India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை விமான நிலையத்தில் இன்று ஏர் அரேபியா விமானத்தில் ஷார்ஜாவிலிருந்து வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரூ.37.09 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள், 10 ட்ரோன்கள், 36 மைக்ரோபோன்களை பறிமுதல் செய்து அப்துல் ரஹீம், சையது சிராஜுதீன், ஜெய்னுலாபுதீன், முகமது சித்திக், முகமது அப்சல் உள்ளிட்ட ஐவரை கைது செய்து அவர்களிடம் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
கோவை மாவட்டத்தில் 1405 ரேஷன் கடைகள் செயல்படுகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் போன்றவற்றை நல்ல முறையில் இருப்பு வைக்க வேண்டும். மழை பெய்து வருவதால் ரேஷன் பொருட்கள் பாதிக்கக்கூடாது. பாதுகாப்பாக வைக்க வேண்டும். வால்பாறை, ஆனைமலை போன்ற பகுதியில் ரேஷன் கடைகளுக்கு காட்டு யானைகள் வந்து செல்வதாக தெரிகிறது. இதனை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கோவை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் கணபதி செல்வராஜ் நேற்று இரவு விடுத்த அறிக்கையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (திங்கள்) காலை 11 மணியளவில் கோவை வருகிறார். அவருக்கு பீளமேடு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின், அங்கிருந்து அவர் சூலூர் செல்கிறார். அங்குள்ள அண்ணா சீரணி அரங்கத்தில் மாலை 5 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
கோவை மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவதாக ஒரு கும்பல், மாணவர்களின் செல்போனுக்கு QR CODE அனுப்பி ஸ்கேன் செய்ய அறிவுறுத்துகின்றனர். அதை ஸ்கேன் செய்தால் வங்கி கணக்கிலிருந்து மொத்த பணமும் மோசடி செய்யப்படும். எனவே மாணவர்களும், பெற்றோர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆன்லைன் மோசடி புகார்களுக்கு 1930 தொடர்பு கொள்ளலாம். SHARE IT
சிறுமுகை கென்னடி வீதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் மனைவியை விட்டு பிரிந்து ஓராண்டாக வசித்து வரும் நிலையில், 4 மாதங்களுக்கு முன் சட்டப்படி விவாகரத்து பெற்றுள்ளனர். இதனிடையே மனைவிக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமானதை அறிந்து விரக்தியடைந்த செல்வக்குமார், நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
கோவை வடக்கு – 0422-2450101. கோவை தெற்கு – 0422-2300101. அன்னூர் – 04254-264101. கணபதி – 0422-2511001. கோவைப்புதூர்- 0422-2606101. கிணத்துக்கடவு – 04259-226101. மேட்டுப்பாளையம் – 04254-222299. பொள்ளாச்சி – 04259-223333. பீளமேடு – 0422-2595101. பெ.நா.பாளையம் – 04222-695101. தொண்டாமுத்தூர் -04222-617101. சூலூர் – 0422-2689101. வால்பாறை – 04243-222444. கருமத்தம்பட்டி -0421-2220101. இதை SHARE பண்ணுங்க.
கோவை மக்களே, உங்கள் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை திருத்தம் போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களின் தரம், புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கும், தகவல்கள் அப்டேட் ஆகாதது போன்ற எந்தவொரு ரேஷன் கார்டு சம்பந்தமான சேவைக்கும், நீங்கள் 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!
கோவையில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் தங்கிப்பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியருக்கு கராத்தே தற்காப்பு கலை பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு குறைந்த பட்சம் இரு ஆண்டுகள் கராத்தே பயிற்சி வழங்கியஅனுபவமுள்ள நபர்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆக.22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.