Coimbatore

News April 25, 2025

கோவை வந்த துணை குடியரசு தலைவர்

image

ஊட்டியில் நடைபெறும் துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று கோவைக்கு விமான மூலம் வந்தார். அப்போது அவரை கோவை விமான நிலையத்தில், எம்.பி கணபதி பா.ராஜ்குமார், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர். 

News April 25, 2025

BREAKING: கோவையில் 3 மாணவர்கள் உயிரிழப்பு 

image

பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணை பகுதிக்கு சுற்றுலா சென்ற சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியை சேர்ந்த பிசியோதெரபி மாணவர்கள் தருண், ராவத், ஆண்டோஜெனிப் ஆகியோர் ஆழியார் ஆற்றில்  நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்த மாணவர்களின் உடலை மீட்கும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து ஆழியார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 25, 2025

கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவு

image

தமிழக அரசு சுதந்திர தினம், குடியரசு தினம், உலக தண்ணீர் தினம், தொழிலாளர்கள் தினம் உள்ளிட்ட நாட்களில் கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் மே.1ஆம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த கூட்டங்களில் கடந்த ஆண்டின் வரவு, செலவு கணக்குகளை மக்கள் முன் பார்வைக்காக வைக்கவும், தொழிலாளர் தின உறுதிமொழி ஏற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2025

ரயில்வேயில் வேலை வாய்ப்பு

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 காலிபணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும். இதற்கு <>இங்கு கிளிச் <<>>செய்து ஏப்.12 முதல் மே.11க்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பு குறித்து சேலம் ரயில்வே கோட்டம் தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளது. SHARE பண்ணுங்க.

News April 25, 2025

6 மாதத்திற்கு உள்ளே வரக்கூடாது: கமிஷனர்

image

கோவையில் குற்றச்சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில், அடிதடி, வழிப்பறி, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை செய்து வரும் ரவுடிகளை கண்டறிந்து 6 மாதங்களுக்கு மாநகரை விட்டு வெளியேற்ற மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, தற்போது 29 ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் 6 மாதங்களுக்கு, கோவை மாநகர பகுதிக்குள் வர தடை விதித்து உத்தரவிட்டார்.

News April 24, 2025

கோவையில் ரயில் சேவைகள் மாற்றம்

image

கோவை ரயில்வே துறை அதிகாரிகள் இன்று வெளியிட்ட அறிக்கையில், இருகூர் ரயில்வே யார்டில் தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் நடைபெறுவதால் ஏப்ரல் 26, 28 ஆகிய தேதிகளில், ரயில் சேவையில் மாற்றம், அதில் திருச்சிராப்பள்ளி சந்திப்பு – பாலக்காடு ரயில் மதியம் 13.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சூலூர் சாலையில் நிறுத்தப்படும் என்றனர்.

News April 24, 2025

கோவை: சொகுசு கார்களுடன் தலைமறைவான யூடியூபர்

image

கோவை கணபதி பாரதி நகரை சேர்ந்தவர் வினோத் குமார். இவர் பிரபல பால் பண்ணையில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் மணியக்காரன்பாளையத்தை சேர்ந்த யூடியூபர் சந்தோஷ் குமார் என்பவர் பழக்கமாகியுள்ளார். அப்போது, அவரிடம் ஆடி, பென்ஸ் கார்களை சரி செய்து தருவதாக கூறி காரையும், ரூ.3.70 லட்சத்தையும் பெற்று தலைமறைவானார். இப் புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 24, 2025

கோவை: இந்திய ராணுவத்தில் சேர நாளை கடைசி!

image

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு நாளை(ஏப்.25) கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பு முற்றிலும் வெளிப்படையானது. மோசடி ஏஜென்ட்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். SHARE IT!

News April 24, 2025

கோவை: சுகாதாரத்துறையில் வேலை!

image

கோவை மாநகராட்சியில் செயல்படும் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 3 நகர சுகாதார ஆய்வகங்களில் காலியாக உள்ள செவிலியர், லேப் டெக்னீசியன், உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 8வது முதல் டிகிரி படித்தவர்கள் வரை தகுதிக்கேட்ப வேலை வழங்கப்படுகிறது. இந்த பணிக்கு வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்யவும். இதை SHARE பண்ணுங்க.

News April 24, 2025

கோவை: கடன் தொல்லையால் தற்கொலை 

image

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (37). இவர் கடந்த சில நாட்களாக கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முந்தினம் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சுதாகர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பீளமேடு காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!