Cuddalore

News April 19, 2024

வேப்பூர் அருகே வாக்குப்பதிவு தாமதம்!

image

2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(ஏப்.19) தமிழ்நாடு முழுவதும் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பெரியநல்லூர் காலனியில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரியநல்லூரில் வாக்குப்பதிவு தாமதமாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் வாக்கு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு சரிசெய்யப்பட்டு வருகிறது.

News April 19, 2024

காட்டுமன்னார்கோவிலில் ஓட்டு போட்ட அமைச்சர்

image

2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடக்கிறது. முன்னதாக 6 மணி முதல் 7 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்திற்கு சென்று, அங்குள்ள அரசுப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

News April 18, 2024

கடலூர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

image

கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொலைத் தொடர்பியல் பிரிவு சார்பில் 2023 – 24 ஆம் ஆண்டிற்கான கணினி தொடர்பியல் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சிகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

News April 18, 2024

கடலூர் தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

கடலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

News April 18, 2024

கடலூர் மாநகர மேயர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை

image

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதாக தகவல் வந்ததை அடுத்து இன்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள மாநகர மேயர் சுந்தரி ராஜா வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஏராளமான திமுக கட்சி தொண்டர்கள் திரண்டு உள்ளனர்

News April 18, 2024

கடலூரில் ஆயுதப்படை காவலர்களுக்கு அறிவுரை

image

நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் கடலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.இந்த நிலையில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் ஆயுதப்படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுரை வழங்கினார்.

News April 18, 2024

கடலூரில் இருந்து 120 சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

பாராளுமன்ற தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்காக கடலூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சிறப்பு பஸ்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு இயக்கப்படுகிறது. அதாவது கடலூரில் இருந்து சென்னைக்கு கூடுதலாக 100 பஸ்களும், பெங்களூருக்கு 5 பஸ், திருச்சி, சேலம் மற்றும் மதுரைக்கு தலா 5 பஸ்களும் இயக்கப்படுகிறது என கடலூர் போக்குவரத்து கழக அதிகாரி இன்று தெரிவித்தார்.

News April 18, 2024

தொழிலக பாதுகாப்பு அதிகாரி முக்கிய அறிவிப்பு

image

கடலூரில் தொழிலாளர்களுக்கு நாளை நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஓட்டளிக்க ஏதுவாக நாளை சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஓட்டுரிமை உள்ள தொகுதியில் ஓட்டுப்பதிவு நடக்கும் நாளன்று ஓட்டளிக்க வசதியாக சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் அளிக்க வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.

News April 18, 2024

தொழிலக பாதுகாப்பு அதிகாரி முக்கிய அறிவிப்பு

image

கடலூரில் தொழிலாளர்களுக்கு நாளை நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஓட்டளிக்க ஏதுவாக நாளை சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஓட்டுரிமை உள்ள தொகுதியில் ஓட்டுப்பதிவு நடக்கும் நாளன்று ஓட்டளிக்க வசதியாக சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் அளிக்க வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.

News April 18, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் இராஜாராம், சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் குணபாலன், நெய்வேலி காவல் ஆய்வாளர் வீரசேகரன் மற்றும் பண்ருட்டியில் காவல் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!