Cuddalore

News April 27, 2024

கடலூரில் அதிகபட்சமாக 96 டிகிரி வெயில் பதிவு!

image

கடலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பருவ மழை குறைவாக பெய்ததால் வெயிலின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இதுவரை 100 டிகிரி வரை வெப்பம் உயரவில்லை. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று வெயில் அளவு அதிகபட்சமாக கடலூரில் 96 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

News April 27, 2024

கடலூர்:தர்பூசணி விலை இரு மடங்கு உயர்வு

image

சிதம்பரம் அண்ணாமலை நகர், சிவபுரி மெயின்ரோடு, கொற்றவன்குடி தோப்பு போன்ற பகுதிகளில் தர்பூசணி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பீஸ் 10 ரூபாய்க்கு விற்பனையான தர்பூசணி தற்பொழுது 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் மக்கள் அதிக அளவில் வாங்குவதாலும் , தட்டுப்பாடு நிலவுகிறது அதனால் விலை உயர்வு என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

News April 26, 2024

கடலூர்: இன்று இரவு ரோந்து பணி

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் உதவி ஆய்வாளர் ஆனந்தன், சிதம்பரம் உதவி ஆய்வாளர் கலையரசன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சிவராமன், நெய்வேலி காவல் ஆய்வாளர் சுமதி மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் ஜம்புலிங்கம் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 26, 2024

கடலூர்: பெட்ரோல் குண்டு வீச்சு

image

காட்டுமன்னார்கோயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக இளைஞரிடம் போலீசார் விசாரணையில் மேம்பாலத்தில் இருந்து பெட்ரோல் குண்டு வீசியது போன்று சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த போலீசார்,கக்கன் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்கின்றனர்.செல்போன் பார்த்து செய்ததாக இளைஞர் கூறியுள்ளார்.

News April 26, 2024

கடலூரில் அமைச்சர் விளக்கம் 

image

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கடலூரில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், திருச்சியில் ஓடும் பஸ்சில் இருந்து இருக்கையுடன் கண்டக்டர் விழவில்லை. பஸ் இருக்கையை கண்டக்டர் சரி செய்தபோது தான் கழன்று விழுந்துள்ளது. இதற்கு அதிமுக ஆட்சியில் புதிய பஸ்கள் வாங்காததே காரணம். தற்போது 7 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 350 பஸ்கள் இயக்கப்பட உள்ளது என் கூறினார்.

News April 26, 2024

கடலூரில் போலீஸ் பயன்படுத்தும் வாகனங்களில்  ஆய்வு 

image

கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து விதமான வாகனங்களையும் மாதந்தோறும் ஆய்வு செய்வது வழக்கம் அதன்படி இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் போலீஸ் வாகனங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா? மற்றும் வேறு ஏதேனும் குறைகள் இருக்கிறதா? என ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பு சௌமியா தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செல்வ விநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

News April 26, 2024

கடலூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

image

சேத்தியாதோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சேத்தியாத்தோப்பு பேரூராட்சியின் செயல் அலுவலர் சீனிவாசன், உதவி இயக்குனர் பூங்குழலி மற்றும் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோரின் வீடுகளில் சோதனை செய்தனர்.

News April 26, 2024

கடலூர் மின்வாரியத்துறை கோட்ட அலுவலகம் இடமாற்றம்

image

கடலூர் சாவடியில் மின்வாரியத்துறை கோட்ட அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் தற்போது மின்வாரியத்துறை கோட்ட அலுவலகம், கடலூர் வெளிசெம்மண்டலம் வி.எஸ்.எல். நகருக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. அங்கு மே 1ஆம் தேதி முதல் செயல்பட தொடங்கும் என கடலூர் மின்வாரிய செயற்பொறியாளர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் இராஜாராமன் , சிதம்பரம் உதவி ஆய்வாளர் பரணிதரன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் பிரகஸ்பதி , நெய்வேலி காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 25, 2024

கடலூரில் போலீசார் தீவிர வாகன சோதனை

image

கடலூரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் இரவில் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையிலான போலீசார் கடலூரில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சிதம்பரத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரணிதரன், ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

error: Content is protected !!