India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில் நாளை (ஆக.28) நடைபெறுவதாக முன்பே அறிவிக்கப்பட்டிருந்த அடரி துணை மின் நிலையம், மங்களூர் துணை மின் நிலையம் மற்றும் சிறுப்பாக்கம்துணை மின் நிலையம் ஆகிய இடங்களில் மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக திட்டக்குடி மின் பகிர்மான செயற்பொறியாளர் அறிவித்திருந்தார். ஆனால், நிர்வாக காரணங்களால் இந்த பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுதாக தெரிவித்துள்ளனர்.
கடலூர் மக்களே.. மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!
மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு குற்ற சம்பவங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க கடலூர் மாவட்டத்தில் 7 உட்கோட்டங்களுக்கு உட்பட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில், மாவட்டம் முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையும் நடத்தி வருகின்றனர் என மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று(ஆக.26) இரவு 10 மணி முதல் இன்று(ஆக.27) காலை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மக்களே.. இந்திய தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3,518 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் திருச்சி, பொன்மலை டிவிசனில் 697 பணியிடங்களுக்கு தேர்வு இல்லாமல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் <
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஆக.29 தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், கடலூர் மாவட்ட மக்கள் 04142-233816 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
கடலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து, உங்களது புகார் அல்லது குறைகளை தெரிவிக்க ‘1800 599 1500’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் பேருந்து கால தாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் அல்லது நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது குறித்து உங்களால் வீட்டிலிருந்த படியே புகார் தெரிவிக்க முடியும். இந்த தகவலை SHARE செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்க!
தொழுதூர் வ.உ.சி. நகரை சேர்ந்த கண்ணன்-ராதா தம்பதியினரின் மகன் கவுசிக் (13). தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் இவர், நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட காலில் ஷூவை மாட்டியுளார். அப்போது அதில் பதுங்கியிருந்த சாரை பாம்பு ஒன்று மாணவனை திடீரென கடித்ததில், அவர் அலறியடித்து மயங்கியுள்ளார். இந்நிலையில் மாணவனுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.