Cuddalore

News February 24, 2025

கடலூரில் 49 முதல்வர் மருந்தகம் திறப்பு

image

1,000 இடங்களில் தமிழகம் முழுவதும் இன்று முதல்வர் மருந்தகங்கள் இன்று திறக்கப்படுகிறது. கோயமுத்தூர் மாவட்டத்திற்கு 42 மருந்தகமும், மதுரை மாவட்டத்திற்கு 52 மருந்தகமும், கடலூர் மாவட்டத்திற்கு 49 மருந்தகமும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 40 மருந்தகம் திறக்கப்பட உள்ளன. பிரதமரின் மக்கள் மருந்தகம் உள்ளிட்ட எந்த மருந்தகளிலும் இல்லாத வகையில் சந்தை மதிப்பை விட 75% வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

News February 23, 2025

சிதம்பரம் அருகே எந்திரம் கவிழ்ந்து மாணவன் பலி

image

சிதம்பரம் அருகே புதுச்சித்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ் நேற்று மாலை வயலில் உழவு எந்திரம் தில் அமர வைத்து எந்திரத்தில் சுற்றி வந்தனர் எதிர்பாராத விதமாக எந்திரம் கவிழ்ந்து மாணவர்கள் இருவர் சக்கரத்தில் சிக்கிக்கொண்டார் அதில் ஒருவர் படுகாயம் அவர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பிவிட்டனர் சிகிச்சை பலன்னிறி உயிரிழந்தார் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

News February 23, 2025

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் அனைத்து உதவி காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இன்று (23/02/2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 23, 2025

கடலூரில் மஞ்சப்பை விருது பெற அழைப்பு

image

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் மாற்றாக பொருட்களை பயன்படுத்த பங்களிப்பு செய்த பள்ளி கல்லூரி வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படுகிறது. 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 18 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும். இதன் விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலக இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என கடலூர் கலெக்டர் தெரிவிட்டுள்ளார்.

News February 22, 2025

கடலூர்: “APPA” புதிய செயலி அறிமுகம்

image

கடலூர் விருத்தாசலம் அடுத்த திருப்பெயர் பகுதியில் பள்ளி கல்வித்துறை சார்பில் “பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” விழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் “APPA” புதிய செயலி அறிமுகம் செய்தார். உடன் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News February 22, 2025

மண்டல மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

image

கடலூர் மேற்கு மாவட்டம், வேப்பூர் அருகே திருப்பெயரில் “பெற்றோர்களை காப்போம்” மண்டல மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22.2.2025) வருகை தந்தார். உடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News February 22, 2025

கடலூர்: இன்று ரேஷன் கடை இயங்காது

image

கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க, வார விடுமுறை நாளான கடந்த ஜனவரி 10ஆம் தேதி, ரேஷன் கடைகள் செயல்பட்டன. இந்த வேலைநாளை ஈடுசெய்ய, இன்று (பிப்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (பிப்.22) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 21, 2025

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள் – கடலூரில் முதல்வர் ஆக்ரோஷம்!

image

கடலூரில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில் “தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்.
தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும் எதிரான எந்த செயல்பாடுகளும் இந்த
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரை இந்த மண்ணுக்குள் வரமுடியாது” என்று ஆக்ரோஷமாக பேசினார்.

News February 21, 2025

பண்ருட்டியில் ரூ.15 கோடியில் அரசு கல்லூரி – முதல்வர் அறிவிப்பு

image

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கடலூருக்கு இன்று மாலை வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு‌ முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் கோரிக்கையை ஏற்று, கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என தெரிவித்தார்.

News February 21, 2025

கடலூர் வருகை தந்த தமிழக முதல்வர்!

image

கடலூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை கடலூருக்கு வருகை தந்தார். அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். உடன் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!