Cuddalore

News April 28, 2025

சத்துணவு மையத்தில் வேலை: கடைசி வாய்ப்பு

image

கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 320 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்க நாளை (ஏப்.29) கடைசி தேதியாகும். மற்றவர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News April 28, 2025

லிப்ட் கொடுத்து பணம் பறிப்பு: சிறுவன் உட்பட 2 பேர் கைது

image

விருதாச்சலம் அடுத்த சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த இருவர் லிப்ட் கொடுத்தனர். பாதி வழியில் இறங்கி இவரை தாக்கி பணம், செல்ஃபோனை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் நேற்று பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த சண்முகப்பிரியன் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

News April 27, 2025

கடலூர்: விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு !

image

இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 309 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Air Trafiic Controller) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பி.ஈ /பி.டெக் முடித்த பொறியியல் பட்டதாரிகள் www.aai.aero என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலைதேடும் உங்க நண்பருக்கு இதனை SHARE செய்யவும்..

News April 27, 2025

கடலூர் மாவட்ட வட்டாட்சியர் தொடர்பு எண்கள்

image

▶புவனகிரி தனி (சா.பா.தி) வட்டாட்சியர்-9786959669, ▶ஸ்ரீமுஷ்ணம்-8754915054, ▶வேப்பூர்-9543809145, ▶திட்டக்குடி-9360021593, ▶விருத்தாசலம்-9789847533, ▶காட்டுமன்னார்கோவில்-9003927728, ▶சிதம்பரம்-9444216903, ▶குறிஞ்சிப்பாடி-9486680820, ▶பண்ருட்டி-9842939371. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க..

News April 27, 2025

 அமாவாசை அன்று தரிசிக்க வேண்டிய கோயில்கள் 

image

இன்று சித்திரை மாதம் அமாவாசை என்பதால் கோயிலுக்கு செல்வது, முன்னோர் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கடலூர் மாவட்டத்தில் உள்ள அமாவாசைக்கு பிரசித்தி பெற்ற வழிபட வேண்டிய 5 கோயில்கள்: 1.சிதம்பரம் அனந்திஸ்வரர் கோயில், 2.கடலூர் பாடலீஸ்வரர் கோயில்,  3.விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோயில், 4.புவனகிரி வேதபுரீஸ்வரர் கோயில், 5.திருவக்குளம் பாசுபதீஸ்வரர் கோயில். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.. 

News April 27, 2025

வடலூர்: ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு

image

அரியலூரை சேர்ந்தவர் சசிகுமார்(40). இவர் தனது ஆட்டை நேற்று வடலூர் சந்தையில் விற்றுவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். குறவன்குப்பம் அருகில் சென்றபோது, உடல் உபாதை காரணமாக பைக்கை நிறுத்திவிட்டு அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது திருச்சி நோக்கி சென்ற பாசஞ்சர் ரயில் மோதி சசிக்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் இருப்புப்பாதை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 26, 2025

என்எல்சியை மூட வேண்டும்: அன்புமணி அறிக்கை

image

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் நீர்நிலைகளில் உள்ள தண்ணீரில் இயல்பைவிட115 மடங்கு கூடுதலாக பாதரசம் கலந்திருப்பது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே என்.எல்.சியை உடனடியாக மூட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

News April 26, 2025

கடலூர்: மாணவர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

சென்னை, கிண்டியில் உள்ள பயிற்சி நிறுவனத்தில் 2025-2026ஆம் ஆண்டிற்கான உயர்கல்விக்கான நேரடி சேர்க்கை முகாம் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் 5.5.2025 முதல் 7.5.2025 வரை நடக்கிறது. இதில் 10, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டபடிப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்கள் கலந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை 9677943633, 9677943733 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News April 26, 2025

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி- ஆட்சியர்

image

கடலூர் மாவட்டத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுபோட்டி 9.5.2025 அன்று திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் பள்ளியிலும், கல்லூரி மாணவர்களுக்கு 10.5.2025 அன்று தேவனாம்பட்டினம் அரசு கல்லூரியிலும் நடைபெறும். இதில் கலந்துகொள்ள https://tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையத்தில் 7.5.2025க்குள் பதிவு செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE!

News April 26, 2025

இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

image

கடலூர் மாவட்டம், வில்வராயநத்தத்தில் உள்ள வில்வநாதீஸ்வரர் கோயிலில் வில்வநாதீஸ்வரர், திரிபுர சுந்தரி தாயாருடன் அருள்பாலிக்கிறார். 18 மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் பெயர்ச்சியில் இன்று மாலை 4:20 மணிக்கு ராகு கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளனர். இத்தலத்தில் வழிபட்டால் ராகு, கேது தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!