India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரே நேரத்தில் சொல்லி வைத்தார் போல, ஒன்றின் பின் ஒன்றாக ஒவ்வொரு நிறுவனங்களும் அவற்றின் போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலைகளை உயர்த்தியுள்ளன. இந்நிலையில் கடலூரில் பொதுமக்கள் பலர் இப்போது மிகவும் மலிவு விலையில் சிறப்பு சலுகைகளை வழங்கும் அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனத்தின் சிம் கார்டுகளை போட்டி போட்டு மக்கள் வாங்கி செல்கின்றனர்.
வடலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஈட்டி எறியும் பயிற்சியின் போது மாணவனின் தலையில் பாய்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மாணவன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பள்ளியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மகனின் நிலையை கண்டு துக்கம் தாளாத தாய் சிவகாமி, தற்கொலைக்கு முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் நீதிமன்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “போக்குவரத்து துறையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் அதிக அளவில் ஓய்வு பெறுவதால் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். போக்குவரத்து துறை தனியார் மையம் என கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் பேசி வருகின்றனர். அது பொய்யான தகவல்” என தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம், அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் வருகிற ஜூலை.31-ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். அதன்படி செராமிக் தொழில்நுட்பம் சார்ந்த 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளில் சேர நாளை கடைசி நாள் ஆகும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாணவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. SHARE IT WITH YOUR FRIENDS!
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் இன்று (28/7/2024) கடலூர் 37 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 37 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 38 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 38 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 38 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 38 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நாளை ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை, கலைவாணர் அரங்கில், காலை 9:30 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில், கடலூர் மாநகராட்சி ஆணையர், பொறியாளர்கள், நகர் நல அலுவலர்கள், கடலூர் மாவட்ட நகராட்சி ஆணையர்கள் மற்றும், பொறியாளர்கள் முன்னேற்ற அறிக்கையுடன் பங்கேற்குமாறு நகராட்சி நிர்வாகங்கள் இயக்குனர்களும் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் அடுத்த அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் கொள்ளிடம் ஆற்றின் கரை பகுதியில் வெள்ள தடுப்பு நடவடிக்கைக்காக ஆற்றின் கரையோரம் கருங்கற்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ள தடுப்பு சுவரை இன்று கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் அதிமுக வார்டு செயலாளர் பத்மநாதன் படுகொலையை கண்டித்து , எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது: பத்மநாதன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற சம்பவம் கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன். அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார் அவர்.
புதுச்சேரி மாநில எல்லைப்பகுதியான திருப்பனாம்பாக்கம் அருகே கடலூர் நவநீதம் பகுதி அதிமுக வார்டு செயலாளர் பத்மநாதன் (43) மர்ம நபர்களால் இன்று காலை வெட்டி கொல்லப்பட்டார். அதிகாலை கோவில் கலை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது, காரில் வந்த மர்ம நபர்கள் அவரது பைக்கை இடித்து கீழே தள்ளி வெட்டி கொன்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இங்கு செராமிக் தொழில்நுட்பம் சம்பந்தமான மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பு வழங்கப்படுகின்றது. இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. SHARE IT WITH YOUR FRIENDS!
Sorry, no posts matched your criteria.