India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்கள் உரிமை பறிபோகும். மகளிர் உரிமைத்தொகைக்கு ஆபத்து ஏற்படும்.100 நாள் வேலை திட்டத்தில் சிக்கல் வரும் என்று மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைத்தார். மத்திய அரசை எதிரியாக பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
கடலூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பள பாக்கி உடனே வழங்க வேண்டும், எங்களுக்கு இஎஸ்ஐ மற்றும் பி.எப் பிடித்தம் செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார்.மாவட்டச் செயலாளர் சௌந்தர்ராஜன் முன்னிலை வகித்தார்.
மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.இதில் எம்எல்ஏ ஐயப்பன் மாநகர மேயர் சுந்தரி ராஜா திமுக மாநகர செயலாளர் ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் துறை மாநகர துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மத்திய அரசை அவர் கடுமையாக சாடினார்.
வடலூர் சத்திய ஞானசபை பகுதி பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி நேற்று(ஏப்.8) போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வடலூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 91 பெண்கள், 70 ஆண்கள் ஆகிய 161 பேரை கைது செய்து மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாள் அன்று சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாள் அன்று சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு கடலூர் உதவி ஆய்வாளர் ரேவதி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கீதா, நெய்வேலி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் சுபிக்க்ஷா ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கட்டடம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.வடலூர் சத்திய ஞான சபையில் சர்வதேச மையம் அமைக்க பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.இதனால் அங்கு போலீஸ் குவிப்பு.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து நேற்று நெய்வேலி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்க்கு நெய்வேலி பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். உடன் அமைச்சர் கணேசன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கடந்த ஒரு வாரமாக மக்களைச் சந்தித்து திமுகவினருடன் இணைந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, டிஜிட்டல் முறையிலும் விசிகவை அதிகளவில் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, கியூஆர் குறியீடு மூலம் அந்தக் கட்சி சார்பில் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.