India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர், முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (26/03/2024) எள் வரத்து 0.56 மூட்டை, மணிலா வரத்து 77.45 மூட்டை வந்துள்ளது. இது மட்டுமல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் கடலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு இன்று விற்பனைக்கு வரவில்லை.
கடலூர் சூரியா ஆர்த்தோ கிளினிக் நடத்தும் இலவச எலும்பியல் மருத்துவ முகாம் வரும் 31-ம் தேதி வரை, கடலூர் முதுநகர் அருகே உள்ள சூரியா ஆர்த்தோ கிளினிக்கில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை (மகேந்திரா கார் ஷோரூம் எதிரில்) நடைபெறுகிறது. முகாமில், எலும்பு முறிவு, கால் மூட்டு வலி, நீண்ட நாள் கழுத்து வலி உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குவதுடன் மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணியில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் சிவக்கொழுந்துவிற்கு ஆதரவாக வருகின்ற 30 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வை கடலூர் மாவட்டத்தில் 438 பள்ளிகளில் பயிலும் 17,194 மாணவர்கள், 15,778 மாணவிகள் என மொத்தம் 32,972 பேர் தேர்வு எழுதுகின்றனர்.இதற்காக மொத்தம் 152 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 1,957 தனித் தேர்வர்கள் 7 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். இதில் கடலூர் மஞ்சகுப்பம் அரசு பள்ளியில் கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டார்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் உள்ள பெரியார் அரசு கலை கல்லூரி கடலூர் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்கு என்னும் மையத்தினை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த மையத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் உடனடியாக அமைக்க வலியுறுத்தினார்.
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்மண்டலம் குண்டுசாலையில் ஆட்டோ மற்றும் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று நடைபெற இருக்கும் திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.கூட்டத்திற்கான அரங்க அமைப்புகளை கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் நேற்று இரவு ஆய்வு செய்தார்.உடன் பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன்,புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் மனோகரன்,பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் கலையரசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் அறிவிக்கப்பட்டார். இந்தநிலையில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் பாமக மாவட்ட செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், ஜெகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததாவது நான் கண்டிப்பாக ஜெயிப்பேன் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என கூறினார்.
சிதம்பரம் அருகே மேல்தவிர்த்தாம்பட்டை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது வீட்டின் அருகில் உள்ள வக்கார மாரி ஏரியில் இருந்து இன்று அதிகாலை வெளியேறிய முதலை ஒன்று செல்வகுமாரின் வீட்டிற்குள் புகுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து 8 அடி நீளமுடைய முதலையை லாவகமாக பிடித்தனர்.
கடலூர் பாராளுமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணி கட்சியின் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்த மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தம்புராஜிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சம்பத் முன்னாள் எம்எல்ஏ சொரத்தூர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்பு அவர் கூறியதாவது, நாங்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் எங்களுக்கு முழுமையான மக்கள் ஆதரவு உள்ளது என கூறினார்
Sorry, no posts matched your criteria.