Cuddalore

News August 26, 2025

கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்று (ஆக.25) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 25, 2025

கடலூர்: ஆயுதத் தொழிற்சாலையில் வேலை! APPLY NOW!

image

கடலூர் மக்களே திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ படித்த, 18 வயது பூர்த்தி அடைந்து 35 வயதுக்கு மேற்படாதவர்கள்<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு, ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க செப்.21ம் தேதி கடைசி நாளாகும். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 25, 2025

கடலூர்: LIC-ல் ரூ.88,635 சம்பளத்தில் வேலை!

image

LIC காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிக்குள் இங்கே <>கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் இதனை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News August 25, 2025

BREAKING: கடலூரில் மீண்டும் பள்ளி வேன் விபத்து

image

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அடுத்த பூவனூர் கிராமத்தில், பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. ரயில் எதுவும் வராததால் நல்வாய்ப்பாகப் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பூவனூர் கிராம மக்களின் உதவியுடன் வேனில் இருந்து பள்ளி மாணவர்களை மீட்டு, தண்டவாளத்தில் இருந்து வேன் அகற்றப்பட்டது.

News August 25, 2025

கடலூர்: கல்விக்கடன் வழங்கும் முகாம்

image

நான் முதல்வன் – “உயர்வுக்குப் படி” வழிகாட்டி நிகழ்ச்சி முகாம் மற்றும் கல்விக்கடன் வழங்கும் முகாம் வரும் ஆக.26-ம் தேதி சிதம்பரம் வாண்டையார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் கல்விக் கடன் கோரும் மாணவர்கள் http://www.vidyalakshmi.co.in/students என்ற இணையவழி மூலமாக விண்ணப்பித்தும் உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார். SHARE IT…

News August 25, 2025

கடலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (24/08/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 24, 2025

கடலூர்: அடிப்படை பிரச்சனைக்கு உடனடி தீர்வு

image

கடலூர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் <>இந்த லிங்கை கிளிக் செய்து<<>> பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.!

News August 24, 2025

சட்டமன்ற பேரவை பொது கணக்குக்குழு கடலூர் வருகை

image

சட்டமன்ற பேரவை பொது கணக்குக் குழுத்தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி (போளூர்), அப்துல் சமது (மணப்பாறை), ஐயப்பன் (கடலூர்), சந்திரன் (திருத்தணி), சேகர் (பரமத்திவேலூர்), முகம்மது ஷாநவாஸ் (நாகப்பட்டினம்) ஆகியோர் ஒரு நாள் பயணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை (ஆக.,25) ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News August 24, 2025

கடலூர்: 894 வங்கி காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!

image

தமிழகத்தில் செயல்படும் பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள 894 Clerk பணியிடங்கள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள 10,277 பணியிடங்களை நிரப்ப வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 20 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 – ரூ.64,480 வரை வழங்கப்படும். சொந்த ஊரில் வங்கி வேலை கிடைக்க உடனே APPLY பண்ணுங்க. SHARE

News August 24, 2025

கடலூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

error: Content is protected !!