India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசு இன்று பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது. மேலும் கடலூர் மாவட்டதில் சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கான சலுகைகள், புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல் போன்றவை மத்திய அரசு பட்ஜெட்டில் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் பட்ஜெட்டில் இடம் பெறுபவை குறித்து உங்கள் கருத்து?

கடலூர் மாவட்ட மாநகராட்சி ஆணையராக காந்திராஜ் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது கடலூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக அனு ஐஏஎஸ் அவர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதேபோல் தமிழ்நாட்டில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடலூர் மாநகராட்சின் புதிய ஆணையர் அனு விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

கடலூரில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வரும் 26 ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அதனால் கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும் எனவும், கூட்டத்தில் கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் 26 ஆம் தேதி காலை 10 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று அறிவித்தார்.

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பவதற்கான நேரடி நியமன போட்டி தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் இத்தேர்வை எழுத 892 பேர் விண்ணப்பித்திருந்தனர். 3 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை 849 பேர் எழுதினர். 43 பேர் தேர்வு எழுத வரவில்லை.

கடலூர் மாவட்டத்தில் உள்ள நல்லாத்தூர்,அடரி, ஒறையூர் துணைமின் நிலையங்களில் நாளை(ஜூலை.23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நல்லாத்தூர்,அடரி, ஒறையூர் துணைமின் நிலையங்களுக்குட்டப்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அடுத்த சாமியார்பேட்டை கடற்கரைக்கு இன்று சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஐ டி நிறுவனத்தில் பணிபுரியும் ஷாம் சுந்தர் (26), கோகுல் பிரசாத் (26) ஆகியோர் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது இருவரும் ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கினர். இதையடுத்து பொதுமக்கள் இருவரையும் மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் அஞ்சல் துறையில், கிளை போஸ்ட் மாஸ்டர், டாக் சேவாக் உள்ளிட்ட 120 காலிப் பணியிடங்கள் உள்ளன. 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் வரும் ஆக.5ஆம் தேதிக்குள் <

காராமணிக்குப்பத்தைச் சேர்ந்த கமலேஸ்வரி, மகன் சுகந்தகுமார், பேரன் நிஷாந்த் ஆகியோர் கடந்த 15ஆம் தேதி எரித்து கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக, சங்கர் ஆனந்த் (21), ஷாகுல்அமீது (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கொலை செய்யும்போது நடந்த தாக்குதலில், சங்கர் ஆனந்தின் இடது கை ஆள்காட்டி விரல் துண்டானது. இதனால், அவரை நேற்றிரவு போலீசார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று (20/07/2024) கடலூர் 35 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 36 டிகிரி செல்சியஸ், புவனகிரி 36 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 36 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 37 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 37 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 36 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தமிழகத்தின் ஏ.டி.ஜி.பி.யாக சமீபத்தில் பொறுப்பேற்ற டேவிட்சன் தேவாசீர்வாதம் இன்று கடலூரில் எஸ்.பி. அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.க்களுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது 3 மாவட்டங்களிலும் சவாலாக இருக்கும் புதுவை மாநில மதுபானங்கள் கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து மூன்று மாவட்ட எஸ்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.
Sorry, no posts matched your criteria.