India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்காக நாளை (1-ம் தேதி) முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு சென்று 2 ஓ.ஆர்.எஸ். பாக்கெட் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு துத்தநாக மாத்திரைகள் 14 நாட்களுக்கு சேர்த்து வழங்குவார்கள் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கி வரும் கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதிஉதவி வழங்கப்படுகிறது. இதில் ரூ.2 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை நிதி வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்க விரும்புவர்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கி வரும் கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதிஉதவி வழங்கப்படுகிறது. இதில் ரூ.2 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை நிதி வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்க விரும்புவர்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுக்கு தயாராகி வரும் போட்டித் தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது. இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுக்கு தயாராகி வரும் போட்டித் தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் ஜூன் 1-ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது. இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் லெட்சுமி, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் அமிர்தலிங்கம் , நெய்வேலி காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் சேத்தியாத்தோப்பில் காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழு, விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு
கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ், தலைமையில் இன்று (27.06.2024) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணி ஆகியோர் உள்ளனர்.

கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா தொடர்பாக கடலூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 11ஆம் தேதி அன்று கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் விவரங்கள் tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் ஜூன் 10-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பில், கள்ளச்சாராயம் உற்பத்தி, விற்பனை, கடத்தல் செயல்கள், கஞ்சா,குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவது குறித்து தெரியவந்தால், ஈடுபடும் நபர்கள் இடம் குறித்த தகவல்களை பொதுமக்கள் 7418846100, 9080731320, 10581 எண்களில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பில், கள்ளச்சாராயம் உற்பத்தி, விற்பனை, கடத்தல் செயல்கள், கஞ்சா,குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவது குறித்து தெரியவந்தால், ஈடுபடும் நபர்கள் இடம் குறித்த தகவல்களை பொதுமக்கள் 7418846100, 9080731320, 10581 எண்களில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.