India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டுக்கு சம்பா நெற்பயிர்களை அறுவடை செய்ய, பெல்ட் வகை தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.2500/- எனவும், டயர் வகை தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.1800/- எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்தார்.

குடியரசு தின விழா வருகிற 26 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 கிராமங்களிலும், கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும். மேலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் இடம், நேரம் குறித்து முன்கூட்டியே பொது மக்களுக்கு அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் சேத்தியாத்தோப்பு, பின்னலூர், ஒரத்தூர், கீழாக்குப்பம், கீழக்கொள்ளை, வளையமாதேவி, எறும்பூர், வடலூர், கங்கைகொண்டான், சோழதரம், குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

கடலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டம் மூலம் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் 25.01.2025 அன்று வடலூர், வள்ளலார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

காட்டுமன்னார்கோயில் அருகே காங்கிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் அலி. தொழிலாளியான இவர், 5 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோயில் போலீசார் நேற்று (ஜன.19) மன்சூர் அலியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில், பொங்கல் தொகுப்பு வாங்குவதற்கான தமிழக அமைச்சர் பெரியகருப்பண்ணன் 25 ஆம் தேதி வரை நீட்டிப்பு என்று தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசாங்கம் ஜனவரி மாதம் 9ம் தேதி முதல் 13ம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இன்னும் வாங்காதவர்கள் வரும் 25 ஆம் தேதி வரை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் இன்று செம்மண்டலம், செம்மங்குப்பம், முட்டூர், விருத்தாச்சலம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று நடைபெறுவதாக இருந்த ஒட்டு மொத்த மின் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை காலங்களில் கடலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் மதுபானங்கள் விற்பனையாவது வழக்கம். அருகில் புதுச்சேரி மாநிலம் இருந்தாலும் பண்டிகை காலங்களில் கோடிக் கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 13, 14 மற்றும் 16 ஆகிய 3 நாட்களில் மட்டும் கடலூர் மாவட்டத்தில் 22 கோடியே 83 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடலூர் ஆல்பேட்டை, பண்ருட்டி கண்டரக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் இன்று ஆற்றுத் திருவிழா நடைபெற உள்ளது. ஆற்றுத்திருவிழா நடக்கும் பகுதியில் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரங்களில் 20 இடங்களில் தற்காலிக மருத்துவ முகாம்களை சுகாதாரத்துறையினர் அமைக்க வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர் அபிநயா தெரிவித்தார்.

அண்ணாமலை நகர் பல்கலைக்கழகத்தில் கோபிநாத் பேராசிரியர் வீட்டில் சிறிது சிறிதாக நகைகள் காணாமல் போய்விட்டது என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையில் போலீசார் அவர்கள் வீட்டில் பணிப்பெண் விஜயா என்பவரை விசாரித்ததில், 2 1/2 லட்சம் ரூபாய் நகைகளை திருடி வீட்டின் பின்பக்கம் பதுக்கி வைத்து தெரிய வந்தது நகையை மீட்டு அவரை இன்று போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.