India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், போக்குவரத்து ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து சங்க ஒன்றிப்பு ஊழியர்கள் இன்று ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தொழிலாளர்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் நிர்வாகம் சார்பில் பணிபுரிந்து வந்த 5 ஊழியர்களை பணி மாற்றம் செய்து தொழிற்சாலை நிர்வாகம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 5 தொழிலாளர்கள் திடீரென்று தொழிற்சாலை முன்பு 5 பணியாளர்கள் தனது சங்கத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த முதுநகர் போலீசார் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கடலூர் நகரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது இந்த வெள்ளி கடற்கரை இருப்பினும், இதனால் நகரத்திற்கு பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை. ஆசியாவின் மிக நீண்ட கடற்கரைகளில் ஒன்றாக வெள்ளி கடற்கரை விளங்குகிறது. கடற்கரைக்கு தெற்கில், தெற்கு கடலூர் ஒரு தனி தீவு போல காட்சியளிக்கும். இக்கடற்கரையில் நூற்றாண்டுக்கும் பழமையான கலங்கரைவிளக்கம் உள்ளது. மேலும் பழமையான செயின்ட் டேவிட் கோட்டை கடற்கரைக்கு அருகில் உள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது ஸ்ரீமுஷ்ணம் போலீசார் 4 பிரிவு கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை சிதம்பரம் அருகே உள்ள அக்ரி மங்கள கிராமத்தில் 19ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்களித்துவிட்டு வீடு திரும்பி அடித்து கொலை செய்யப்பட்டார்.சம்பவம் குறித்து பாஜக தலைவர் தவறான கருத்தை பதிவு செய்தார்.எதிர்ப்பு தெரிவித்து திமுக ஒன்றிய செயலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்கு

கடலூர் மாவட்ட மக்கள் வானொலி, தொலைபேசி, செய்தித்தாள் மூலமாக உள்ளூர் வானிலையை தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மோர், லஸ்ஸி, பழைய சோற்று நீர், எலுமிச்சைச் சாறு போன்ற பானங்களையும் பருக வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று மாலை தெரிவித்தார்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் வசந்த உற்சவ நிறைவு நாள் மற்றும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு இன்று பாடலீஸ்வரர் கோயில் குளத்தில் பாடலீஸ்வரருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது இதற்காக கோயில் நடை அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இன்று காலை கோயில் அருகே உள்ள தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

கடலூர் அடுத்த குப்பங்குளத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி சிம்பு சாரதி என்பவர் இன்று காலமானார். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாநகராட்சி துணை மேயரும், வழக்கறிஞருமான பா. தாமரைச்செல்வன் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் வி.சி.க கடலூர் நகர அமைப்பாளர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் சூர்யா, கிருபா, ஜெகதீஸ்வரி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

விருத்தாசலம், பெரியார் நகர் கங்கை வீதி, வாலிபால் கிரவுண்ட் காம்பவுண்டு சுவர் அருகில் நீண்ட நாட்களாக குப்பை அகற்றப்படாமல் உள்ளது. இது குறித்து பலமுறை நகராட்சியில் கூறியும், அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் நோய் தொற்றும், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையில் இருக்கிறது. உடனடியாக இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால 2-ம் கட்ட நீச்சல் வகுப்புகள், சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் கடந்த 16-ம் தேதி துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த 2-ம் கட்ட பயிற்சி வகுப்பானது வரும் 28ஆம் தேதி அன்று முடிவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருத்தாசலம் அடுத்த கோபாலபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (60). இவர் நேற்று காலை விருதாச்சலத்தில் இருந்து தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அதே திசையில் பின்னால் வந்த மகேந்திரா டிரக் பைக் மீது மோதியது. அதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.