India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆனைகட்டி அருகே ஜெயிலர் 2 திரைப்பட சூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் யோகி பாபு நடித்து வருகிறார். இந்நிலையில், படப்பிடிப்பு இடைவேளையில் போது நடிகர் யோகி பாபு இன்று மருதமலை திருக்கோவிலூர் சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்குள்ள கோவில் பூசாரி மலைச்சாமியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
கோவை மாவட்டத்தில் இன்று (23.4.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் (அ) 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை, குனியமுத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர், பொன்னுசாமி (27) என்பவரிடம் நட்புடன் பழகி வந்துள்ளார். பின்னர் அவரது நடத்தை சரி இல்லாமல் அவரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் பொன்னுசாமி, அப்பெண்ணின் ஆபாச படங்களை அவருக்கு அனுப்பி மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து அப்பெண் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் விசாரணை செய்து பொன்னுசாமியை கைது செய்தார்.
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் நேற்றிரவு முதல் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து. கோவில், தேவாலயங்கள், மசூதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையின் அழகையும், பில்லூர் அணைப்பகுதியையும், வனப்பகுதியின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ளும் வகையில், கோவை, பரளிக்காடு சூழல் சுற்றுலா, வார இறுதி நாட்களில், வனத்துறையினரால் ஒருங்கிணைக்கப்படுகிறது. இங்கு செல்ல முன்பதிவு அவசியம். செல்ல விரும்புவோர், இந்த <
கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 137 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை <
அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.
கோவை மாவட்டம், சூலூர் பகுதியில், நேற்று முந்தினம் நள்ளிரவில் பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சூலூர் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வாடகைக்கு கொடுத்த இடத்தை காலி செய்யாமல் இருந்து வந்த பெண்ணை, ராஜேந்திரன் என்பவர் வெட்டி கொலை செய்தது தெரிய தெரியவந்தது. குறித்து ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கோவை மாநகராட்சியில், மத்திய மண்டலத்தில் 49 கொடிக்கம்பங்கள், கிழக்கு மண்டலத்தில் 71 கொடிக்கம்பங்கள், வடக்கு மண்டலத்தில் 46 கொடிக்கம்பங்கள், மேற்கு மண்டலத்தில் 22 கொடிக்கம்பங்கள், தெற்குமண்டலத்தில் 27 கொடிக்கம்பங்கள் என மொத்தம் 5 மண்டலங்களை சேர்த்து 215 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று(ஏப்.22) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வுகான உத்தரவிட்டார். இதில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை ஆணையாளர்கள் சுல்தானா, குமரேசன் என பலரும் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.