India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு தொடர்ச்சி மலையின் அழகையும், பில்லூர் அணைப்பகுதியையும், வனப்பகுதியின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ளும் வகையில், கோவை, பூச்சமருத்தூர் காட்டேஜ் சுற்றுலா, வனத்துறையினரால் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. இங்கு செல்ல முன்பதிவு அவசியம். செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் <
கோவை மேயர் ரங்கநாயகி தங்கி இருக்கும் அரசு பங்களாவில் நேற்று வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த மாநகராட்சி தற்காலிக ஊழியர் ஆனந்த் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி செய்து வருகின்றனர். விசாரணையில், குடும்ப பிரச்சனையில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு புரளி என தெரியவந்தது.
கோவை மாநகராட்சியில் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 3 நகர சுகாதார ஆய்வகங்களில் காலியாக உள்ள செவிலியர், லேப் டெக்னீசியன், உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 8, 10, 12, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.40,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய <
கோவை, தீத்திபாளையத்தில் அய்யாசாமி மலைக்கோயில் உள்ளது. இங்கு ராமன் என்பவர் நேற்று தனது நண்பர்களுடன் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அப்போத, மலையில் இருந்து கீழே இறங்கும் போது உடல்நிலை மோசமானதால், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவ பணியாளர்கள் விரைந்து வந்து பரிசோதனை செய்த போது ராமன் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
▶️கோவை கலெக்டர்- 0422-2301114. ▶️மாநகராட்சி ஆணையர்- 0422-2390261. ▶️காவல் ஆணையர்- 0422-2300250. ▶️மாவட்ட காவல் கண்காணிப்பாளர்- 0422-2300600. ▶️துணை ஆணையர்- 9445074575. ▶️கலெக்டரின் நேர்முக உதவியாளர்- 0422-2301119. கோவை மக்களே இது போன்ற முக்கிய எண்களை SHARE பண்ணுங்க.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
கோவை ரயில் நிலையத்தின் வழியாக தினமும் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் நேற்று டெல்லியில் இருந்து வந்த ரயிலில் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். மேலும் அந்த ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்தனர்.
கோவை கலெக்டர் பவன்குமார் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், மாவட்டத்தில் உள்ள பார்வைத்திறன், காது குறைபாடு, உடல் இயக்க குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட உள்ளது. இதை பெற, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரிலும், இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
தவெக பூத் கமிட்டி மாநாடு நாளை ஏப்.26, நாளை மறுநாள் ஏப்.27 ஆகிய தேதிகளில் கோவை, குரும்பபாளையம் தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து நாளை காலை 08:30 மணியளவில், கோவை விமானம் நிலையத்திற்கு வருகை தர உள்ளார். எனவே, அவரை வரவேற்பதற்காக, கோவை மாவட்ட தவெக கட்சி செயலாளர்கள் சார்பாக, நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஏப்.26ஆம் தேதி முதல் துடியலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளன. இப்பயிற்சி வகுப்புகள் சனி மற்றும் ஞாயிறு வார இறுதி நாட்களில் நடைபெறுகின்றன. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க மே.3ஆம் தேதி கடைசி ஆகும். போலீஸ் ஆக விரும்பும் நபர்கள் இப்பயற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
Sorry, no posts matched your criteria.