India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மக்களே, உங்களது சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டாம். நீங்கள்<

சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் வாயிலாக நடைபெறும் பண மோசடி குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்ட மக்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வரும் போலி விளம்பரங்களை நம்பி, பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். (ஷேர் பண்ணுங்க)

காட்டுமன்னார்கோயில் அடுத்த பழஞ்சநல்லூரை சேர்ந்தவர் அறிவழகன் (25). இவரது மனைவி அக்ஸில்லா மேரி (24) தற்போது 3 மாத கர்ப்பமாக இருப்பதால், தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் அறிவழகனுக்கும், அவரது அம்மா மதுமதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், மனமுடைந்த அறிவழகன் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

சிதம்பரம், காந்திநகரை சேர்ந்தவர் பிரியா (38). இவர் கேஸ் அடுப்பில் சமையல் செய்த போது, அருகில் இருந்த மண்ணெண்ணெய் கேனில் திடீரென தீப்பற்றியது. அப்போது அருகில் இருந்த பிரியா மீதும் தீ பரவியது. இதில் பலத்த காயமடைந்து மீட்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக சென்னை, கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.9) இரவு 10 மணி முதல் இன்று (அக்.10) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்!

கடலூர் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் விழுப்புரம் சரக காவல்துறை தலைவர் இ.எஸ்.உமா, மாவட்டத்தில் மெச்ச தகுந்த அளவில் பணியாற்றிய 92 காவல்துறையினருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், துணை காவல் கண்காணிப்பாளர்கள் ரூபன் குமார், பாலகிருஷ்ணன், காவல் ஆய்வாளர்கள் அம்பேத்கர், கதிரவன், பார்த்தசாரதி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடலூர் இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) Executive காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடம்: சிதம்பரம் & கடலூர்
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-35
5. சம்பளம்: ரூ.30,000
6. கடைசி தேதி: 29.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2025 -26ம் கல்வி ஆண்டிற்கான வேளாண் பட்டப்படிப்பு (பி.எஸ்சி., ஹானஸ், விவசாயம்) மற்றும் தோட்டக்கலை பட்டப்படிப்பு (பி.எஸ்சி., (ஹானஸ்) தோட்டக்கலை படிப்புகளில் உள்ள காலி இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை வரும் 13ம் தேதி, காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை அரசு விதிப்படியும், இட ஒதுக்கீடு அடிப்படையில் நடக்க உள்ளது. மேலும் தகவலுக்கு www.annamalaiuniversity.ac.in

பின்னலூரை சேர்ந்த பழனிவேல் (38) என்பவர் தனது முகநூலில் விசிக தலைவரை அசிங்கமாக திட்டி, வீடியோ பதிவு செய்துள்ளார். இதனால் அந்த கிராமத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உண்டாகி, பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் பழனிவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி விசிக-வினர் புகார் அளித்தனர். அதன்பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து பழனிவேலை நேற்று கைது செய்தனர்.

கடலூர் மாவட்ட மக்களே, உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.