Cuddalore

News November 5, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.4) இரவு 10 மணி முதல் இன்று (நவ.5) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News November 4, 2025

கடலூர் முதன்மை கல்வி அலுவலர் பணி இடை மாற்றம்

image

கடலூர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த ஆ.எல்லப்பன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரை சென்னை தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக பணியிட மாற்றம் செய்து, தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இயக்குனர் இன்று உத்தரவிட்டுள்ளார். இவருக்கு பதிலாக அரியலூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரமேஷ் கடலூர் முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News November 4, 2025

கடலூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News November 4, 2025

கடலூர்: வாக்காளர்களுக்கு சிறப்பு எண்கள் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின் தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறிஞ்சிப்பாடி 04142-258901, புவனகிரி 04144-240299, சிதம்பரம் 04144-227866, காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதி- 04144-262053 என்ற எண்ணில் வாக்காளர்கள் தொடர்பு கொள்ளலாம்.

News November 4, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளான வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் இல்லத்திற்கு சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இன்று (04.11.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் துணை ஆட்சியர் பயிற்சி டியூக் பார்க்கர் உட்பட பலர் உள்ளனர்.

News November 4, 2025

கடலூர்: கிராம ஊராட்சி செயலர் வேலை!

image

கடலூர் மாவட்டத்தில் 37 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்தது 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
6. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 4, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் இன்று (நவ.4) முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இப்பணி பல்வேறு கட்டங்களாக 28.10.2025 முதல் 7.2.2026 வரை நடைபெற உள்ளது.

News November 4, 2025

கடலூர்: சாதி சான்றிதழ் தொலைந்து விட்டதா ?

image

உங்களது 10th, 12th மார்க் சீட் அல்லது சாதி சான்றிதழ் உள்ளிட்டவை காணாமல் / கிழிந்துவிட்டால் கவலை பட வேண்டாம். <>இ-பெட்டகம் <<>>என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான பல்வேறு முக்கிய சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். (குறிப்பு: 2015-ம் ஆண்டுக்கு பின் வழங்கப்பட்ட சான்றிதழ்களுக்கு மட்டுமே இது பொருந்தும்) SHARE NOW!

News November 4, 2025

கடலூர்: 8 பி.டி.ஓ-க்கள் அதிரடி இடமாற்றம்

image

கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அலகில் பணிபுரியும் 8 வட்டார வளர்ச்சி அலுவலர்களை நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக சிகாமணி, முருகன், பாலாமணி, ஜெயக்குமார், லட்சுமி, சங்கர், செந்தில் வேல் முருகன், வீராங்கன் ஆகியோர் மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News November 4, 2025

கடலூர்: மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை

image

விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் 28 வயது கூலி தொழிலாளி. இவருக்கு 9 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 28-ம் தேதி தனது மகளுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.

error: Content is protected !!