India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையிலுள்ள சோலையாறு அணை, ஆசியாவின் 2ஆவது ஆழமான அணை என்று கூறப்படுகிறது. இதன் கொள்ளளவு 150.20 மில்லியன் கன அடி. பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ்வரும் ஒரு முதன்மையான நீர்த்தேக்கம் இதுவாகும். இதன் மிகுதி நீர் பரம்பிக்குளம் நீர்த்தேக்கத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்த அணையைப் பார்க்க சிறப்பு அனுமதி தேவை. மேலும் இந்த அணை அப்பகுதியில் புகழ்பெற்ற பொறியாளரான கே. பழனிசாமி தலைமையின் கீழ் கட்டப்பட்டது.
கோவை கொடிசியா வளாகத்தில் இரண்டாவது நாளாக இந்திய ராணுவ கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இன்று (மே.29) இந்திய ராணுவத்தில் இடம் பிடித்த பொருட்களை கண்டு ரசித்தனர். இதன் ஒரு பகுதியாக இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் துப்பாக்கியை ராணுவ வீரர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தங்களது பார்வையில் வைத்திருந்தனர்.
கோவை காந்திமாநகரை சேர்ந்தவர் ராஜா. இவர் நேற்று, கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் இரும்பு கம்பிகளைத் திருட முயன்றார். இதனை மருத்துவமனை காவலாளிகள் கண்டு ராஜாவை பிடித்து தாக்கினர். இதில் மயங்கி விழுந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன், உட்பட 12 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பீளமேடு தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு மணி என்பவர் உள்ளே நுழைந்து இரும்பு கம்பிகளை திருட முயன்றுள்ளார். இதனை கண்ட அங்கிருந்த ஊழியர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி சன் டிவி ரிப்போர்டரும் , தினமணி புகைப்பட கலைஞருமான அஜய் என்பவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து, கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தார். இந்தநிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இவரது இழப்பு கோவை, மற்றும் பொள்ளாச்சி பத்திரிகையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் அக்னி வீர வாயு (இசைக்கலைஞர்) தேர்வுக்கு பெங்களூரில் அமைந்துள்ள 7 வது ஏர் மேன் தேர்வு மையத்தில் வரும் ஜூலை 7 ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. வரும் ஜூன் 5ம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 12-10-2013ஆம் ஆண்டு திருப்பூரை சேர்ந்த 16 வயது சிறுவனை போத்தனூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவர்கள் இரண்டு பேர் சேர்ந்து கொலை செய்து எரித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சிறுவர்கள் இரண்டு பேருக்கும் தலா மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை ஜெ.எம். 4-வது கோர்ட்டு நீதிபதி சரவணபாபு நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தார்.
கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவு ஜோஸ் நகரைச் சேர்ந்தவர் கார்த்தி (42). நேற்று மாலை அவர் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டி ஒன்று 100 அடி ஆழமுள்ள அவரது வீட்டு கிணற்றில் விழுந்துள்ளது. அதனை மீட்பதற்காக கார்த்தி கிணற்றுக்குள் இறங்கியபோது தவறி 100 அடி ஆழம் உள்ள கிணற்றில் விழுந்துள்ளார். தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரும் கார்த்திக் மற்றும் ஆட்டுக்குட்டியையும் மீட்டனர்.
கோவை எஸ்பி அலுவலகம் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், மாவட்டம் முழுவதும் காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கடந்த மே.1 ஆம் தேதி முதல் இன்று வரை 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 93 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி இன்று விடுத்துள்ள செய்திகுறிப்பில், தோட்டக்கலை பயிர்களான வாழை, மரவள்ளி போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். வயல்களில் அதிக நீர் தேங்காமல் உரிய வடிகால் வசதி செய்து, நீர்ப்பாசனம், உரமிடுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.