India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிதம்பரம் ஞானப்பிரகாசம் குளத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடராஜர் கோயிலில் தரிசன விழா, தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசு வேளாண் அமைச்சர் மூலமாக 15 கோடி நிதி ஒதுக்கி கோயில் குளத்தை சீர் செய்தனர். மார்கழி 4ஆம் தேதி துவக்க விழா, 15ஆம் தேதி நிறைவு விழா நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

நெல்லிக்குப்பம் அருகே முள்ளிகிராம்பட்டை சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் சசிகுமார் (19). இவர் கடலூரில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 16 வயதுடைய சிறுமியிடம் பழகி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி 2 மாத கர்ப்பமானார். இது குறித்து பண்ருட்டி போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சசிகுமார் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்” (NADCP) கீழ் கடலூர் மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டில் 3.1.2025 முதல் 31.1.2015 வரை கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப்பணி அனைத்து கிராமங்களிலும் 3 இலட்சம் எண்ணிக்கை உள்ள பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கும் 100% தடுப்பூசிப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 83 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2024ஆம் ஆண்டில் தொடர் கொலை, கொள்ளை, சாராய கடத்தல், கஞ்சா விற்பனை போன்ற குற்ற செயலில் ஈடுபட்ட 101 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். மேலும் 16 போக்சோ குற்ற வழக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 16 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் எஸ்.பி ராஜாராம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பண்டிகை காலங்களில் மது விற்பனையானது உச்சம் தொடுவது தற்போது வழக்கமான ஒன்றாகவே மாறிவிட்டது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் புத்தாண்டை முன்னிட்டு, சுமார் 4.5 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இருப்பினும் இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.51 லட்சம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பற்றிய உங்கள் கருத்து? கமெண்டில் தெரிவிக்கவும்! ஷேர் செய்யவும்..

கடலூர் மாவட்டம், திருமுட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் ரிஷிகா மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் ரித்திகா ஆகியோர் கடலூர் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று இருவரும் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். அவர்கள் இருவரும் இன்று கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வனை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர். உடன் விசிக நிர்வாகிகள் உள்ளனர்.

2025ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் தொழில்துறை அமைச்சருமான எம்.சி. சம்பத் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் “அனைவருக்கும் 2025ஆம் ஆண்டு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு நீங்கள் உங்கள் வீடுகளில் போடும் அசத்தலான கோலங்களை Way2News-இல் பதிவிடலாம். நீங்கள் போடும் கோலங்களை உங்கள் பெயருடன் போட்டோ எடுத்து, உங்கள் பெயர், மாவட்டம், தாலுகா, கிராமம் உள்ளிட்ட விவரத்தை பதிவிட்டு, அனுப்பி வைக்கவும். இதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன? என்ற விவரம் மேலே உள்ள வீடியோவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த புத்தாண்டை way2news உடன் கொண்டாடி மகிழுங்கள்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை சம்பவத்தில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பெண்கள் உட்பட 1475 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்ருட்டி அருகே சூரக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (23). திருமணமாகாத இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடந்த தனது தங்கையின் திருமண செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடனை திருப்பி அளிக்க முடியாத காரணத்தால் மிகுந்த மன வேதனை அடைந்த விக்னேஷ் விஷம் அருந்தியதில் நேற்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.