Coimbatore

News May 22, 2024

கோவையில் 15 செ.மீ மழைப்பதிவு!

image

கோயம்புத்தூரில் நேற்று (மே.21) பதிவான மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆழியார் பகுதியில் 15 செ.மீட்டரும், PWD மக்கிநாம்பட்டி, PWD வாரப்பட்டி ஆகிய பகுதிகளில் 8 செ.மீ, கோவை தெற்கு பகுதியில் 6 செ.மீ, பொள்ளாச்சியில் 5 செ.மீட்டரும், கோயம்புத்தூர் AP பகுதியில் 4 செ.மீ கோவை TNAU, சூலூர், சின்னகாலர், வால்பாறை PTO ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும் மழைப்பதிவானது.

News May 22, 2024

கோவை மழைக்கு வாய்ப்பு!

image

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (மே.22) மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 22, 2024

கால்நடை வளர்ப்போருக்கு ஆட்சியர் அறிவுரை

image

கோவை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் மழைக்காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறையை இன்று ஆட்சியர் தெரிவித்தார். மழைக்காலங்களில் கால்நடைகளை திறந்தவெளியில் கால்நடை மேய்ச்சலுக்காக அனுப்ப வேண்டாம்,
இடி மற்றும் மின்னல் ஏற்படும்போது திறந்தவெளியில் மாடுகளை கட்டக்கூடாது. உயர் மின்னழுத்த மின் கம்பிகள் செல்லக்கூடிய இடங்களுக்கு கால்நடைகளை அருகில் கொண்டு செல்லக்கூடாது என்று கூறினார்.

News May 22, 2024

கோவையில் பொறுப்பு அலுவலர்கள் நியமனம்

image

கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் தினமும் 1,250 டன் குப்பைகள் சேகரமாகிறது . வார்டுகளில் குப்பை தேக்கம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதற்கு தீர்வு காண ‘ரூட் சார்ட்’ தயாரித்து துாய்மை பணிகள் மேற்கொள்வது, தரம் பிரித்து வாங்குவது போன்ற நடவடிக்கைகளை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி மண்டலம் வாரியாக பொறுப்பு அலுவலர்களை நியமித்து நேற்று கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

News May 22, 2024

நீதிமன்றங்களில் 2329 காலி பணியிடங்கள்

image

தமிழ்நாடு முழுவதும் கோவை உட்பட அனைத்து மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. நகல் பணியாளர்கள், நகல் வாசிப்பாளர்,டிரைவர், அலுவலக உதவியாளர், தூய்மை பணியாளர் என மொத்தமாக 2329 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வரும் 27ஆம் தேதி கடைசி நாள். இதுகுறித்த முழு விவரமும் www.mhc.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News May 22, 2024

அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு

image

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள் கோட்டாட்சியர் அலுவலகங்கள் சப்-கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்த வேண்டும்
வெள்ளம் மற்றும் இதர இயற்கை இடர்பாடுகள் சம்பந்தமாக பெறப்படும் தகவல்களை உடனுக்குடன் உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். 1077 என்ற டோல் ப்ரீ எண்ணுக்கு வெள்ளம் சார்ந்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் என  கலெக்டர் நேற்று கூறினார்

News May 22, 2024

கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

image

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தண்டபாணி தனியார் தோட்டத்தில் பணிபுரிந்த போது 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து தண்டபாணியை கைது செய்த போலீசார் சிறையிலடைத்தனர். இவ்வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தண்டபாணிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். தொடர்ந்து சிறுமிக்கு ரூ.5 லட்சம் வழங்கவும் பரிந்துரைத்தார்.

News May 22, 2024

தமிழக முதல்வர் வார்த்தைகளை திரிப்பதாக அறிக்கை

image

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
உலகின் தொன்மையான மொழி தமிழ் என பேசிய பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே ஒடிசாவில் பிரதமர் மோடி பேசியதை திரித்து திசை திருப்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சி வெற்றி பெறாது
பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியதை திரித்து வழக்கம் போல வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளதாக கூறினார்.

News May 22, 2024

சவுக்கு சங்கர் வங்கி கணக்குகள் முடக்கம்

image

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கைது செய்ய பட்ட சவுக்கு சங்கரின் அனைத்து வங்கி கணக்குகளும் நேற்று முடக்கபட்டது. 
பத்திரிக்கையாளர் சவுக்குசங்கர் நடத்தி வரும் சவுக்கு மீடியா என்கிற இணைய ஊடகத்தின் வங்கிக் கணக்கு, சவுக்கு சங்கரின் தனிப்பட்ட வங்கி கணக்கு, மற்றும் சவுக்கு சங்கர் தொடர்புடைய அனைவரது வங்கி கணக்குகளும் முடக்கபட்டதாக நேற்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

News May 21, 2024

சிசிடிவி காட்சிகளை பார்வையிட்ட அதிமுக வேட்பாளர்

image

கோவை ஜிசிடி கல்லூரி வளாகத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அளித்த வாக்கு பெட்டிகள் இருட்டு அறையில் பூட்டி வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்த அறை முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை இன்று அதிமுக கோவை நாடாளுமன்ற வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

error: Content is protected !!