India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவதிகை அடுத்த நரிமேட்டைச் சேர்ந்தவர் தேசிங்கு (22). மாற்றுத்திறனாளியான இவர் நேற்று பண்ருட்டி அருகே தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது சென்னையில் இருந்து கடலூர் நோக்கி சென்ற ரயில் வருவதை கவனித்த அவர், தண்டவாளத்தில் இருந்து நகர முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.16) இரவு 10 மணி முதல் இன்று (அக்.17) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தை, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

கடலூர் மக்களே.. உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!

கடலூர் மாவட்டத்தில் தீபாவளி இனிப்பு மற்றும் கார வகைகளின் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு (ம) தர நிர்ணய விதிமுறைகளை
பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இனிப்பு கார வகைகள் செய்ய சுத்தமான எண்ணெயில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் பேரிடர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 1077, 04142220700, 04142290325, 04142290326, 04142290327 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு, மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

ராமநத்தத்தை சேர்ந்தவர் பழனிமுத்து (49). இவரது மகன் கார்த்திக் (23). இவர் கடந்த 13-ந்தேதி மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பழனிமுத்துவுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவரது முகத்தில் கத்தியால் வெட்டியதோடு, செங்கல்லால் தாக்கினார். பின்னர் தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பழனிமுத்து நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து கார்த்திக்கை கைது செய்தனர்.

‘அதிகாலை மற்றும் காலை நேரங்களில் நடைபெறும் சிறப்பு சினிமா காட்சிகளால் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, மாணவர்களின் கல்வி பாதிப்பு, கூட்ட நெரிசல், போக்குவரத்து தடங்கல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுகின்றன. எனவே திரையரங்குகளில் முதல் நாள் சிறப்புக் காட்சிகளை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என பண்ருட்டி எம்எல்ஏ-வும், த.வா.க தலைவருமான தி.வேல்முருகன் இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கடலூர் எஸ்.பி ஜெயக்குமார் கூறுகையில், ‘ தீபாவளி பண்டிகையையொட்டி பழைய குற்றவாளிகள் 137 பேரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதில் 15 பேரை கைது செய்துள்ளோம். இது தவிர மாவட்டம் முழுவதும் பிரச்சனைக்குரிய பகுதிகளை கண்டறிந்து, அதில் 65 கிராமங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி பிரச்சனை ஏற்படும் என தெரிகிறது. இதனால் அந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணித்து வருகிறோம் என அவர் தெரிவித்தார்.

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35 (SC/ST- 40, OBC-38)
6 .ஆரம்ப தேதி: 21.10.2025
7. கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
Sorry, no posts matched your criteria.