Cuddalore

News August 3, 2024

மூவர் கொலை வழக்கில் 2 வாலிபர்களிடம் விசாரணை

image

நெல்லிக்குப்பதில் கடந்த 15-ந் தேதி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கில், அதே பகுதியை சேர்ந்த சங்கர் ஆனந்த், சாகுல் ஹமீது ஆகிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதை தொடர்ந்து, கடலூர் மத்திய சிறையில் உள்ள இருவரையும் விசாரணைக்காக நேற்று நெல்லிக்குப்பம் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

News August 3, 2024

கடலூர் மாவட்டத்தில் நேற்றைய வெப்பநிலை முழு நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்ததால் வெப்பநிலை சற்று குறைந்து பதிவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று கடலூர் 37 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 36 டிகிரி செல்சியஸ், புவனகிரி 36 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 37 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 37 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

News August 3, 2024

ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு தணிக்கையாளர்கள் தேவை

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் சுய உதவி குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகளை தணிக்கை செய்ய, தணிக்கையாளர்கள் தேவைப்படுகின்றனர். இந்த இயக்கத்தில் பணி செய்ய விருப்பம் உள்ள தணிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என கடலூர் கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

News August 3, 2024

கடலூர் மாவட்டத்தில் மழை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சிதம்பரம் 3 செ.மீ., அண்ணாமலை நகர் 3 செ.மீ., புவனகிரி 3 செ.மீ., பரங்கிப்பேட்டை 2 செ.மீ., சேத்தியாத்தோப்பு 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

News August 3, 2024

ஆவின் முகவர்களாக விண்ணப்பிக்கலாம்

image

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, வடலூர், காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம், வேப்பூர், பெண்ணாடம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி ஆகிய பகுதிகளுக்கு ஆவின் முகவர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் பாலக முகவர்கள் தேவைப்படுகின்றனர். எனவே விருப்பமுள்ளவர்கள் மாவட்ட கூட்டுறவு பால்உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என ஆவின் பொதுமேலாளர் தெரிவித்தார்.

News August 2, 2024

கடலூர் மாவட்டத்தில் ரோந்து பணி விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் உதவி ஆய்வாளர் ஸ்ரீநிவாசன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் லட்சுமி, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் முருகேசன், நெய்வேலி காவல் ஆய்வாளர் இராஜாதாமரைப்பாண்டியன், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் சேதுபதி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News August 2, 2024

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு

image

வேப்பூர் பகுதிக்கு இன்று வருகை தந்த தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவெ.கணேசனிடம், நல்லூர் ஒன்றிய திமுக செயலாளர் பாவாடை கோவிந்தசாமி முன்னிலையில், திமுக ஒன்றிய துணை செயலாளர் மாரிமுத்தாள் குணசேகரன் மற்றும் என். நாரையூர் கிராம மக்கள் இலவச வீட்டுமனை பட்டா கோரி கோரிக்கை மனு அளித்தனர். உடன் விருத்தாசலம் எம்எல்ஏ, ராதா கிருஷ்ணன், மற்றும் திமுகவினர் உள்ளனர்.

News August 2, 2024

கடலூர் அமைச்சர் வேண்டுகோள்

image

கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, நினைவு அஞ்சலி செலுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டுமென வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேண்டுகோள் இன்று விடுத்துள்ளார்.

News August 2, 2024

புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு

image

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் பேரிடர் கால கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையை 1077 04142 – 220700 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். மேற்படி பெறப்படும் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News August 2, 2024

ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆற்றில் இறங்க தடை

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் வல்லம்படுகை, எருக்கன், கட்டுப்படுகை கிராம தண்ணீரில் முழ்கும் அபாயத்தில் உள்ளது. ஆகையால் பொதுமக்கள் அனைவரும் புயல் வெள்ள பாதுகாப்பு மையத்தில் தங்கி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு கொள்ளிடம் ஆற்றில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்து.

error: Content is protected !!