India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிங்கப்பூர் நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்ற வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள தொழில் முனைவோர் மைய வளாகத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள செயற்கை நுண்ணறிவு மையத்தினை பார்வையிட்டவர் , அதன் அதிகாரிகளோடு கலந்துரையாடினார்.

வடலூரில் உள்ள சீயோன் மெட்ரிக் பள்ளியில், பார்வதிபுரத்தை சேர்ந்த திருமுருகன் மகன் கிஷோர் (15). 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த கடந்த 24ஆம் தேதி பள்ளியில் நடந்த விளையாட்டு பயிற்சியின் போது, சக மாணவர் எறிந்த ஈட்டி அவரது தலையில் பாய்ந்ததில் படுகாயமடைந்த கிஷோர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மூளைச்சாவு அடைந்தார்.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரே நேரத்தில் சொல்லி வைத்தார் போல, ஒன்றின் பின் ஒன்றாக ஒவ்வொரு நிறுவனங்களும் அவற்றின் போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலைகளை உயர்த்தியுள்ளன. இந்நிலையில் கடலூரில் பொதுமக்கள் பலர் இப்போது மிகவும் மலிவு விலையில் சிறப்பு சலுகைகளை வழங்கும் அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனத்தின் சிம் கார்டுகளை போட்டி போட்டு மக்கள் வாங்கி செல்கின்றனர்.

வடலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஈட்டி எறியும் பயிற்சியின் போது மாணவனின் தலையில் பாய்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மாணவன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பள்ளியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மகனின் நிலையை கண்டு துக்கம் தாளாத தாய் சிவகாமி, தற்கொலைக்கு முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் நீதிமன்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “போக்குவரத்து துறையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் அதிக அளவில் ஓய்வு பெறுவதால் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். போக்குவரத்து துறை தனியார் மையம் என கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் பேசி வருகின்றனர். அது பொய்யான தகவல்” என தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம், அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் வருகிற ஜூலை.31-ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். அதன்படி செராமிக் தொழில்நுட்பம் சார்ந்த 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளில் சேர நாளை கடைசி நாள் ஆகும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாணவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. SHARE IT WITH YOUR FRIENDS!

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் இன்று (28/7/2024) கடலூர் 37 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 37 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 38 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 38 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 38 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 38 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நாளை ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை, கலைவாணர் அரங்கில், காலை 9:30 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில், கடலூர் மாநகராட்சி ஆணையர், பொறியாளர்கள், நகர் நல அலுவலர்கள், கடலூர் மாவட்ட நகராட்சி ஆணையர்கள் மற்றும், பொறியாளர்கள் முன்னேற்ற அறிக்கையுடன் பங்கேற்குமாறு நகராட்சி நிர்வாகங்கள் இயக்குனர்களும் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அடுத்த அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் கொள்ளிடம் ஆற்றின் கரை பகுதியில் வெள்ள தடுப்பு நடவடிக்கைக்காக ஆற்றின் கரையோரம் கருங்கற்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ள தடுப்பு சுவரை இன்று கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் அதிமுக வார்டு செயலாளர் பத்மநாதன் படுகொலையை கண்டித்து , எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது: பத்மநாதன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற சம்பவம் கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன். அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார் அவர்.
Sorry, no posts matched your criteria.