Coimbatore

News March 21, 2025

கோவை வரும் து.முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 

image

சென்னையில் இருந்து விமானம் மூலம் மார்ச்.23ஆம் தேதி கோவை வரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி மைதானத்தில் ரூ.10 கோடி மதிப்பில் ஹாக்கி மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறாா். தொடா்ந்து வனக்கல்லூரியில் நடைபெற உள்ள அரசு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

News March 21, 2025

தேர்த்திருவிழாவை வழக்கம்போல நடத்த ஐகோர்ட் உத்தரவு

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் ஒருவர் “கடந்த கோவை உக்கடம் சங்கமேஸ்வரர் கோவிலில் 1998 ஆம் ஆண்டுக்குப்பிறகு தைப்பூச மற்றும் சித்திரை தேரோட்ட நிகழ்வுகள் நடைபெறாமல் தடைபட்டது. திருவிழாக்களை வழக்கம் போல நடத்த உத்தரவிட வேண்டும் ” என மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் கோவிலின் திருவிழாக்களை வழக்கம்போல நடத்த வேண்டும் என அறநிலையத்துறைக்கு நேற்று உத்தரவிட்டது.

News March 21, 2025

கோவையில் இங்கு ரியல் எஸ்டேட் விலை உயரப்போகுது

image

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை தொழில் ரீசியாகவும், கல்வி, வேலை வாய்ப்புகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் கோவை, சரவணம்பட்டி, காலாப்பட்டி, மலுமிச்சம்பட்டி, சூலூர், கோவைப்புதூர் பகுதியில் தொழில் பூங்கா, ஐடி பூங்காக்கள் வர இருப்பதற்கான மாஸ்டர் பிளானை அரசு தயார் செய்து வருகிறது. இதனால், அடுத்த 5-10 ஆண்டுகளில் இப்பகுதியில் ரியல் எஸ்டேட் மதிப்பு உச்சத்தை அடையவுள்ளது. (Share பண்ணுங்க)

News March 21, 2025

தகவல் அளித்தால் ரூ.2,000 வெகுமதி

image

தமிழகத்தில் குழந்தை திருமணம் குறித்து அதிகாரிகள் பல்வேறு நடவக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து கோவை மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா கூறுகையில், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், ஆனைமலை பகுதியில் குழந்தை திருமணம் அதிகம் நடக்கிறது. இதை தடுக்கும் விதமாக கிராமம் வாரியாக குழு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும், குழந்தை திருமணம் குறித்து தகவல் அளித்தார் ரூ.2,000 வெகுமதி வழங்கப்படும் என்றார்.

News March 20, 2025

கோவை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்கோவை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் புத்தாக்கப் பொறியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 18 வாரங்கள் கொண்ட இந்த பயிற்சி கோவை திருச்சி, சேலம், ஓசூர் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் தங்கும் வசதியுடன் வழங்கப்படும் என்றார்.

News March 20, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (20.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 20, 2025

கிராம வாரியாக குழு ஏற்படுத்தி கண்காணிப்பு

image

கோவை மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா நேற்று கூறுகையில், கோவை மாவட்டத்தில் கடந்த 2024ல் 37 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 97 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இதுதொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்குட்பட்ட கிராம வாரியாக குழு ஏற்படுத்தி, குழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றார்.

News March 20, 2025

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் 100 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்.,21ஆம் தேதி வரை <>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 20, 2025

லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 16 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு

image

கோவை சின்னவேடம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில், உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்த துரைராஜிடம், கடந்த 2009 ஆம் ஆண்டு, மணியக்காரன்பாளையத்தை சேர்ந்த தனபாக்கியம், மின் இணைப்பை மாற்றி வழங்க கோரி, ரூ.300 லஞ்சம் கொடுத்தார். அப்போது போலீசார் அவரை கைது செய்தனர். இவ்வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

News March 20, 2025

கோவை: பிரபல பாம்பு பிடி வீரர் மரணம்!

image

கோவையில் பிரபல பாம்பு பிடி வீரராக இருப்பவர் சந்தோஷ். இவர் சமீபத்தில் பாம்பு பிடிக்க சென்றபோது, எதிர்பாராத விதமாக, சந்தோஷை நாகப்பாம்பு கடித்தது. பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாம்பு பிடி வீரர் சந்தோஷ் பரிதாபமாக நேற்றிரவு உயிரிழந்தார். தமிழக அரசு இவரது குடும்பத்திற்கு உதவ வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!