India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது ஸ்ரீமுஷ்ணம் போலீசார் 4 பிரிவு கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை சிதம்பரம் அருகே உள்ள அக்ரி மங்கள கிராமத்தில் 19ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்களித்துவிட்டு வீடு திரும்பி அடித்து கொலை செய்யப்பட்டார்.சம்பவம் குறித்து பாஜக தலைவர் தவறான கருத்தை பதிவு செய்தார்.எதிர்ப்பு தெரிவித்து திமுக ஒன்றிய செயலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்கு
கடலூர் மாவட்ட மக்கள் வானொலி, தொலைபேசி, செய்தித்தாள் மூலமாக உள்ளூர் வானிலையை தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மோர், லஸ்ஸி, பழைய சோற்று நீர், எலுமிச்சைச் சாறு போன்ற பானங்களையும் பருக வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று மாலை தெரிவித்தார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் வசந்த உற்சவ நிறைவு நாள் மற்றும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு இன்று பாடலீஸ்வரர் கோயில் குளத்தில் பாடலீஸ்வரருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது இதற்காக கோயில் நடை அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இன்று காலை கோயில் அருகே உள்ள தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் அடுத்த குப்பங்குளத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி சிம்பு சாரதி என்பவர் இன்று காலமானார். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாநகராட்சி துணை மேயரும், வழக்கறிஞருமான பா. தாமரைச்செல்வன் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் வி.சி.க கடலூர் நகர அமைப்பாளர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் சூர்யா, கிருபா, ஜெகதீஸ்வரி உள்ளிட்ட பலர் இருந்தனர்.
விருத்தாசலம், பெரியார் நகர் கங்கை வீதி, வாலிபால் கிரவுண்ட் காம்பவுண்டு சுவர் அருகில் நீண்ட நாட்களாக குப்பை அகற்றப்படாமல் உள்ளது. இது குறித்து பலமுறை நகராட்சியில் கூறியும், அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் நோய் தொற்றும், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையில் இருக்கிறது. உடனடியாக இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால 2-ம் கட்ட நீச்சல் வகுப்புகள், சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் கடந்த 16-ம் தேதி துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த 2-ம் கட்ட பயிற்சி வகுப்பானது வரும் 28ஆம் தேதி அன்று முடிவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருத்தாசலம் அடுத்த கோபாலபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (60). இவர் நேற்று காலை விருதாச்சலத்தில் இருந்து தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அதே திசையில் பின்னால் வந்த மகேந்திரா டிரக் பைக் மீது மோதியது. அதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரம் குருவையர் தெருவில் உள்ள ஶ்ரீலஶ்ரீ அவதூத சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நேற்று முன்தினம் நடைபெற்றது கோயில் விமான கலசத்திற்கு கும்பநீரை தீட்சிதர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஶ்ரீலஶ்ரீஅவதூத சுவாமிகள் ஆலய நிர்வாகிகள் செய்தனர்
கடலூரில் இன்று வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் சுட்டெரிக்கும் வெயிலில் தலைகாட்ட முடியாமல் அவதி அடைந்தனர். மேலும் சாலைகளிலும் வாகன போக்குவரத்து குறைந்தே காணப்பட்டது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட கடலூர், மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானம் அருகே விற்கப்பட்ட பதநீரை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி பருகின்றனர்.
கடலூர், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோதண்டராம கோயிலில் கடந்த 17-ம் தேதி முதல் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி வரை என 11 நாட்கள் ராமநவமி மகோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை விசேஷ திருமஞ்சனமும் மாலை வீதி உற்சவமும் நடைபெற்றது. இந்த நிலையில் சிகர நிகழ்ச்சியான ராமர் பட்டாபிஷேக வைபவம் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.