India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவோம் என கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்ததும், அதற்கு நேர் எதிராக மது விற்பனையை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது மேலும் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்றார்.
கோவை மாவட்டத்தில் இன்று (06.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தை தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை 50 ஆண்டுகளாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டும் பொள்ளாச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் தலைமையாக கொண்டு மடத்துக்குளம், உடுமலை தாலுகாக்களை இணைத்து தனி மாவட்டம் உருவாகும் என கூறப்பட்டு வருவதால் பொள்ளாச்சி மாவட்டமாவது கேள்விக்குறியாகியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மத்திய அரசு தொலைத் தொடர்பு அலுவலகம் முன்பு கோவையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் நூதன முறையில் திருவள்ளுவர், கம்பர், பாரதி ஆகியோரின் வேடமனிந்து நூதன முறையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுவாவியில் மலையின் மையப் பகுதியில், இயற்கை எழிலுடன் சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோயிலில் முருகப்பெருமான், சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு திருமணத் தடை உள்ளவர்கள் சாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் 5 செவ்வாய்களில் வழிபாடு செய்கிறார்கள்.
தமிழகத்தில் நேற்று முதல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கின. இத்தேர்வு வரும் மார்ச்.27ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. அதன்படி கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 127 தேர்வு மையங்களில் 36,543 பேர் தேர்வு எழுத இருந்தனர். இதில் நேற்று நடந்த தேர்வில் 18,575 மாணவர்கள், 17,401 மாணவிகள் என மொத்தமாக 35,976 பேர் தேர்வினை எழுதினர். 567 பேர் தேர்வு எழுதவில்லை என மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கோவை எஸ்.பி கார்த்திகேயன் இன்று விடுத்த செய்தி குறிப்பில், சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212, வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அதில் அறிவுறுத்தியுள்ளார்.
கோவையில் மனைவியை கணவன் சுட்டுக்கொன்ற விவகாரத்தில், 29 குண்டுகளை பயன்படுத்தியதாக வெளியான தகவல் வதந்தி என்றும், ஒரே குண்டு மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. ஒரு குண்டுக்குள் 29 Pellets அதாவது பால்ரஸ் உருண்டைகள் இருக்கும். துப்பாக்கி உரிமம் அவரது தந்தையின் பெயரில் உள்ளது. மிருகங்களை வேட்டையாட பயன்படுத்தப்படும் குண்டுகளில் இது போன்று இருக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று (05.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தென்னக ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் இன்று விடுத்த செய்திக்குறிப்பில், வரும் மார்.28 முதல் ஜூலை.6 ஆம் தேதி வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வாரந்தோறும் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், மார்.29 முதல் ஜூலை.7 வரை ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வாரந்தோறும் சனி, திங்கட்கிழமைகளிலும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.