India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை பழங்குடியினர் நல இயக்குநரகம் மூலம் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது தற்போது, புதிய திட்டமாக வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது
எனவே, ஆர்வமுள்ள பழங்குடியின மாணவர்கள் https://overseas.tribal.gov.in/
மூலம் இணையவழியில்
விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் இன்று கூறினார்.
2023-ம் வருடத்திற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மேற்காணும் இவ்விருதுக்கு விண்ணப்பம் இணையதள முகவரியான http://awards.gov.in/ மூலம் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும் பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 31.05.2024ம் தேதிக்குள் இந்திய அரசுக்கு இணையதளத்திலேயே நேரடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று கூறினார்.
வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் குடியிருந்து வரும் பாபு என்பவர் வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நிஷாகாந்தி பூ இரவில் பூத்துக் குலுங்கியது. பாபு என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாக நிஷா காந்தி செடியை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு 10 மணி அளவில் அழகான நறுமணத்துடன் பூ பூத்தது. முதலில் ஒரு சில பூக்கள் மெல்ல மெல்ல பூக்க துவங்கியது.
ஆனைமலை ஒடையகுளம் பகுதியை சேர்ந்தவர் சபரீஷ் குமார் (32) தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இந்நிலையில் கடந்த 19ம் தேதி வீட்டின் முன் நிறுத்தி இருந்த அவரது பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கிழக்கு காவல் நிலைய போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை இன்று (மே24) கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தில் 328 தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கு 15 ஆயிரத்து 619 இடங்கள் உள்ளன.
இதில், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் கல்வி பயில 3,950 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில் சேர இதுவரை 7,500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர் என்று பள்ளிக் கல்வி அதிகாரிகள் இன்று(மே 24) தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மழைக்காலங்களில் வரும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் வாய்ப்புள்ளது. இதனால் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மழைநீா் தேங்கியுள்ள இடங்களில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கோவை, சின்னவேடம்பட்டி அருகே பூங்காவில் நேற்று(மே 23) மாலை சருக்கு விளையாட்டு கம்பியில் விளையாடிய சிறுவர்கள் 2 பேர் மீது மின்சாரம் பாய்ந்து மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஒரு குழந்தைக்கு 8 வயதும், ஒரு குழந்தைக்கு 4 வயதும் என்பது மட்டும் தெரியவந்துள்ளது.
சிறுவாணி, அப்பர் பவானி, அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணையில் கடந்த 10 நாட்களாக மழைப்பொழிவு உள்ளதால் அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் குடிநீர் வினியோக கால இடைவெளியையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே கோவை மாநகரில் குடிநீரை சிக்கனமாகவும், குடிநீர் அல்லாத உபயோகத்துக்கு நிலத்தடி நீரை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையர் இன்று தெரிவித்துள்ளார்.
கோவை ஆலாந்துறை அரசு மேல்நிலை பள்ளி மாணவி கடந்த ஆண்டு ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யபட்ட சம்பவத்தின் விசாரணை இன்று கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆசிரியர் ஆனந்தகுமாருக்கு உதவியதாக ரேகா, சாரதா, அந்தோனி, ஈஸ்வரன் உள்ளிட்ட 7 பேரயும் இவ்வழக்கில் இணைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, 7 பேர் மீதும் போக்சோ வழக்கு இன்று பதியப்பட்டது.
கோவை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.