India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை விமான நிலையத்தில் வாரத்தில் அனைத்து நாட்களும் சார்ஜாவுக்கும் 5 நாட்கள் சிங்கப்பூருக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவி வருவதாக வெளிவரும் தகவல்களை அடுத்து கோவை விமான நிலையத்தில் சார்ஜா, சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் தானியங்கி காய்ச்சல் கண்டறியும் இயந்திரம் மூலமாக காய்ச்சல் பரிசோதனை பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து மாரிசெட்டிபதி செல்லும் அரசு நகரப் பேருந்தில் மழை நீர் ஒழுகியதன் காரணமாக நேற்று பேருந்தில் இருந்த பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். பேருந்தின் மேற்கூறையில் இருந்து வழிந்த மழை நீரால் பயணிகள் இருக்கைகளில் அமர முடியாமல் எழுந்து நின்று பயணம் செய்தனர். அதில் ஒரு பயணி பேருந்துக்குள் குடையை வைத்து அமர்ந்து பயணம் செய்தது சக பயணிகள் இடையே வியப்படையச் செய்தது
கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மழைநீர் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பணியாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து கோவை ப்ரூக்பீல்ட்ஸ் சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ், நேற்று மழை பெய்தும் இன்று (மே.23)காலையில் மழை நீர் துளியும் இல்லாமல் பொதுமக்கள் பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்த வண்ணம் சுத்தமாக உள்ளது.
விமான பயணிகளின் அதிகரிப்பை தொடர்த்து கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா இடையே வாரத்தில் 5 நாட்களும் விமான சேவை வழங்கப்படுகிறது என இன்று (மே.23) விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வானிலை காரணமாக 10 முதல் 20 நிமிடங்கள் முன்னர், அல்லது பின்னர் அல்லது குறித்த நேரத்தில் செல்லும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதாக வெளிவரும் தகவலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
கோவை விமான நிலையத்தில் ஷார்ஜா, சிங்கப்பூர் பயணிகளிடம் காய்ச்சல் கண்டறியும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி காய்ச்சல் கண்டறியும் இயந்திரம் மூலம் காய்ச்சல் இன்று (மே.23) முதல் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது
கோவை பன்னாட்டு விமான நிலையத்திற்க்கு தினமும் பல விமானங்கள் வந்து செல்கின்றது. இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று முதல் விமான நிலையத்தில் முதியவர்கள், மூத்த குடிமக்களின் உடைமைகளை எடுத்து வந்து தரும் வகையில் மே ஐ ஹெல்ப் யூ என்ற பணிப்பெண்களை நியமனம் செய்துள்ளது விமான நிலையம். இவர்கள் பயணிகளுக்கு உதவிகள் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி நேற்று (மே.22) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..
விவசாயிகள் உயிர் உரங்கள் தழைச்சத்தை பெருக்க இயற்கை உரங்களை விவசாயிகள் பயண்படுத்த வேண்டும். செயற்கை உரங்களை பயண்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படி, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், மதுக்கரை, அன்னூர் நீதிமன்றங்களிலும் வரும் ஜூன்.08 ஆம் தேதி அன்று தேசிய அளவிலான லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைப்பெற உள்ளது.
கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டம் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பில்லூர் அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் இன்று 94.50 அடியை எட்டி உள்ளது. பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்திற்கு நாளை (மே.23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடும்
Sorry, no posts matched your criteria.