Coimbatore

News March 12, 2025

எஸ்.பி.வேலுமணி இல்ல விழா: போலீஸ் வழக்கு

image

முன்னாள் அமைச்சர் எம்.பி.வேலுமணி இல்ல திருமண வரவேற்பு விழாவிற்கு எந்தவித முன் அனுமதியும் பெறாமல் போக்குவரத்துக்கு இடையூறாக கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஜென்னிஸ் ரெசிடென்சியிலிருந்து கொடிசியா வளாகம் வரை கட்சி கொடிகளையும் பேனர்களையும், வரவேற்பு பதாகைகளையும் வைத்ததாக பீளமேடு போலீசார் வார்டு செயலாளர் லட்சுமணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News March 12, 2025

கோவை: மீண்டும் கனமழை… மக்களே எச்சரிக்கை

image

தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 12) 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனியில் இன்று (மார்ச் 12) கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் (மார்ச் 12, 13) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News March 12, 2025

ரயில் பயணிகள் கவனத்திற்கு 

image

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், திருச்சி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திருச்சியில் இருந்து மார்.18 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் திருச்சி-பாலக்காடு விரைவு ரயில் திருச்சி-கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது கரூர்-பாலக்காடு இடையே மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 12, 2025

ராஜேந்திர பாலாஜி திடீர் பல்டி! 

image

கோவை ஏர்போர்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று அளித்த பேட்டியில், எத்தனை கட்சிகள் வளர்ந்தாலும் அதிமுகவை எதிர்க்கின்ற தகுதி திமுகவுக்கும், திமுகவை எதிர்க்கின்ற தகுதி அதிமுகவுக்கும் தான் உண்டு. தமிழக அரசு என்ன நிதி கேட்கிறார்களோ அதை ஒன்றிய அரசு கொடுக்க வேண்டும். அப்போது தான் நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். முன்னாள் அமைச்சர் மா.பா பாண்டியராஜனை குறிப்பிட்டு பேசவில்லை என்றார்.

News March 12, 2025

கோவையில் கிராம சபை கூட்டம்

image

மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினத்தை ஒட்டி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினத்தில் குடிநீர் சிக்கனம், குடிநீர் பயன்பாடு, மழைநீர் தொட்டி பராமரிப்பு, குடிநீர் மாசுபாடு, குளம் குட்டைகளை தூர்வாருதல் போன்ற விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என செய்தி குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News March 12, 2025

கோயம்புத்தூருக்கு மழை

image

வளிமண்டல கீழடுக்கு சுழற்றி காரணமாக கோவையின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன்காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் மழையால், வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், இன்றும் கோவை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. ( Share பண்ணுங்க)

News March 11, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (மார்ச்.11) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

News March 11, 2025

கோவையில் 5 வயது பெண் சிறுத்தை உயிரிழப்பு!

image

கோவை ஓணாப்பாளையத்தில் பிடிபட்ட 5 வயது பெண் சிறுத்தை உயிரிழநதுள்ளது. கடந்த வாரம் 4 ஆடுகளை வேட்டையாடிய இச்சிறுத்தையை, மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். இந்நிலையில், ஏற்கனவே காயமடைந்து உடல் மெலிந்து காணப்பட்டதால், சிகிச்சை பலனின்றி உயிரிழநதுள்ளது. 

News March 11, 2025

பொண்ணுக்கு வீங்கி நோய்! மக்களே உஷார் 

image

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர் எவருக்கேனும் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு கண்டறியப்பட்டால், சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும், பாதிப்படைந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‘மம்ப்ஸ்’ என்ற வைரஸ் வாயிலாக பரவும் பொன்னுக்கு வீங்கி நோயானது காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

News March 11, 2025

கொடநாடு வழக்கு: Ex.பாதுகாப்பு அதிகாரி ஆஜர் 

image

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் தற்போது காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். தனது சொல்போனை இதுவரை ஒப்படைக்காதது குறித்து உயர் அதிகாரியாக இருந்த வீரபெருமாளிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

error: Content is protected !!