Cuddalore

News July 4, 2024

பங்கில் பதுக்கிய 2000 லிட்டர் மெத்தனால்

image

கள்ளச்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் அவ்வழக்கில் கைதான மாதேஷ் என்பவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பண்ருட்டி அருகே உள்ள வீரபெருமாநல்லூரில் செயல்படாத பெட்ரோல் பங்கை குத்தகைக்கு எடுத்து 2,000 லிட்டர் மெத்தனாலை பதுக்கியதாக சிபிசிஐடி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

News July 4, 2024

கடலூர்: ஜூன் 15 கடைசி நாள்

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் 15ஆம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதனால், அரசு மற்றும் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தொழிற்பிரிவு விவரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம் என கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

கலெக்டரிடம் விஏஓக்கள் கோரிக்கை மனு

image

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்ட தலைவர் ரவி தலைமையில் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வருடாந்திர பொது கலந்தாய்வு நடத்த வேண்டும். மாவட்ட வருவாய் அலகில் பணிபுரியும் புதிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை பயிற்சி வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அப்போது செயலாளர் ஜெயராமன் உள்பட பலர் உடனிருந்தனர்.

News July 3, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூலை 3) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் தனபால், சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாத்தா, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா, நெய்வேலி காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் சேத்தியாத்தோப்பில் உதவி ஆய்வாளர் வாசுதேவன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 3, 2024

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட படைவீரர் மாளிகையில் காலியாக உள்ள மேலாளர் மற்றும் துப்புரவுப் பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதில் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு பிரிவில் பதிவு செய்துள்ள 55 வயதிற்குட்பட்ட கடலூரில் வசிக்கும் முன்னாள் படைவீரர்கள், கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்துள்ளார்.

News July 3, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 3, 2024

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

image

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. இந்நிலையில், இன்று பள்ளிக்கு வருகை தந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்படி, கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மாணவர்களை வரவேற்று இனிப்புகளை வழங்கினார். இதில், அனைத்து துறையை சேர்ந்த கல்லூரி பேராசிரியர்களும் பங்கேற்றனர்.

News July 3, 2024

விளைநிலத்தில் மின்வேலி அமைத்தால் நடவடிக்கை

image

கடலூர் மாவட்டத்தில் வனவிலங்குகளிடம் இருந்து விளைநிலங்களை பாதுகாக்க, நிலத்தின் உரிமையாளர்கள் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலியும், கம்பி வலைகளையும் அமைக்க கூடாது. ஏனெனில் அதில் சிக்கி மனித உயிரிழப்பு அதிகளவில் நிகழ்கிறது. இதை மீறி விளைநிலத்தில் மின்வேலி அமைப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மின்சார துறை மேற்பார்வையாளர் சதாசிவம் எச்சரித்துள்ளார்.

News July 2, 2024

மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்

image

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நாளை (ஜீலை.3) மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் அடையாள அட்டை மற்றும் மருத்துவர் சான்றிதழ் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு பரிசோதனை செய்து சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 2, 2024

25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

image

சிதம்பரம் அருகே வரகூர்பேட்டையில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் வழக்கம்போல் இன்று பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் மாணவர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக 25 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

error: Content is protected !!