India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, சிதம்பரம் எம்பி தொகுதியின் வேட்பாளராக சந்திரகாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியியல் துறையில் அரசர் முத்தையவேள் ஆய்வரங்கம், முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம் தொடக்க விழா, மகாகவி பாரதியார் – சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அறக்கட்டளை பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று (மார்ச் -19) நடைபெற்றது.
துணைவேந்தர் ராம.கதிரேசன் கலந்துகொண்டு முப்பெரும் விழாவை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
நாடாளுமன்ற தேர்தலை (2024) முன்னிட்டு கடலூர் முழுவதும் காவல்துறை சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் இன்று மாலை மஞ்சக்குப்பம் பகுதியில் டி.எஸ்.பி பிரபு தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்பொழுது கட்சி கொடியுடன் வந்த வாகனங்களை நிறுத்தி கொடிகளை அகற்றுமாறு வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளருக்கு அறிவுறுத்தினர்.
கடலூர், முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மணிலா காய் வரத்து 30.04 மூட்டை, மணிலா வரத்து 110.11 மூட்டை, பச்சை பயிறு வரத்து 0.69 மூட்டை மற்றும் நெல் (வெள்ளை பொன்னி) வரத்து 21.48 மூட்டை வந்துள்ளது. இது மட்டுமல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் கடலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்கு வரவில்லை.
சென்னையை சேர்ந்தவர் ரவுடி தனசேகரன். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவர் கடந்த 2 ஆண்டுகளாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் சிறையில் திரைப்படம் திரையிடப்பட்டது. அப்போது தனசேகர் தனக்கு விருப்பமான படத்தை திரையிடக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து சிசிடிவி கேமராவை உடைத்து வார்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் ரூ.13 லட்சம் செலவில் புதிதாக சோதனை சாவடி கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலந்து கொண்டு புதிய சோதனை சாவடி கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் உள்ள விசிகவிற்கு இரண்டு தொகுதிகள் அளிக்கப்பட்டது.சிதம்பரம்,விழுப்புரம் ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் விசிக போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியானது.இன்று சென்னையில் உள்ள விசிக அலுவலகத்தில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் 6-வது முறை போட்டியிடுகிறார்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் உள்ள விசிகவிற்கு இரண்டு தொகுதிகள் அளிக்கப்பட்டது.சிதம்பரம்,விழுப்புரம் ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் விசிக போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியானது.இன்று சென்னையில் உள்ள விசிக அலுவலகத்தில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் 6-வது முறை போட்டியிடுகிறார்.
மக்களவை தேர்தலையொட்டி, நாளை வேட்பு மனு தாக்கலுக்கான பணிகள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடன் வரும் கட்சி நிர்வாகிகளுக்கு அலுவலகத்திற்கு செல்ல அனுமதி கிடையாது; வாகனங்களை 100 மீட்டர் தூரத்தில் நிறுத்த வேண்டும்; இதனால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீ. தூரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு கோடு போடும் பணி நேற்று நடந்தது.
Sorry, no posts matched your criteria.