Cuddalore

News March 23, 2024

கடலூர் மாவட்டத்தில் 181 துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைப்பு

image

பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் தேர்தலின் போது அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், துப்பாக்கி பயன்படுத்துவோர் தங்கள் துப்பாக்கிகளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் தங்கள் பாதுகாப்பு கருதி உரிய அனுமதி பெற்று துப்பாக்கி பயன்படுத்தும் 181 பேர், இன்று போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்தனர்.

News March 23, 2024

கடலூர் அருகே விபத்து.. 40 பயணிகள் தப்பினர்

image

திருக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (33).பஸ் டிரைவர். நேற்று இவர் புதுவையில் இருந்து பண்ருட்டி வழித்தடத்தில் பேருந்தை ஓட்டிச் சென்றார்.பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.பாகூர் ஏரிக்கரை சாலை சந்திப்பு அருகே சென்றபோது, ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டது.இதனால் பேருந்து தாறுமாறாக ஓடியது.பயணிகள் பயத்தில் அலறியதில் நடத்துனர் பேருந்தை நிறுத்தினர்.இதனால் பயணிகள் காயமின்றி தப்பித்தனர்.

News March 23, 2024

கடலூர் புனித வளனார் கல்லூரியில் ஆண்டு விழா

image

கடலூர் புனித வளனார் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது இந்த ஆண்டு விழாவிற்கு அருட்தந்தை முனைவர் சேவியர் அருள்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த ஆண்டு விழாவில் 25 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வரும் பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

News March 23, 2024

கடலூர்: திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்

image

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம், கடலூர் மாவட்ட திமுக பொருளாளர் எம்.ஆர்.கே.பி கதிரவன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தொகுதிகளில் உள்ள மாவட்ட, சட்டமன்ற, ஒன்றிய, நகர, பேரூர் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

News March 23, 2024

கடலூர் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு

image

கடலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், கடலூர் உழவர் சந்தை அருகே இன்று ஆட்டோ டிரைவரிடம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் ஆட்டோக்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும், தாறுமாறாக நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். அப்போது ஆட்டோ டிரைவர்கள் உடன் இருந்தனர்.

News March 23, 2024

கடலூர் அருகே அதிரடி ரெய்டு 

image

விருத்தாசலம் (ச.ம.தொ) தேர்தல் பறக்கும் படை அதிகாரியான ராதிகா தலைமையிலான குழுவினர் கண்டப்பன்குறிச்சி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்த போது சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் ராஜேஷ் குமார் (35) என்பவர் 79 ஆயிரத்து 665 ரூபாயை எவ்வித ஆவணமுமின்றி வைத்திருந்தார். இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து துணை தாசில்தார் கோவிந்தனிடம் ஒப்படைத்தார்.

News March 23, 2024

கடலூர்: 17வயது சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது ‘போக்சோ’

image

உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் கேசவன். இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஆண்டு கடலூர்,திருவந்திபுரம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவரது தாய்க்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து அவர் நேற்று அளித்த புகாரின் பேரில் கடலூர் அனைத்து மகளிர் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் வழக்கு பதிந்து கேசவனை தேடி வருகின்றனர்

News March 23, 2024

வாழ்த்து தெரிவித்த கடலூர் பாஜக நிர்வாகிகள்

image

மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில‌ செயலாளர் வினோஜ் செல்வத்தை, கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கோவிலானூர் ஜி. மணிகண்டன் தலைமையில், பாஜக மாவட்ட, மண்டல நிர்வாகிகள் நேற்று நேரில் சென்று சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

News March 22, 2024

வாகனங்களில் ஒட்டுவில்லை ஒட்டி விழிப்புணர்வு

image

பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, கடலூர் டவுன்ஹால் அருகே 100% வாக்களிப்பது குறித்து மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகளின்
வாகனங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் இன்று (22.03.2024) ஒட்டுவில்லைகளை ஒட்டினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்
இராஜசேகரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

News March 22, 2024

அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிக்கை வெளியீடு

image

தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 24.03.2024 மாலை 3 மணியளவில் வடலூர், மங்கையர்கரசி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!