India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் உண்ணாமலை செட்டி சாவடியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் அருகில் வருகிற 22 மற்றும் 23-ம் தேதிகளில் தென்னிந்திய அளவிலான மாபெரும் கபாடி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி 22-ம் தேதி மாலை 3 மணிக்கு துவங்கும். போட்டியில் பங்கேற்பவர்கள் கட்டாயம் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும். ஆட்டம் அனைத்தும் செயற்கை ஆடுகளத்தில் நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை உண்ணாமலை செட்டிசாவடி மக்கள் செய்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை திருத்தம், வாக்காளர் அட்டை, முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை வழங்கிட சம்பந்தபட்ட துறைகள் ஒருங்கிணைந்து வருகிற 21-ம் தேதி காலை 10 மணிக்கு திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமை கடலூரில் நடத்துகிறது என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.
கடலூரில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 1.10.2023 முதல் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மனை வரன்முறை அனுமதி மற்றும் கட்டிட வரைபட அனுமதி ஆகியவற்றை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் இணையதளம் மூலம் மட்டுமே பெற வேண்டும்.நேரடி அனுமதி பெற்றிருந்தால் செல்லாது.மேலும் நேரடியாக அனுமதி பெற்றிருப்பின் அவற்றை தற்போது, முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரத்தில் இருந்து கடலூர் வழியாக ராமநாதபுரத்திற்கு ஜூன் 21, 23, 28, 30 மற்றும் ஜூலை 5, 7, 12, 14, 19, 21, 26, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது தாம்பரத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு கடலூருக்கு 10.55 மணிக்கு வந்து செல்கிறது. மறுமார்க்கமாக மாலை 3 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு கடலூருக்கு இரவு 11.05-க்கு வந்து செல்கிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று ஈகத் மைதானத்தில் பக்ரீத் கூட்டுத் தொழுகை அனைத்து
இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஏராளமான இஸ்லாமியர்கள் திரளாக கலந்துக்கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டனர். இந்நிகழ்ச்சியை அனைத்து ஜமாத் அமைப்பினரும் ஒன்றிணைந்து பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகளை செய்யதிருந்தனர்.மேலும் பக்ரீத் வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசல் எதிரில் உள்ள திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் டவுன்ஹாலில் மற்றும் மஞ்சகுப்பம் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் கூட்டுத் தொழுகை நடைபெற்றது. இதற்காக இன்று அதிகாலையில் எழுந்து புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ஈகை திருநாளை வாழ்த்துக்கள் சொல்லி பரிமாறி கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் பெரும்பாலான மக்களுக்கு ரேஷன் கடைகளில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு வழங்கவில்லை. அதனால் பருப்பு, பாமாயில் கிடைக்க பெறாத குடும்ப அட்டைதாரர்கள் வருகிற ஜூன் 30-ந்தேதி வரை ரேஷன் கடைகளுக்கு சென்று பெற்றுக்கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் பெரும்பாலான மக்களுக்கு ரேஷன் கடைகளில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு வழங்கவில்லை. அதனால் பருப்பு, பாமாயில் கிடைக்க பெறாத குடும்ப அட்டைதாரர்கள் வருகிற ஜூன் 30-ந்தேதி வரை ரேஷன் கடைகளுக்கு சென்று பெற்றுக்கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூன் 16) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் இராஜராஜன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் குணபாலன், நெய்வேலி காவல் ஆய்வாளர் சந்திரன் மற்றும் சேத்தியாத்தோப்பில் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அதன்படி இன்று இரவு 7 மணி வரை கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.