Coimbatore

News April 19, 2025

கோவை அருகே விபத்தில் பெண் உயிரிழப்பு!

image

கோவை, சிறுமுகை ஆலாங்கொம்பை சேர்ந்தவர் முருகேசன். இவர் நேற்று மாலை தனது மனைவி ஜோதிமணியுடன், பைக்கில் மேட்டுப்பாளையம் சென்றுள்ளார். அப்போது, தாலுகா அலுவலகம் அருகே சென்ற போது, வேகத்தடையில் பைக் நிலை தடுமாறியதில், ஜோதிமணி தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். பின்னர், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜோதிமணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 18, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (17.4.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 18, 2025

அன்னூர் காவல்துறையின் சார்பில் முக்கிய அறிவிப்பு

image

அன்னூர் காவல்துறையினர் இன்று 18-04-25 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் நேரங்களில் சாமியார் வேடமிட்டு காரில் மூன்று நபர்கள் தட்சனை கேட்பது போன்று தோட்டத்து வீடுகளை கண்காணிப்பதாக தகவல். இவ்வாறான யாரேனும் தங்கள் பகுதியில் சுற்றித்திரிந்தால் உடனே கீழ்கண்ட 9498101173 தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

News April 18, 2025

“நாளை என்பதே இல்லை” கோவையில் அற்புத கோயில்!

image

கோவை, நரசிம்மநாயக்கன் பாளையத்தில், கடந்த 300 ஆண்டு காலமாக லட்சுமி நரசிம்மர் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இங்கு பக்தர்கள் வைத்திடும் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறுவதால், ‘‘நாளை என்பதே நரசிம்மப் பெருமாளிடம் இல்லை’’ என்கிறார்கள் இறையருளை உணர்ந்தவர்கள். மேலும், ராகு, கேது தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இவருக்கு திருமஞ்சனம் செய்தும், மஞ்சள் காப்பிட்டும் வேண்டிக் கொள்கின்றனர். SHARE பண்ணுங்க!

News April 18, 2025

தக்காளி காய்ச்சல்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

image

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தக்காளி காய்ச்சல் குழந்தைகளிடம் அதிகளவு காணப்படுகிறது. இதுகுறித்து பேசிய சுகாதார துறையினர் இந்த காய்ச்சல் பொதுவாக சுகாதாரம் இல்லாததால் பரவுகிறது. எப்போதும் குழந்தைகள், பெரியவர்கள் சுகாதாரத்துடன் இருப்பது அவசியம். பள்ளி செல்லும் குழந்தைகள் நண்பர்களுடன் விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும்போது கை, கால், முகம் கழுவுவது அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர்.

News April 18, 2025

கோவை மாவட்ட வட்டாட்சியர் அலுவலக எண்கள்!

image

▶️கோவை (தெ) வட்டாட்சியர் 0422-2214225. ▶️கோவை (வ) வட்டாட்சியர் 0422-2247831. ▶️மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் 0425-4222153. ▶️சூலூர் வட்டாட்சியர் 0422-2681000. ▶️அன்னூர் வட்டாட்சியர் 0425-4299908. ▶️பேரூர் வட்டாட்சியர் 0422-2606030. ▶️மதுக்கரை வட்டாட்சியர் 0422-2622338. ▶️கி.கடவு வட்டாட்சியர் 04259-241000. ▶️ஆனைமலை 0425-3296100. ▶️பொள்ளாச்சி 04259-226625. ▶️வால்பாறை 0425-3222305. SHARE பண்ணுங்க.

News April 18, 2025

மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை!

image

மருதமலை முருகன் கோயிலில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம், வாகன நிறுத்துமிடம் மற்றும் அடிப்படை வசதிகளுடன் அறுங்கோண வடிவத்தில் அமைக்கப்படவுள்ளது. மேலும் புல்வெளி நில அமைவிற்கு மத்தியில், புதிதாக 184 அடிஉயர முருகன் சிலையும் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். அவ்வாறு அமையப்பெற்றால் உலகில் மிகப்பெரிய முருகன் சிலை மருதமலையில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 18, 2025

கோவை: மகனை வெட்டி கொன்ற தந்தை கைது

image

கோவை குனியமுத்தூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (57). இவர் மகன் விஜயகுமார் (27). மதுப்பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார், மது அருந்தி விட்டு வந்து அடிக்கடி வீட்டில் சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவும் விஜயகுமார் மதுபோதையில் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஸ்வநாதன், அரிவாளால் கழுத்தில் வெட்டியதில், விஜயகுமார் பலியானார். பின்னர் போலீசார் விஸ்வநாதனை கைது செய்தனர்.

News April 17, 2025

கோவை; பகிரங்க அழைப்பு விடுத்த பெண் புரோக்கர் சிக்கினார்!

image

கோவை வீரகேரளத்தை சேர்ந்த 34 வயதான இளைஞர், சீரநாயக்கன்பாளையத்தில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த பெண் ஒருவர் தன்னிடம் அழகான பெண்கள் உள்ளதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், பணம் எடுப்பதாக கூறி விட்டு, ஆர்.எஸ்.புரம் போலீசில் புகாரளித்தார். அங்கு சென்ற போலீசார் கரூரை சேர்ந்த லட்சுமி என்ற பெண் புரோக்கரை கைது செய்து இரு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

News April 17, 2025

கொல்லம் பெங்களூரு சிறப்பு ரயில். தெற்கு ரயில்வே

image

கோடை விடுமுறை முடிந்து தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் ரயிலில் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற நோக்கத்தில் தெற்கு ரயில்வே கொல்லம்-பெங்களூரு சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. கொல்லத்திலிருந்து 20- தேதி மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு, ரயில் ஏப்ரல் 21-ம் தேதி அதிகாலை 1:30 மணிக்கு போத்தனூர் வந்து சேரும் என ரயில்வே வாரியம் சார்பாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!