Cuddalore

News December 26, 2025

21-ம் ஆண்டு நினைவு தினம்: கண்ணீர் கடலில் கடலூர்..

image

கடந்த 2006-ம் ஆண்டு, டிச.26-ம் தேதி தமிழக கடலோர பகுதிகளை சுனாமி பேரலை தாக்கியது. இதன் காரணமாக கடலூர், நாகை மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்தின் 21-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இன்று கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் பல்வேறு மீனவ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

News December 26, 2025

கடலூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், கடலூர் மாவட்ட மக்கள் 04142-233816 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News December 26, 2025

கடலூர்: ரோடு சரியில்லையா? சரி செய்ய எளிய வழி!

image

கடலூர் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். <>’நம்ம சாலை’<<>> என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, சேதமடைந்த சாலைகள் குறித்து உங்களால் புகைப்படங்களுடன் புகார் தெரிவிக்க முடியும். மாவட்ட சாலைகள் என்றால் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. ஷேர்

News December 26, 2025

கடலூர்: போதை பொருள் விற்ற 2 பேர் அதிரடி கைது!

image

கடலூர் மாவட்டம், முதுநகரில் போலீசார் கடந்த டிச.24-ம் தேதி நடத்திய சோதனையில், 21 கிலோ கஞ்சா, 130 போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்த தீபக் (25), சிவக்குமார் (24) உள்ளிட்ட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் தீபக் மற்றும் சிவக்குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர்களது குற்ற செயலை கட்டுப்படுத்தும் வகையில் 2 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News December 26, 2025

கடலூர்: போட்டித் தேர்வுக்கு பயிற்றுநர்கள் தேர்வு

image

அண்ணாமலை பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள உறுப்பு கல்லூரிகளிலில் பல்வேறு போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இதற்காக சிறந்த பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே விருப்பமுள்ளவர்கள் சுயவிவரத்துடன் வருகிற 31.12.2025-க்குள் கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்யர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News December 26, 2025

கடலூர்: பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம்

image

கடலூரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (29). இவர் 17 வயது சிறுமி ஒருவரை அடிக்கடி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கருவுற்ற நிலையில், அவருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், கடலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் மோகன்ராஜை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

News December 26, 2025

கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(டிச.25) இரவு 10 மணி முதல் இன்று(டிச.26) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 26, 2025

கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(டிச.25) இரவு 10 மணி முதல் இன்று(டிச.26) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 26, 2025

கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(டிச.25) இரவு 10 மணி முதல் இன்று(டிச.26) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 26, 2025

கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(டிச.25) இரவு 10 மணி முதல் இன்று(டிச.26) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!