Cuddalore

News February 9, 2025

கடலூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

image

கடலூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப்.14 ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு, கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்.14 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், 15-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு உள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 8, 2025

வடலூர்: 1500 காவல் துறையினர் பாதுகாப்பு பணி

image

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 1500 ற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என வடலூரில் விழுப்புரம் சரக டிஐஜி தெரிவித்துள்ளார்.

News February 8, 2025

கடலூர்: கிராம நிர்வாக அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறை

image

கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தானே புயல் கடலூர் மாவட்டத்தையே புரட்டிப்போட்டது. இதையடுத்து கிராம மக்களுக்கு அரசு புயல் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்தது. அப்போது பூங்குணம் வி.ஏ.ஓ-வாக பணிபுரிந்த சம்பத் (56) என்பவர் நிவாரண நிதியில் ரூ.4 லட்சம் முறைகேடு செய்தார். இதுகுறித்த வழக்கில் முறைகேட்டில் ஈடுபட்ட சம்பத்துக்கு 8 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம் விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

News February 7, 2025

கப்பலில் உலகை சுற்றி வரும் கடலூர் பெண்

image

கடலூரைச் சேர்ந்தவர் ரூபா. இவர் இந்திய கடற்படையில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த சக கடற்படை பெண் அதிகாரியுடன் இணைந்து, இருவரும் பாய்மர படகில் உலகை சுற்றி வருகின்றனர். இதுவரை நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா என 21,600 நாட்டிக்கல் மைல் பயணம் மேற்கொண்டுள்ளனர். இருவருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

News February 7, 2025

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை- ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ,மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தில் 28.2.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உங்களது நண்பர்களுக்கு இதனை பகிரவும்..

News February 7, 2025

கடலூர்: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது

image

கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் தொடர் கனமழை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வருகின்ற 08.02.2025 (சனிக்கிழமை) அன்று கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளும் முழு வேலைநாளாக செயல்பட வேண்டுமென கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News February 6, 2025

நீங்களும் Way2News-இல் நிருபர் ஆகலாம்!

image

உங்கள் பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? கவலை வேண்டாம், இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள் மற்றும் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிருபராக பதிவு செய்ய <>இங்கே <<>>கிளிக் செய்யவும். இதனை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.

News February 6, 2025

தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

image

நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டை சேர்ந்தவர் விவசாயி மணிகண்டன் (35). இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராமல் மரத்திலிருந்து தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்த மணிகண்டன் உயிரிழந்தார். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 5, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் கிராமங்கள், குக்கிராமங்களுக்கு பேருந்து சேவையை வழங்கும் நோக்கில் பேருந்து வசதி இல்லாத கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு மினி பேருந்து இயக்க அரசு ஆணையிட்டுள்ளது. இது தொடர்பான வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News February 5, 2025

கடலூர்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 51 பேர் கைது

image

கடலூர் மாவட்ட பாஜக சார்பில், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தைக் கண்டித்து சிதம்பரம் பேருந்து நிலையம், குமாராட்சி கடைவீதி, வேப்பூர் கூட்டுரோடு ஆகிய பகுதிகளில் நிர்வாகிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மொத்தம் 51 பேரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் விடுவித்தனர்.

error: Content is protected !!