India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திட்டக்குடியை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் (42). இவர் நேற்று தனது குடும்பத்துடன் ஏற்காடு சுற்றுலா சென்று விட்டு நள்ளிரவு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததுடன், பீரோவில் வைத்திருந்த ரூ.12 லட்சம் மதிப்பிலான 21 பவுன் நகைகளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திட்டக்குடியை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் (42). இவர் நேற்று தனது குடும்பத்துடன் ஏற்காடு சுற்றுலா சென்று விட்டு நள்ளிரவு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததுடன், பீரோவில் வைத்திருந்த ரூ.12 லட்சம் மதிப்பிலான 21 பவுன் நகைகளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
கடலூரில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து, திண்டிவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ள மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தில் இருந்த 60 பயணிகள் காயங்கள் இன்றி உயிர் தப்பினர். இதையடுத்து காயமடைந்தவா்களை சக பயணிகள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள மிராளூர் கிராமத்தைச் சேர்ந்த அப்பாதுரை மனைவி புரட்சிமணி (55). இவர், நேற்று காலை 7 மணி அளவில் பால் வாங்குவதற்காக சிதம்பரம் விருத்தாசலம் சாலையில் மிராளூர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார்.
லாரி எதிர்பாராத விதமாக புரட்சிமணி மீது மோதியதில், பலத்த காயமடைந்து நிகழ்விடத்தில் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று கடலூர் 35 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 34, புவனகிரி 34 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 34 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 36, விருத்தாசலம் 34 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 34 டிகிரி செல்சியஸ், பண்ருட்டி 36 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 36 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
கடலூர், தேவனாம்பட்டினம், செம்மண்டலம், மஞ்சக்குப்பம், நத்தப்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அக்னி நட்சத்திரம் துவங்கியது முதல் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கடலூரில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடும் வெயிலால் கடலூர் மக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள புனித வளனார் கல்லூரியில் 1996-1999-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள் தங்களின் பழமையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் கல்லூரி தாளாளர் ரட்சகர் அடிகளார் கலந்து கொண்டு, கல்லூரியின் சிறப்பு, மாணவர்கள் பற்றி பேசினார்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (12/05/24) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ரேவதி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் ஜெர்மின் லதா, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் தனசேகர், நெய்வேலி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் ஜாவ்வது உசைன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.