India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலூர் அடுத்த செம்மங்குப்பத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.சரண்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (05.06.2024) இரவு 7 மணி வரையும் கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கு இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2024 மக்களவைத் தேர்தல்:
காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்- 4,55,053 வாக்குகள்
தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து- 2,69,157 வாக்குகள்
பாமக வேட்பாளர் தங்கர் பச்சான்- 2,05,244 வாக்குகள்
நாதக வேட்பாளர் மணிவாசகன்- 57,424 வாக்குகள்

கடலூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலூர் உட்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(ஜூன் 5) மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.

சிதம்பரம் மேல வீதி மற்றும் சின்ன மார்க்கெட் அண்ணா காய்கறி மார்க்கெட் பகுதிகளில் உள்ள காய்கறி கடைகளில் பச்சை மிளகாய் கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் ₹40 ரூபாய் முதல் ₹60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது கடுமையாக விலை உயர்ந்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் தேவனாம்பட்டினம் அரச பெரியார் கலை கல்லூரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிந்து திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வெற்றி பெற்ற நிலையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் அதற்கான சான்றிதழ் வழங்கினார். அருகில் தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி வெ கணேசன், திமுக மாவட்ட பொருளாளர் கதிரவன், சட்டமன்ற உறுப்பினர்கள் சபா ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் உள்ளனர்.

2024 மக்களவைத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக- காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 4,50,401 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக – தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து 2,67,707 வாக்குகளும், பாஜக – பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் 2,02,372 வாக்குகளும், நாதக வேட்பாளர் மணிவாசகன் 56,863 வாக்குகளும் பெற்று தோல்வியைத் தழுவினர்.

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 21 ஆவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் -4,50401, தேமுதிக -2,67707, பாமக -2,02372.1,82694 வாக்குக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலை

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 19ஆவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் -4,48,316, தேமுதிக -2,66,785, பாமக -2,01,480.1,81,531 வாக்குக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலை

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 19ஆவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் -4,44,802, தேமுதிக -2,64,309, பாமக -1,99,735.1,80,493 வாக்குக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலை
Sorry, no posts matched your criteria.