Cuddalore

News June 15, 2024

கடலூர் பேருந்து நிலையத்தில் இடையே பிரச்சனை

image

கடலூர் பேருந்து நிலையத்தில் நேரம் பிரச்சனை குறித்து தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர்களுடைய பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து கடலூர் பேருந்து நிலையத்தில் அரசு பணிமனை ஊழியர்கள் சிலர் இருந்துள்ளனர். அவர்களும் அரசு பேருந்து ஓட்டுனரும் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து புற காவல் நிலையத்தில் இருந்த போலீசார் சமாதானம் செய்தனர்.

News June 15, 2024

முடிவடைந்த மீன்பிடி தடைக்காலம் – கடலுக்குள் இறங்கிய மீனவர்கள்

image

மீன்பிடி தடைக்காலம் கடந்த 61 நாட்கள் கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றுடன் (ஜூன் 14) மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தது. இந்தநிலையில், இன்று அதிகாலை முதல் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். முன்னதாக, மீனவர்கள் தங்களது படகுகளுக்கு பூஜை செய்து மாலை அணிவித்து கடல் மாதாவை வணங்கி கடலுக்குள் சென்றனர்.

News June 15, 2024

இசைப் பள்ளியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

image

கடலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2024-25ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகை ரூ.400 மற்றும் இலவச பயண அட்டை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும். படிப்பு நிறைவு செய்தவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஆகவே மாணவர்கள் இசைப்பள்ளியில் சேர்ந்து பயன் பெறுமாறு ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

News June 15, 2024

மகளிருக்கு இலவச தையல் தொழிற்பயிற்சி

image

கடலூர் இந்தியன் வங்கி மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் மகளிர் இலவச தையல் தொழிற்பயிற்சி 30 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான நேர்காணல் வரும் 22ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இது தொடர்பான முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 04142 – 796183 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 15, 2024

தேசிய நெடுஞ்சாலை பணி – ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் – சிதம்பரம் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை சாலை பணிகள் நடைபெறுவதை கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் இன்று (ஜூன் 15) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது சாலை பணிகளை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் செய்ய வேண்டும் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News June 15, 2024

கடலூரில் குறைகேட்பு முகாம் நடைபெற்றது

image

கடலூர் தாலுகா அலுவலகத்தில் பொதுவினியோகத்திட்ட குறைகேட்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு குடிமைப்பொருள் தனி தாசில்தார் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 30க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தனர்.

News June 15, 2024

அரசு கல்லூரியில் பழங்குடி இன மாணவர் சேர்ப்பு

image

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 2024-25ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 10-ம் தேதி முதல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று (ஜூன் 15) நடந்த சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரே ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளார். இந்த மாணவருக்கு கல்லூரி முதல்வர் ரா.ராஜேந்திரன் சேர்க்கை ஆணையை வழங்கினார்.

News June 15, 2024

கடலூர் மாவட்டத்தில் வெப்பநிலை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் நேற்று கடலூர் 36 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 37 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 38 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 39 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 38 டிகிரி செல்சியஸ் மற்றும் பண்ருட்டியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது

News June 15, 2024

சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை கால நீடிப்பு

image

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் PG Diploma 4, Pharmacy படிப்புகள், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் அனைத்து கடல் அறிவியல் படிப்புகள், இசைத்துறை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 30 ஆம் தேதி வரை சமர்பிக்கலாம் எனவும் மேலும் விவரங்களுக்கு www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

News June 14, 2024

கடலூர்: மாவட்ட கிரிக்கெட் போட்டி நாளை துவக்கம்

image

கடலூரில் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட கிரிக்கெட் அக்காடமி கோப்பைக்கான மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை துவங்குகிறது. தினந்தோறும் காலை 8.30 மணிக்கும், மதியம் 12.30 மணிக்கு என 2 போட்டிகள் நடைபெற உள்ளன. இவை அனைத்தும் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகின்றன. வருகிற 22-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் மாவட்டத்தில் உள்ள 16 அணிகள் கலந்து கொள்கின்றன.

error: Content is protected !!