Cuddalore

News May 21, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ரேவதி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா , விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கீதா, நெய்வேலி காவல் ஆய்வாளர் வீரசேகரன் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 21, 2024

கடலூர்: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

image

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வானிலை மாற்றம் காரணமாக கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் இருக்கும். இதனால் கடல் அலை வழக்கத்தை விட அதிக சீற்றத்துடன் காணப்படும். எனவே கடலூர் மாவட்ட மீனவர்கள் இன்று முதல் வருகின்ற 23-ந் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News May 21, 2024

கடலூரில் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

image

கடலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் தலைமையில் ஊரக வளர்ச்சித் துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News May 21, 2024

கடலூர் அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

சிதம்பரம் அருகே உள்ள வத்திராயன்கொத்து கிராமத்தை சேர்ந்தவர் சம்மதம். இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் மஞ்சகொள்ளை கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தார்.  சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 21, 2024

கடலூர் மழைக்கு வாய்ப்பு

image

கடலூர் மாவட்டத்தில் இன்று (மே.21) மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. கடலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 21, 2024

கடலூர்: 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு

image

கடலூரில் நேற்று சில இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. மேலும் கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் நேற்று மிதமாக இருந்தது. இந்த நிலையில் கடலூரில் நேற்று 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

News May 20, 2024

கடலூரில் இளநீர் விற்பனை படுஜோர்

image

கடலூர், திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று சீதோஷ்ண நிலை குறைந்தும் மற்றும் அதிகமாகவும் கலந்து காணப்பட்டது. இதனால் கடலூர் பொதுமக்கள் உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீரை அதிக அளவில் வாங்கி பருகி வருகின்றனர். இந்த நிலையில் கடலூரில் ஒரு இளநீர் 30 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

News May 20, 2024

கடலூர்: ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் உதவி ஆய்வாளர் உத்திரமாள் , சிதம்பரம் காவல் ஆய்வாளர் கலையரசன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் ரவிக்குமார், நெய்வேலி காவல் ஆய்வாளர் பிருந்தா மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 20, 2024

விருத்தாசலம்: தாய்மாமன் மீது பாய்ந்தது போக்சோ!

image

விருத்தாசலம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கோட்டுமுளை கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் (15).சிறுமி.இவரது தாய்மாமனான (21) வாலிபர் ஆசை வார்த்தை கூறி வன்கொடுமை செய்ததில் மாணவி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் மகளிர் காவல் நிலையம் போலீசார் மாணவியின் தாய்மாமன் மீது நேற்று போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரிகின்றனர்.

News May 20, 2024

கடலூர்: மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

image

கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக்கல்லூரியில் 2024-2025-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 8-ந் தேதி முதல் இன்று வரை நடந்தது. இதில் விண்ணப்பிக்க கடைசி நாளான இன்று வரை இளங்கலை படிக்க 1500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு வருகிற மே 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கல்லூரியில் நடக்கிறது.

error: Content is protected !!