India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் உள்ள விசிகவிற்கு இரண்டு தொகுதிகள் அளிக்கப்பட்டது.சிதம்பரம்,விழுப்புரம் ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் விசிக போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியானது.இன்று சென்னையில் உள்ள விசிக அலுவலகத்தில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் 6-வது முறை போட்டியிடுகிறார்.
மக்களவை தேர்தலையொட்டி, நாளை வேட்பு மனு தாக்கலுக்கான பணிகள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடன் வரும் கட்சி நிர்வாகிகளுக்கு அலுவலகத்திற்கு செல்ல அனுமதி கிடையாது; வாகனங்களை 100 மீட்டர் தூரத்தில் நிறுத்த வேண்டும்; இதனால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீ. தூரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு கோடு போடும் பணி நேற்று நடந்தது.
மக்களவை தேர்தலையொட்டி, நாளை வேட்பு மனு தாக்கலுக்கான பணிகள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடன் வரும் கட்சி நிர்வாகிகளுக்கு அலுவலகத்திற்கு செல்ல அனுமதி கிடையாது; வாகனங்களை 100 மீட்டர் தூரத்தில் நிறுத்த வேண்டும்; இதனால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீ. தூரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு கோடு போடும் பணி நேற்று நடந்தது.
பாமக நிறுவனர் ராமதாஸ்,தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விழுப்புரம், தைலாபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில்,10 தொகுதிகள் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர்,சிதம்பரம் மக்களவை தொகுதியில் பாமக போட்டியிடுகிறது.கடலூரில் வழக்கறிஞர் பாலு,சிதம்பரத்தில் சங்கர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்ப்பு
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதற்கட்டமாக வருகின்ற 24 ஆம் தேதி முதல் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.இந்த நிலையில் கடலூரில் வருகின்ற மார்ச் 30 மாலை 6 மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
விருத்தாசலத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை அவர் தெரிவித்தார். அப்போது விருத்தாசலம் நகர செயலாளர் சந்திரகுமார், மாநில பேரவை துணை செயலாளர் அருள்அழகன் , மண்டல செயலாளர் வக்கீல் அருண் உள்பட பலர் உடனிருந்தனர்.
கடலூர் மாவட்டம் அடுத்து கீழ்ச்செருவாய் கிராமத்தில் இன்று(மார்ச்.18) உயிரிழந்த முருகானந்தம் என்பவரது உடலை வைத்திருந்த ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் மின்சாரம் தாக்கி காயமடைந்த கனகவல்லி, ராஜம்மாள், லலிதா, கௌரி உள்ளிட்டோருக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் இன்று(மார்ச்.18) அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சென்னை புறப்பட தயாரான அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் திடீரென பாய்ந்து விழுந்ததில் அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட மனநலம் பாதிக்கப்பட்டவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர் தொகுதியில் தற்போது திமுக எம்பியாக ரமேஷ் உள்ளார்.இந்நிலையில்
வருகின்ற லோக்சபா தேர்தலில் கடலூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாஜி மாநில தலைவர் கே.எஸ் அழகிரி போட்டியிடலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் பொறுப்பு அவரிடமிருந்து பறிக்கப்பட்ட நிலையில் கே.எஸ் அழகிரிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என பேசப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடலூர் மாவட்டம் நிர்வாகம் சார்பில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டு இன்று கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியில் பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த புகார் மனுக்களை போட்டு சென்றனர்.
Sorry, no posts matched your criteria.