Cuddalore

News March 31, 2025

கள்ள நோட்டு விவகாரம்: கட்சியில் இருந்து விசிக நிர்வாகி நீக்கம்

image

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அதர்நத்தம் கிராம பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வம் என்பவரது விவசாய நிலத்தில் கள்ள நோட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில், கட்சியினர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து செல்வம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News March 31, 2025

கடலூர் மக்களே ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

கடலூர் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)

News March 30, 2025

கடலூர் மாவட்டத்தில் ரோந்து பணி செல்லும் அதிகாரிகள் முழு விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினந்தோறும் ரோந்து பணி மேற்கொள்ள பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (30ஆம்தேதி) கடலூரில் உதவி ஆய்வாளர் கணபதி, விருத்தாசலத்தில் உதவி ஆய்வாளர் ஜெயந்தி, சேத்தியா தோப்பில் உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜ், பண்ருட்டியில் காவல் ஆய்வாளர் பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் பாரதி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள ‌உள்ளனர். அவர்களின் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

News March 30, 2025

ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்தவர் கைது

image

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் செல்வநாயகம் (49). இவர் கடந்த 2022 முதல் 2025 வரையான காலத்தில் தீபாவளி மற்றும் தங்க நாணயம் சிறுசேமிப்பு திட்டம், மாதாந்திர ஏலச்சீட்டு மற்றும் பிற சேமிப்பு திட்டங்கள் நடத்தி சுமார் 800 க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூ.3 கோடிக்கு மேல், பணத்தையும் கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். இது குறித்து கடலூர் மாவட்ட குற்றபிரிவு போலீசார் வழக்குப்பதிந்து செல்வநாயகத்தை கைது செய்தனர்.

News March 30, 2025

சிவனிடம் தோல்வியடைந்த காளி எங்கே உள்ளார் தெரியுமா!

image

சிதம்பரத்தில் உள்ள தில்லைக்காளி சிவபெருமானுடன் போட்டி போட்டு ஆடிய காளிதேவி. சிவனுக்கும் அம்பாளுக்கும் நடனத்தில் போட்டி நிகழ்ந்தது. சிவன் வலதுகையைச் சுழற்றி ஆட, அம்பாளும் அவ்விதமே ஆடினாள். அவர் இடது காலைச் சுழற்றி ஆட, அவளும் அதேபோல் ஆடினாள். ஆனால் அம்பாள் போட்டியில் தோல்வி அடைந்து தில்லைகாளி என்ற பெயரோடு கோபத்துடன் கோயில் கொண்டாள். தில்லைக்காளி அருள் பெற SHARE பண்ணுங்க..

News March 30, 2025

திட்டக்குடி அருகே வாலிபர் போக்சோவில் கைது 

image

திட்டக்குடி அடுத்த சாத்தநத்தத்தைச் சேர்ந்த தமிழரசன் (22), என்பவர் 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ளும்படி மிரட்டியும், கடந்த 27ஆம் தேதி பஸ்சில் சென்ற போது, அருகில் அமர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இந்நிலையில் புகார் வந்ததையடுத்து, திட்டக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, திருப்பூரில் தலைமறைவாக இருந்த தமிழரசனை போக்சோவில் செய்துள்ளனர். 

News March 30, 2025

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர்

image

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம், சின்னவடவாடி ஊராட்சியில் நேற்று (29.03.2025) நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சிறப்புப் பார்வையாளராக கலந்து கொண்டார். இதில் பொது மக்கள் பல்வேறு கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்தனர். கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 29, 2025

 திருமணம் தடையா? இந்த கோயிலுக்கு போங்க

image

சிதம்பரத்தில் உள்ள கல்யாண வீரபத்திரர் கோயிலில் அமாவாசை அன்று சிறப்பு திருமண தடை நீங்க பிரார்த்தனை செய்யப்படுகிறது. இருபாலாரும் பரிகாரம் செய்ய வேண்டிய பொருட்களை கொண்டு வந்து அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டினால் நிச்சயம் விரைவாக திருமணம் நடைபெறும். இந்த கோயிலுக்கு சென்றுள்ளீர்கள் என்றால் கமெண்ட் பண்ணுங்க.. திருமணம் ஆகாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.. 

News March 29, 2025

கடலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

கடலூர் மாவட்டம், சி‌.முட்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. சுமார் 100 நிறுவனங்களுக்கும் மேல் பங்குபெறும் இந்த முகாமில் 10,000 பணி வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது. விவரங்களுக்கு 6379410073 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பயனுள்ளவர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்..

News March 29, 2025

கடலூர் மாவட்டத்தில் இன்று கிராம சபை கூட்டம்

image

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று (29.3.2025) காலை 11.30 மணி அளவில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பார்வையாளராக கலந்து கொள்ள உள்ளார். அதனால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கிராம சபை கூட்டத்தில் அளித்து பயன்பெறலாம். ஊர் மக்களுக்கு ஷேர் பண்ணுங்க..

error: Content is protected !!