2025

கடலூர்: 19,116 மெட்ரிக் டன் உரம் இருப்பு- ஆட்சியர்

image

கடலூர் மாவட்டத்தில் தற்போது யூரியா 6,046 மெட்ரிக் டன், டி.ஏ.பி 1,406 மெட்ரிக் டன், பொட்டாஷ் 2,833 மெட்ரிக் டன்னும், காம்பளக்ஸ் உரம் 7,594 மெட்ரிக் டன்னும், சூப்பர் பாஸ்பேட் 1,237 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 19,116 மெட்ரிக் டன் உரம் இருப்பு உள்ளது. மேலும் பருப்பு வகை 55,401 மெட்ரிக் டன், நெல் விதை 1,88,214 மெட்ரிக் டன்னும் இருப்பு உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News March 28, 2025

திருநீறு பட்டையுடன் அருள்புரியும் ஆஞ்சநேயர்

image

மயிலாடுதுறையிலிருந்து 13 கி.மீ தொலைவில் திருக்குரக்காவல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குண்டலகர்ணேஸ்வரர் கோயிலில் ருத்ராட்ச மாலை அணிந்து சிவபக்த ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். சிவஅபராதம் நீங்க ஆஞ்சநேயர் இத்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம். தொழில் அபிவிருத்தி ஸ்தலமாக விளங்கும் இங்கு அமாவாசை தினங்களில் ஆஞ்சநேயருக்கு ஹோம பூஜைகள் நடைபெறுகிறது! உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்

News March 28, 2025

சிதம்பரம் நடராஜர் கோயிலின் எல்லை தெய்வங்கள் எது தெரியுமா?

image

சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் ஆலயத்தின் நான்கு திசைகளிலும் எல்லை தெய்வமாக நான்கு அம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. அவை எது தெரியுமா? கிழக்கு:-கீழத்தெரு மாரியம்மான், மேற்கு:-எல்லையம்மன், வடக்கு:-தில்லைக்காளி, தெற்கு:-வெள்ளந்தாங்கி அம்மன். நான்கு கோயில்களும் சிதம்பரத்தில் மிகப் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் ஆகும். அங்கு வெள்ளிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க.. 

News March 28, 2025

கடலூர் மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம்

image

கடலுார் மாவட்டத்தில், கிராம சபை கூட்டம், நாளை (29ஆம் தேதி) காலை 11 மணிக்கு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடக்கிறது. கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றியும், மதசார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தாமல் பொதுவான இடங்களில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்கும் வகையில் நடத்த வேண்டும் என்று கடலூர் ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News March 28, 2025

கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் அறிவுறுத்தல்

image

பொதுமக்கள் சைபர் குற்றங்களில் சிக்காமல் இருக்க அவரவர்களது வங்கி கணக்கு விபரங்களையோ மற்றும் செல்போன் எண், ஆதார் எண், ஓட்டுநர் உரிமம் போன்ற அரசு ஆதாரங்களையோ, சுய விபரங்களையோ முகம் தெரியாத நபர்களிடம் பகிர வேண்டாம். மேலும் சைபர் குற்றவாளிகளிடமிருந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

News March 28, 2025

சிதம்பரம் அருகே சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசயம் 

image

பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோயிலில் சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய நிகழ்வு, ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று அந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த சூரிய உதய பூஜையில் பங்கேற்று, தரிசனம் செய்தால் பல்வேறு தோஷங்கள் நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் மேற்கொண்டனர். பாலமுருகன் அருள் பெற பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க.. 

News March 28, 2025

கடலூர் மக்களே உஷார் – யாரும் வெளிய வராதிங்க!

image

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 98 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News March 28, 2025

கடலூரில் இன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.28) காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் இன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார். SHARE பண்ணுங்க.

News March 27, 2025

கடலூர்: அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்து மாணவி படுகாயம்

image

கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி மைக்ரோ பயாலஜி படிக்கும் மாணவி தர்ஷினி இன்று (மார்ச்.27) மாலை கல்லூரி முடிந்ததும் அரசு பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். இந்நிலையில் கடலூர் பீச் சாலை தீயணைப்பு நிலையம் அருகே பேருந்தில் இருந்து மாணவி இறங்க முயன்றபோது, ஓட்டுனர் கவனக்குறைவுடன் பேருந்தை இயக்கியதில் மாணவி தர்ஷினி தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

error: Content is protected !!