India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு கடற்கரை மாவட்டங்களில் ஒன்றாம் எண் புயல் கொண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தொடர் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் மற்றும் அணுகு கால்வாய் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று (07.09.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முதன்மை வேளாண் மையங்களிலும் நாளை முதல் பண மில்லா பரிவர்த்தனை முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் கூறுகையில், வேளாண் மையங்களில் இருந்து வழங்கப்படும் விதை, உரங்கள், பாதுகாப்பு மருந்துகள், வேளாண் கருவிகள் உள்ளிட்ட இடுபொருட்களையும் விவசாயிகள் தங்களது ஏ.டி.எம். கார்டு மற்றும் யு.பி.ஐ. அடையாள எண் மூலமாக பெற முடியும்.

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான கடலூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி 10.9.2024 முதல் 24.9.2024 வரை கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள ஏற்கனவே www.sdat.tn.in என்ற இணையதளத்தில் பதிவு செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பங்கேற்க முடியும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முதல் கட்டமாக 3000 கார்டுகள் விரைவில் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 8000 கார்டுகள் தகுதியானவை என கண்டறியப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 3000 கார்டுகள் பிரிண்டிங் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. நேற்று நள்ளிரவு நேரத்தில் இந்த சிறையின் பின்பக்க சுவர் அருகில் இருக்கும் சாலையில் இருந்து மர்மநபர்கள் யாரோ சிலர் பிளாஸ்டிக் டப்பாவில் உள்ள 15 மதுபாட்டில்களை சிறை வளாகத்திற்குள் வீசி சென்றனர். இதை பார்த்த சிறை காவலர்கள் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அதனை வீசிச்சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூா் மாவட்டத்தில் முறைப்படுத்திக் கொள்ளப்படாத வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் எச்சரித்துள்ளாா். அவா் வெளியிட்ட குறிப்பில், கடலூாரில் உள்ள கிராம ஊராட்சிகளிலும் 2.10.2023 முதல் மனைப்பிரிவு அனுமதி மற்றும் கட்டட வரைபட அனுமதி இணையதளம் மூலம் மட்டுமே பெறப்பட வேண்டும். மேலும், 2,500 சதுரடி கட்ட இணையவழியில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. நேற்று நள்ளிரவு நேரத்தில் இந்த சிறையின் பின்பக்க சுவர் அருகில் இருக்கும் சாலையில் இருந்து மர்மநபர்கள் யாரோ சிலர் பிளாஸ்டிக் டப்பாவில் உள்ள 15 மதுபாட்டில்களை சிறை வளாகத்திற்குள் வீசி சென்றனர். இதை பார்த்த சிறை காவலர்கள் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அதனை வீசிச்சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. நேற்று நள்ளிரவு நேரத்தில் இந்த சிறையின் பின்பக்க சுவர் அருகில் இருக்கும் சாலையில் இருந்து மர்மநபர்கள் யாரோ சிலர் பிளாஸ்டிக் டப்பாவில் உள்ள 15 மதுபாட்டில்களை சிறை வளாகத்திற்குள் வீசி சென்றனர். இதை பார்த்த சிறை காவலர்கள் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அதனை வீசிச்சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் 14ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடக்கிறது. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிவில், குடும்ப, தொழிலாளர் நல வழக்குகள், குற்றவியல் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, ஒரே நாளில் தீர்வு காணப்படுகிறது. இதனால் வழக்குகளால் ஏற்படும் கால, பண விரயங்கள் தவிர்க்கப்பட்டு உடனடி தீர்வு காணப்படும்.
Sorry, no posts matched your criteria.