Cuddalore

News April 13, 2024

கடலூர்: முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக ஏப்ரல் 19ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களுக்கு வாக்குரிமை உள்ள தொகுதியில் ஓட்டுப்பதிவு நடக்கும் நாளன்று வாக்களிக்க வசதியாக சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் அளிக்க வேண்டும் என நேற்று தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News April 13, 2024

கடலூரில் மூன்றாம் கட்ட பயிற்சி

image

கடலூர் புனித வளனார் பள்ளியில் கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 227 வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த பயிற்சி கூட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாள்வது மற்றும் வாக்குச்சீட்டு முறைகளை கையாள்வது போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது இதில் 2000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

News April 13, 2024

பாம்பு கடித்து பாம்பு பிடி தன்னார்வலர் உயிரிழந்த சோகம்

image

கடலூர் மாவட்டத்தில் தீயணைப்புத்துறையினர், வீடு ஒன்றில் பாம்பு நுழைந்திருப்பதாக கிடைத்த தகவலில் சென்று பாம்பு பிடித்துள்ளனர். அதனை பாம்பு பிடி தன்னார்வலர் உமர் அலி (36) வனப்பகுதிக்குள் விடுவதற்காக டப்பாவில் அடைக்க முற்பட்டார். அப்போது பிடிபட்ட பாம்பு உமர் அலியை கடித்துள்ளது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 13, 2024

பாஜக மீது கடும் தாக்கு – திருமாவளவன்

image

சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் தொல். திருமாவளவன், அம்பேத்கர் இயற்றி தந்த அரசியலமைப்புச் சட்டத்தை ஒழிப்பது தான் மோடி அரசும் இலக்காக உள்ளது. இதனை வெளிப்படையாகவே பாஜகவை சேர்ந்த தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் பல இடங்களில் தெரிவித்து வருகின்றனர். இதை முறியடித்து சமூக நீதி காக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

News April 13, 2024

4 நாட்கள் டாஸ்மாக் மூடல்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் அனைத்தும் வரும் 17 ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நாள் 19 ஆம் தேதி மற்றும் வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4 ஆம் தேதி ஆகிய 4 நாட்கள் மூடப்படுகிறது. இதனை மீறி மதுபானம் விற்கும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென கூறப்பட்டுள்ளது.

News April 12, 2024

கடலூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (12/04/2024) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் கதிரவன், சிதம்பரம் உதவி ஆய்வாளர் பரணிதரன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சிவராமன், நெய்வேலி காவல் ஆய்வாளர் சந்திரன் மற்றும் பண்ருட்டியில் காவல் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2024

கடலூரில் உறுதிமொழி

image

கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. சாதி வேறுபாடுகள் கலைந்து சட்டத்தை வகுத்து தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க அனைவரும் பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

News April 12, 2024

கடலூரில் காவல்துறையினர் தபால் வாக்கு

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினருக்கு இன்று தபால் வாக்கு பதிவு நடத்தப்பட்டது.இதில் கடலூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தபால் வாக்கினை செலுத்தினார்.அப்பொழுது, கலெக்டர் அருண் தம்புராஜ் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா ஆகியோர் உடன் இருந்தனர்.அது மட்டும் இன்றி கடலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 810 காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்த உள்ளனர்.

News April 12, 2024

கடலூர் அருகே பேருந்து மோதி விபத்து

image

விருத்தாசலம் அடுத்த கொளஞ்சியப்பர் கோவில் அருகே உள்ள நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் கோயம்புத்தூரில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கொளஞ்சியப்பர் கோவில் அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 12, 2024

அண்ணாமலை பல்கலை பணியாளர் பதவி குறைப்பு ரத்து

image

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த 2013 இல் பணியாளர்களை அரசின் வெவ்வேறு துறைக்கு மாற்றி அமைத்தது. அதில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டதாக கூறி அவர்களுக்கு பதவி குறைப்பு, சம்பள குறைப்பு செய்து அரசு பிறப்பித்த உத்தரவுகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை பல்கலைக்கழக ஊழியர்கள் வரவேற்றுள்ளனர்.

error: Content is protected !!