India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர் எவருக்கேனும் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு கண்டறியப்பட்டால், சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும், பாதிப்படைந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‘மம்ப்ஸ்’ என்ற வைரஸ் வாயிலாக பரவும் பொன்னுக்கு வீங்கி நோயானது காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் தற்போது காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். தனது சொல்போனை இதுவரை ஒப்படைக்காதது குறித்து உயர் அதிகாரியாக இருந்த வீரபெருமாளிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
காரமடை ரங்கநாதர்கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை (மார்ச்.12) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மேட்டுப்பாளையத்திலிருந்து செல்லும் வாகனங்கள் குட்டையூர், காந்தி நகர், தொட்டிபாளையம், ஒன்னிபாளையம், மத்தம்பாளையம் வழியாக கோவை செல்லலாம். கோவையிலிருந்து வரும் வாகனங்கள் மத்தம்பாளையம், ஏழு சுழி, திம்மம்பாளையம், எம்கே புதூர், டீச்சர்ஸ் காலனி வழியாக மேட்டுப்பாளையம் செல்லலாம்.
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பான அறிக்கைகள் தமிழ்நாடு அரசிடம் இருந்து 2024 டிசம்பரில் வந்தன என்றும், தமிழ்நாடு அரசின் இந்த திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன என்று மாநிலங்களவையில் மதிமுக பொது செயலாளர் வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதில் அளித்துள்ளார். இன்னும் பரிசீலனையிலேயே உள்ளதால் ரயில் ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
myv3, GBY பாணியில் மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவ்வகையில், கோவையில் “வாட்ஸ் அப்” குழுவில் லாட்டரி குலுக்கல் பரிசு என கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார், கண்ணன், ராஜசேகரனை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறிமுதல் செய்தனர். அதிக சம்பாதிக்கலாம் என ஆசைபட்டு, மோசடி வலையில் சிக்கிக் கொள்கின்றனர். உங்க உறவினர்கள் உஷாராக இருக்க Share பண்ணுங்க.
சர்மிளா என்னும் பெண் பேருந்து ஓட்டுநர் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு முன்பு உக்கடம் – சூலூர் பேருந்து இயக்கி வந்தார், பின்பு பேருந்து நிறுவனத்திற்கும் அவருக்கு மேற்பட்ட மனக்கசப்பு காரணமாக இந்தப் பணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது பொள்ளாச்சி ந. மூ. சுங்கத்தில் இருந்து உடுமலைப்பேட்டை வரை இயக்கப்படும் தனியார் பேருந்தில் ஓட்டுனராக பணியில் சேர்ந்துள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (மார்ச்.11) செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என இன்று கோவை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை ரயில்வே துறை அதிகாரிகள் இன்று வெளியிட்ட அறிக்கையில்
கோயம்புத்தூர் ஜங்ஷன் – தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் 11.03.2025 அன்று காலை 07.50 மணிக்கு கோயம்புத்தூர் ஜங்ஷனில் இருந்து புறப்படவிருந்த ரயில், இணைப்பு ரயில் தாமதமாக இயக்கப்பட்டதால், 11.03.2025 அன்று மாலை 16.15 மணிக்கு (08 மணி நேரம் 25 நிமிடங்கள் தாமதமாக) கோவை ஜங்ஷனில் இருந்து புறப்படும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
கோவையில் தமிழக அரசின் பொது சுகாதார (ம) நோய் தடுப்பு மருத்துவ துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, B.SC( CHEMISTRY) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <
கோயம்புத்தூரில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக நாளை (11.3.2025) பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், கோவையில் நாளை (11.3.2025) பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 12ம் வகுப்பு தேர்வு நடைபெற்று வருவதால், மின்தடை செய்ய கூடாது என உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.