India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் மாணவர்கள் பயின்ற பள்ளியில் இன்று (ஜூலை.10) வியாழக்கிழமை நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில், கண்ணீருடன் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியது பார்ப்போரை கலங்கச் செய்வதாக இருந்தது.
இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. குறைந்தது 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். மேலும் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE
கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் ரெயில் மோதிய இடத்தில் ரெயில்வே முதன்மை பாதுகாப்பு உண்மை கண்டறியும் குழுவினர் நேற்று மாலை விசாரணை நடத்தினர். அப்போது ஓரிரு நாட்களில் பொது மேலாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக கூறினர்.
மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நேற்று பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட 14 இடங்களில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 182 பெண்கள் உள்ளிட்ட 862 பேரை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்டவை விஏஓ-வின் முக்கிய வேலையாகும். இவற்றை சரியாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், கடலூர் மாவட்ட மக்கள் 04142-233816 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க
கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். இதையடுத்து விபத்தின் எதிரொலியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் அனைத்து ரயில்வே கேட்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜூலை.10) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் கீழக்குப்பம், பூரங்கனி, காட்டுக்கூடலூர் சேத்தியாத்தோப்பு, வளையமாதேவி, வடக்குத்து, பாளையங்கோட்டை, புவனகிரி, வானமாதேவி, மதுராந்தகநல்லூர், கானூர், சோழத்தரம், குறிஞ்சிகுடி, ஓரத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். SHARE !
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் (ஜூலை 9) இரவு 10 மணி முதல் (ஜூலை 10) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் நேற்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்தை தடுக்க ரயில்வே கேட் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் ஏதேனும் உள்ளதா என்ற கேள்விக்கு கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் அளித்த பதிலில் “தெற்கு ரயில்வேயின் குற்றச்சாட்டு குறித்து உரிய ஆய்வுக்குப் பின் பதில் அளிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடலூர் ரயில் விபத்து குறித்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் உட்பட 13 பேருக்கு ரயில்வே பாதுகாப்பு படை (RPF) சம்மன் அனுப்பியுள்ளது. 13 பேரும் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.