Cuddalore

News May 1, 2024

கடலூர் மாவட்டத்தில் நேற்றைய வெப்பநிலை….

image

கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்ரல் -30) விருத்தாசலம் 41 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 41 டிகிரி செல்சியஸ், பண்ருட்டி 40 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோவில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 40 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது

News May 1, 2024

கடலூர் மத்திய சிறையில் ‘கஞ்சா’ பறிமுதல்

image

கடலூர் மத்திய சிறையில் விசாரணை (ம) தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று தலைமை காவலர், மோப்ப நாயுடன் சிறை வளாகத்தில் சோதனை ஈடுபட்டனர். அப்போது சிறை பள்ளிக்கு பின்புறம் மரத்தின்கீழ் 20 கிராம் கஞ்சா பொட்டலமாக கட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது . இதையடுத்து சிறை காவலர்கள் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். புகாரின் பேரில் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

News May 1, 2024

கடலூர் மத்திய சிறையில் ‘கஞ்சா’ பறிமுதல்

image

கடலூர் மத்திய சிறையில் விசாரணை (ம) தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று தலைமை காவலர், மோப்ப நாயுடன் சிறை வளாகத்தில் சோதனை ஈடுபட்டனர். அப்போது சிறை பள்ளிக்கு பின்புறம் மரத்தின்கீழ் 20 கிராம் கஞ்சா பொட்டலமாக கட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து சிறை காவலர்கள் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். புகாரின் பேரில் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

News May 1, 2024

கடலூர் போலீசார் முக்கிய அறிவிப்பு

image

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக புகார் அளிக்க 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று தெரிவித்துள்ளனர்.

News April 30, 2024

கடலூர்: தம்பதியினர் பலி

image

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்து புதுக்கூரைப்பேட்டை அருகே தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி பேருந்து எதிரில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் செல்வகுமார்-சபிதா தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பெற்றோர் விபத்தில் பலியான நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தையை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News April 30, 2024

கடலூரில் தர்பூசணி விற்பனை அமோகம்

image

கடலூரில் இன்று வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வெயிலில் இருந்து வெப்பத்தை சமாளிக்க கடலூர் பகுதி பொதுமக்கள் குளிர்ச்சியான பழங்கள் மற்றும் பழங்களின் ஜூஸ்களை அணுகி வருகின்றனர். மேலும் தற்போது தர்பூசணி சீசன் என்பதால் சாலை ஓரங்களில் ஆங்காங்கே தர்பூசணி வியாபாரிகள் கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்த கடைகளில் தர்பூசணி 1 கிலோ 20 முதல் 25 ரூபாய் வரை கடலூரில் விற்கப்படுகிறது.

News April 30, 2024

கடலூர்: அகற்றும் பணி தடுத்து நிறுத்தும்

image

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் உத்தரவின் பேரில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று காலை நடைபெற்றது. அப்பொழுது வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று திமுக மாநகர செயலாளர் ராஜா நேரில் வந்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். வியாபாரிகளுக்கு கூடுதல் அவகாசம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

News April 30, 2024

கடலூர்:கார் மீது பைக் மோதியதில் தகராறு; 2 பேர் மீது வழக்கு!

image

கடலூர் முதுநகரை சேர்ந்தவர் கந்தன்.இவர் முதுநகரில் இருந்து கடலூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.சிவானந்தபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அங்கு நிறுத்தி இருந்த பரணி முருகனின் காரின் பின்பகுதியில் கந்தன் ஓட்டி வந்த பைக் மோதியது.இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.இது தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் முதுநகர் போலீசார் கந்தன், பரணி மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

News April 30, 2024

கடலூர் அருகே திடீர் விலை உயர்வு

image

விருதாச்சலம் பகுதியில் விற்பனை சூடு பிடித்துள்ள நிலையில் நேற்று முதல் இளநீர் விலை திடீர் உயர்வு, வெயிலின் தாக்கத்தால், கோடை காலத்தில் உடலின் உஷ்ணத்தை தணிக்க, இளநீரை விரும்பி அருந்துகின்றனர். ரூ. 25 முதல் ரூ.40 வரை விற்பனையான நிலையில், தற்போது 30 முதல் 50 வரை விற்கப்படுகிறது. விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி அருந்துகின்றனர்.

News April 30, 2024

கடலூர்:மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் செய்த செயல்

image

புதுச்சேரி மரப்பாலம் திருப்பூர் குமரன் நகரை சேர்ந்த முனுசாமி தீபா இவர்களின் மகன் கணேஷ் (10) வயதுள்ள சிறுவன் வீட்டில் கோபித்துக் கொண்டு சிதம்பரம் கஞ்சி தொட்டி அருகே பேருந்தில் நின்று கொண்டிருந்தார்.மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த சின்னையன் அடைத்து பேசி யார் என விசாரித்து புதுச்சேரி காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தார்.இந்த செயல் பொதுமக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

error: Content is protected !!