Cuddalore

News July 19, 2024

கடலூர் முதுநகர் துறைமுகத்தில் ஒன்றாம் கூண்டு ஏற்றம்

image

வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளதை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று கடலூர் முதுநகர் துறைமுகம் பகுதியில் புயல் தூர எச்சரிக்கை காரணமாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது.

News July 19, 2024

கடலூர் மாவட்ட புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு

image

கடலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய டாக்டர். அருண் தம்புராஜ், தற்போது மாநில சுகாதாரத்துறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து கடலூர் மாவட்ட புதிய ஆட்சியராக சிபி ஆதித்ய செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டு இன்று கடலூர் மாவட்ட ஆட்சியராக சிபி ஆதித்ய செந்தில்குமார் பொறுப்பேற்றார். இதையடுத்து கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பலர் புதிய ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News July 19, 2024

நாளை ரேஷன் கடைகள் இயங்காது

image

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (ஜூலை 20) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் கடலூர் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.

News July 19, 2024

மூவர் கொலையில் 2 இளைஞர்கள் கைது

image

நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தை சேர்ந்த கமலேஸ்வரி (60), இவரது மகன் சுகந்த்குமார் (40), பேரன் நிஷாந்த் (10) ஆகியோர் கடந்த 15 ஆம்  தேதி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில்  காராமணிக்குப்பம் சீத்தாராம் நகரை சேர்ந்த சங்கர் ஆனந்த் (21), ஷாகுல்அமீது (20) போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். மேலும் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

News July 19, 2024

44 உதவி ஆய்வாளர்களுக்கு பணியிட மாற்றம்

image

கடலூர் மாவட்டத்தில் பொருளாதார குற்றப்பிரிவு, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, தனிப்பிரிவு மற்றும் சட்டம்- ஒழுங்கு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 44 உதவி ஆய்வாளர்கள் கடலூர் மாவட்டத்திற்குள்ளேயே வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு நேற்று(ஜூலை 18) கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பிறப்பித்துள்ளார்.

News July 19, 2024

கடலூர் ஆட்சியருக்கு நினைவு பரிசு வழங்கி வழியனுப்பி வைப்பு

image

கடலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய டாக்டர். அருண் தம்புராஜ் ஐ.ஏ.எஸ், தற்போது மாநில சுகாதாரத்துறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந் நிலையில் கடலூரைச் சேர்ந்த ரத்த உறவுகள் அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாகிகள் நேற்று (ஜூலை 18) வியாழக்கிழமை டாக்டர் அருண்தம்புராஜை நேரில் சந்தித்து நினைவு பரிசு வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

News July 18, 2024

15 ஹான்ஸ் மூட்டைகளை பறிமுதல்

image

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகிலுள்ள மேல் ஆதனூர் கிராமத்தை சேர்ந்த கருப்புசாமி மகன் பால்ராஜ். ஆவட்டி குடிக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்தி. இவர்கள் இருவரும் இன்று(ஜூலை 18)ஆட்டோவில் எடுத்துச் சென்ற ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 15 ஹான்ஸ் மூட்டைகளை ராமநத்தம் போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

News July 18, 2024

மூன்று பேர் கொலை வழக்கில் 2 பேர் பிடிபட்டனர்

image

கடலூர் அருகே ஐ.டி ஊழியர் உட்பட அவரது குடும்பத்தினர் இரண்டு பேர் வெட்டி கொல்லப்பட்டு உடல்கள் எரிக்கப்பட்டன. கொலை தொடர்பாக போலீசார் 7 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் ராஜாராம் நகரை சேர்ந்த இளைஞரை சென்னையில் தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞரையும் கைது செய்துள்ளனர். இவர்களிடம் கொலை குறித்த விசாரானை நடைபெற்று வருகிறது.

News July 18, 2024

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

image

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் மற்றும் கொலை வழக்கை சிபிஜ விசாரிக்க கோரியும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் தணிகைச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் அமர்நாத் வரவேற்புரையாற்றினார். இதில் அக்கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

News July 18, 2024

கடலூர் – புதுவை சாலையில் போக்குவரத்து மாற்றம்

image

கடலூர்-புதுச்சேரி சாலையில் நைனார்மண்டபத்தில் அமைந்துள்ள நாக முத்துமாரியம்மன் கோவிலின் 41-ஆம் ஆண்டு செடல் திருவிழா நாளை(ஜூலை19) நடைபெறவுள்ளது. இத்திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகம் என்பதால், கடலூரிலிருந்து பாண்டி செல்லும் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நாளை மதியம் 2 மணி முதல் தவளக்குப்பம் சந்திப்பிலிருந்து வில்லியனூர் வழியாக புதுச்சேரி செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!