Cuddalore

News October 13, 2025

கடலூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் காலியாக உள்ள 1096 அலுவலக உதவியாளர், ஆலோசகர், சிறப்பு கல்வியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th,12th, UG/PG, B.E/B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது குறுகிய பட்டியல் (Shortlisting)மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக் <<>>செய்யவும். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 13, 2025

கடலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் நாளை (அக்.,14) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்ரீமுஷ்ணம் வட்டம், காவனூர், காந்தி கலை நிலையம் உதவி பெறும் நடுநிலைப்பள்ளி, பண்ருட்டி நகராட்சி, திருவதிகை, எஸ்.வி திருமண மண்டபம், கடலூர், மணிப்பிள்ளை திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 13, 2025

கடலூரில் வெளுத்து வாங்கிய மழை

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (அக்.,13) காலை 8.30 மணி நிலவரப்படி கடலூர் 60.6 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 58.8 மில்லி மீட்டர், எஸ்ஆர்சி குடிதாங்கி 3 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 1.2 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் மொத்தம் 139.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 13, 2025

கடலூர்: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

image

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <>இ-பெட்டகம் <<>>என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க. (<<17990992>>பாகம்-2<<>>)

News October 13, 2025

சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்

image

E-பெட்டகம் செயலியில் தற்போது வரை ஒரு குறிப்பிட்ட அளவிலான சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். கூடிய விரைவில் அனைத்துவிதமான சான்றிதழைகளையும் இந்த E-பெட்டகம் செயலில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் 2015-ம் ஆண்டுக்கு பிறகு உள்ள சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். 2015-ம் ஆண்டுக்கு முந்தை சாற்றிதழ்களை பெற முடியாது. SHARE IT NOW

News October 13, 2025

கடலூர்: மர்ம காய்ச்சலுக்கு இளைஞர் பலி

image

சேத்தியாத்தோப்பு அருகே ஆயிப்பேட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கவுதம் (32). இவர் கடந்த சில நாட்களாக சளி, இருமல், காய்ச்சலால் அவதிபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு உடல்நிலை மோசமானது. அவர் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சுகாதார துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 13, 2025

கடலூர்: ஆசிரியையிடம் கைவரிசை

image

பண்ருட்டி அடுத்த அரசடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வனிதா (50). இவர் அரசடிகுப்பத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சத்துணவு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வனிதா காட்டுப்பாளையம் சாலையில் சென்றபோது பின் தொடர்ந்து வந்த நபர், அவர் அணிந்திருந்த 4.5 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பி சென்றார். இதுகுறித்து காடம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 13, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.12) இரவு 10 மணி முதல் இன்று (அக்.13) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News October 12, 2025

கடலூர்: ரயில்வேயில் வேலை.. சூப்பர் வாய்ப்பு

image

இந்தியா ரயில்வேயில் 368 Section Controller காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-33 (SC/ST-38, OBC-36)
5. கடைசி தேதி: 14.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
7. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 12, 2025

கடலூர்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<> eportal.incometax.gov.in <<>>என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!