India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டாரம், நெய்வேலி மாநில எண்ணெய் வித்து பண்ணையில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் நொச்சி, ஆடாதொடா நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இன்று (04.09.2024) துவக்கி வைத்தார். அப்போது பல்வேறு துறை அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

தமிழக காவல்துறை மாநில அளவிலான துப்பாக்கி குண்டு சுடும் போட்டி 26.09.2024 முதல் 28.09.2024 வரை சென்னை கமாண்டோ பள்ளி சார்பில் ஒத்திவாக்கத்தில் நடைபெற்றது. இதில் 300 யாட்ஸ் Insas துப்பாக்கி சுடும் போட்டியில் நெய்வேலி நகர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் ராஜேஸ்வரி 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவரை இன்று கடலூர் எஸ்.பி.ராஜாராம் பாராட்டினார்.

தேசிய விடுமுறை நாளான காந்தி ஜெயந்தி தினத்தன்று கடலூர் மாவட்டத்தில் 50 நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விடுப்பு அளிக்காததும், பணியாளர்கள் பணிபுரிய முன் அனுமதி பெறாததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் 50 கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

புதுச்சேரி மாநிலம் மடுகரையை சேர்ந்த தாடி அய்யனார் (30) மீது புதுச்சேரி மங்கலம் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்படுகிறது. மேலும் இவர் மீது புதுச்சேரி மாநிலம் மற்றும் விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 21 வழக்குகள் உள்ளது. இதனால் கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்பேரில் தாடி அய்யனார் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

காட்டுமன்னார்கோயில் அடுத்த செட்டிகட்டளையை சேர்ந்தவர் விக்னேஷ் மனைவி பவித்ரா (25). திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. கர்ப்பமாக உள்ள பவித்ரா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்தார். இந்நிலையில் நேற்று பவித்ரா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வயலூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 98 ஆயிரம் மதிப்பில் நர்சரி கார்டன் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

குறிஞ்சிப்பாடி அடுத்த தம்பிப்பேட்டையை சேர்ந்தவர் கதிர்வேல் மனைவி உமா (40). இவர் பக்கத்து வீட்டை சேர்ந்த சோமு என்பவர் தன்னை தாக்கியதாகவும், இதுதொடர்பாக குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று மதியம் 1 மணி அளவில் கடலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு விஷம் குடித்து விட்டு மனு அளிக்க வந்தார். உடனே போலீசார் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் அதனை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் ஆக்.05 ஆம் தேதி சேப்பாக்கம் நிருபர்கள் சங்ககட்டிடத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க வேல்முருகன் அழைப்பு விடுத்துள்ளார்

பண்ருட்டியில் பல்வேறு இடங்களில் செல்போன்கள் வழிப்பறி செய்த இருவர் கைது. பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனத்தில் வருபவர்களிடம் செல்போன்கள் வழிப்பறி திருட்டு நடந்ததால் பொதுமக்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வாகன சோதனையில் பண்ருட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த காமேஷ் (24), இவரது நண்பர்மதன் (19) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் 18வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும், வீட்டு வழி கல்வியில் பயிற்சி பெற்று வரும் மாற்றுதிறனுடைய குழந்தைகளுக்கும் மருத்துவ முகாம் ,அளவீட்டு முகாம்கள் மற்றும் அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் தகுதியுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் ஆட்சியர் அறிவிப்பு
Sorry, no posts matched your criteria.