India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனை முன்னிட்டு கடலூர் செம்மண்டலம் பகுதியில் கோடை வெயிலுக்கு குளிர்ச்சியான குடிநீர் வழங்கும் மண் பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது. இதுகுறித்து மண்பானை விற்பனையாளர்கள் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வீடு, அலுவலகத்திற்கு என பொதுமக்கள் மண் பானைகள் வாங்க ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்தனர்.
சிதம்பரத்தில் உள்ள தில்லை நடராஜர் கோயில், தில்லை கூத்தன் கோயில் என்றும் அறியப்படுகின்றது. இவ்வூர் தில்லை என புராணகாலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. இத்தலம் 4000 ஆண்டுகளுக்கும் பழமையானதாக கருதப்படுகிறது. சைவ குரவர்கள் நால்வராலும் தேவாரம் பாடப்பட்ட தலமாகும். மனித உடலே கோயில் என்பதைக் குறிக்கும் வகையில் இக்கோவில் அமைக்கப்படிருக்கிறது. கிழக்கு கோபுரத்தில் 108 சிவதாண்டவச் சிற்பங்கள் செதுக்கப்படுள்ளது.
கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால 2-ம் கட்ட நீச்சல் வகுப்புகள், சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் கடந்த 16-ம் தேதி துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த 2-ம் கட்ட நீச்சல் பயிற்சி வகுப்பானது நாளையுடன் (28-ஆம் தேதி) நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பருவ மழை குறைவாக பெய்ததால் வெயிலின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இதுவரை 100 டிகிரி வரை வெப்பம் உயரவில்லை. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று வெயில் அளவு அதிகபட்சமாக கடலூரில் 96 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை நகர், சிவபுரி மெயின்ரோடு, கொற்றவன்குடி தோப்பு போன்ற பகுதிகளில் தர்பூசணி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பீஸ் 10 ரூபாய்க்கு விற்பனையான தர்பூசணி தற்பொழுது 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் மக்கள் அதிக அளவில் வாங்குவதாலும் , தட்டுப்பாடு நிலவுகிறது அதனால் விலை உயர்வு என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் உதவி ஆய்வாளர் ஆனந்தன், சிதம்பரம் உதவி ஆய்வாளர் கலையரசன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சிவராமன், நெய்வேலி காவல் ஆய்வாளர் சுமதி மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் ஜம்புலிங்கம் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுமன்னார்கோயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக இளைஞரிடம் போலீசார் விசாரணையில் மேம்பாலத்தில் இருந்து பெட்ரோல் குண்டு வீசியது போன்று சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த போலீசார்,கக்கன் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்கின்றனர்.செல்போன் பார்த்து செய்ததாக இளைஞர் கூறியுள்ளார்.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கடலூரில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், திருச்சியில் ஓடும் பஸ்சில் இருந்து இருக்கையுடன் கண்டக்டர் விழவில்லை. பஸ் இருக்கையை கண்டக்டர் சரி செய்தபோது தான் கழன்று விழுந்துள்ளது. இதற்கு அதிமுக ஆட்சியில் புதிய பஸ்கள் வாங்காததே காரணம். தற்போது 7 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 350 பஸ்கள் இயக்கப்பட உள்ளது என் கூறினார்.
கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து விதமான வாகனங்களையும் மாதந்தோறும் ஆய்வு செய்வது வழக்கம் அதன்படி இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் போலீஸ் வாகனங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா? மற்றும் வேறு ஏதேனும் குறைகள் இருக்கிறதா? என ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பு சௌமியா தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செல்வ விநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
சேத்தியாதோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சேத்தியாத்தோப்பு பேரூராட்சியின் செயல் அலுவலர் சீனிவாசன், உதவி இயக்குனர் பூங்குழலி மற்றும் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோரின் வீடுகளில் சோதனை செய்தனர்.
Sorry, no posts matched your criteria.