India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில் பிரசவகால தாய்சேய் பராமரிப்பை கண்காணிக்கவும், பாதுகாக்கவும், ‘வம்ஸம் ‘ ஹாட்லைன் எனும் திட்டத்தினை ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் மூலம் கர்ப்பிணிகள் 24 மணி நேரமும் பிரசவம் தொடர்பான சந்தேகங்களை 75985 12045, 75985 12042 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், ஜூன் 2024 மாதத்திற்கான சிறப்பு பொது விநியோகத்திட்ட அத்தியாவசிய பொருட்களான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கிடைக்க பெறாத குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் ஜூலை 31ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலான கல்வி தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 30ம் தேதி வரை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் சேர்ந்துள்ள வண்டல் மண் மற்றும் களிமண் போன்ற கனிமங்களை விவசாயிகள் பயன்பாட்டிற்காகவும், பொது பயன்பாட்டிற்காகவும் மற்றும் குயவர்கள் பயன்பாட்டிற்காகவும் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு பொதுமக்கள் tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, சம்மந்தப்பட்ட தாசில்தாரை அணுகி அனுமதி பெற்று பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-2, 2 ஏ. தேர்வு நடக்க உள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்பு கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் ஜூலை 7-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும். ஆகவே தேர்வு எழுதும் மாணவர்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
சிதம்பரம் நகரப் பகுதியில் ரூ.255 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை கடந்த மாதம் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் இதுவரை 5% முடிவடைந்துள்ளது. இதுகுறித்து நகர்மன்ற தலைவர் செந்தில்குமார் கூறியதாவது, அடுத்த 30 ஆண்டுகளுக்கு சிதம்பரத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில் இன்று (ஜூலை 4ம் தேதி) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ராஜாராமன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் விநாயகம், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் முருகேசன், நெய்வேலி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் சேத்தியாத்தோப்பில் காவல் ஆய்வாளர் ஏழுமலை ஆகியோர் ரோந்துப் பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணாமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் இரவு 8.30 வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 88 இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. இதற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஜூலை 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தெருக்கூத்து, கரகாட்டம், கிராமிய நையாண்டி மேளத்தவில் , வில்லுப்பாட்டு ஆகிய கலைகளில் வாரம் 2 நாட்கள் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. கலை ஆர்வமுடையவர்கள் மட்டுமல்ல கலைஞர்களும் அரசின் சான்றிதழ் பெறும் வகையில் இவ்வகுப்பில் சேர இசைப்பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.