India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஐ.பி.எஸ்., கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டு கொலை வழக்கு சம்மந்தமாக அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிலையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.ஜெயக்குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீர் நிலைகளை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் பொதுமக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகளைப் போற்றி கவுரவிக்கும் வகையில் “முதலமைச்சரின் நீர்நிலைப் பாதுகாவலர்” விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற விருப்பமுள்ளவர்கள் http://awards.tn.gov.in என்ற வலைதளம் மூலம் வருகிற 17.01.2025-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பில் வழங்கப்படவுள்ள கரும்பின் தரம் மற்றும் அளவு குறித்து குறிஞ்சிப்பாடி வட்டம், கோரணப்பட்டு பகுதியில் உள்ள கரும்பு வயலில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

நெய்வேலி பிளாக் 11 டவுன் ஷிப் லிக்னைட் ஹாலில் 01-01-2025 முதல் 13-01-2025 வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. கைவினைப் பொருட்கள், கைத்திறன் துணி வகைகள், நகை வகைகள் மற்றும் கைத்திறன் அறைகலங்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் 10% தள்ளுபடி பெற்று பொருட்களை வாங்கி பயன்பெறலாம் என கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளினை சிறப்பிக்கும் வகையில் அறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி இன்று காலை 8 மணிக்கு கடலூர், சாவடி அக்ஷ்சரா வித்யாசரம் மெட்ரிக்குலேசன் பள்ளியில் தொடங்கி நடைபெறும். இதில் 13, 15 மற்றும் 17 வயதுக்குள் உள்ளவர்கள் போட்டிகளில் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

பொங்கலை முன்னிட்டு சிதம்பரம் வழியாக தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் 13-01-2025 கன்னியாகுமரியில் இருந்து 14-01-2025 அன்று தாம்பரத்தில் இருந்தும் புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. விரைவில் முன்பதிவு சேவையும் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருங்குழி ஊராட்சியில் ரூ.80.5 இலட்சம் மதிப்பீட்டில் 23 திருநங்கைகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் குடியிருப்புகளை ”நிறைந்தது மனம்” திட்டத்திற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இன்று (03.01.2025) திருநங்கைகளுடன் சென்று பார்வையிட்டார்.

கடலூர் மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 7 குழந்தைகள், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, வேப்பூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் 14 குழந்தைகள் என மொத்தம் 21 குழந்தைகள் புத்தாண்டு தினத்தில் பிறந்துள்ளது.

கடலூர், நாணமேடு மற்றும் உச்சிமேடு கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கோமாரி தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று தொடங்கி வைத்தார். இந்த முகாமில் செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம் போன்ற சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. தொடர்ந்து பயனாளிகளுக்கு பசுந்தீவனம், தாது உப்பு கலவை ஆகியவற்றை வழங்கினார்.

கடலூர் : சிதம்பரம் வட்டம், சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் ஆருத்ர தரிசனம் முன்னிட்டு ஜன.13ஆம் தேதி அன்று ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார். அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பிப்.01ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.