Coimbatore

News June 2, 2024

கோவை: ஆன்லைன் மூலம் ரூ.1.27 கோடி மோசடி

image

கோவை மருதமலை ஐஓபி காலனியை சோ்ந்த ஓய்வு பெற்ற வருவாய் துறை இணை ஆணையர் சிவகுமாா் (61). இதேபோல் வடவள்ளியை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி சகஸ்ராம சுப்பிரமணி (73). இவர்களிடம் சில தினங்களுக்கு முன் போனில் பேசிய மர்ம நபர் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி ரூ.1.27 கோடி வங்கி கணக்கில் பெற்று பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளனர். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News June 2, 2024

காட்டு யானை தாக்கி கல்லூரி மாணவர் பலி

image

வால்பாறை ஷேக்கல்முடி எஸ்டேட் புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் (18) கல்லூரி மாணவர். விடுமுறையை முன்னிட்டு தனது நண்பர் சந்தோஷ் உடன் நேற்று வீட்டுக்கு வந்துள்ளார். புதுக்காடு எஸ்டேட் வழியாக பைக்கில் வந்தபோது வனப்பகுதியில் இருந்து வந்த இரண்டு காட்டு யானைகள் இவர்களை தாக்கியது. இதில் யானை தாக்கியதில் முகேஷ் உயிரிழந்தார். வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News June 2, 2024

கட்டிட கலை சார்ந்த கண்காட்சி

image

கோவை அவினாசி சாலை சிட்ரா அரங்கில் கோழிக்கோட்டில் உள்ள அவனி டிசைன் கல்லூரி சார்பாக அவனி ரீச் 24 கட்டிட கலை சம்பந்தமான பயிற்சி முகாம் நடைபெற்றது இந்த பயிற்சி முகாமில் கட்டிட கலை தொடர்பான அனைத்து தொழில் நுட்பங்கள் மற்றும் தகவல்கள் தொடர்பான செயல் விளக்கம் சிறந்த கட்டடக்கலை நிபுணர்கள் மூலம் நடைபெற்றது இந்த நிகழ்வில் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

News June 1, 2024

கோவை : சர்வதேச யோகா போட்டியில் சாதித்த மாணவர்கள்

image

கோலாலம்பூர் நகரில் சர்வதேச அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா, தாய்லாந்து, ஸ்ரீலங்கா, கனடா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பலர் பங்கேற்றனர். பல பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் கோட்டூர் மலையாண்டி பட்டினம் பகுதியில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவர்கள் 17 பதக்கங்களை பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். இன்று கோவை வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News June 1, 2024

மழைநீர் சேகரிப்பு தொடர்பான கருத்தரங்கு கூட்டம்

image

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்க கூட்டரங்கில், மழைநீர் சேகரிப்பு தொடர்பான கருத்தரங்கு கூட்டம், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) அங்கித்குமார் ஜெயின் , மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், செயற்பொறியாளர்கள் முருகேசன், கருப்பசாமி உள்ளனர்.

News June 1, 2024

 கோவை: முதல்வர் இரங்கல்

image

உடையாம்பாளையத்தில் புதிதாக நடைபெற்று வரும் வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த போது இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர் இந்நிலையில் இன்று உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த குமார், மனோஜ் ஆகியோர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

News June 1, 2024

வாக்கு எண்ணிக்கைகாக கூடுதல் போலீசார்

image

லோக்சபா தேர்தல் தமிழகத்தில் கடந்த மாதம், 19ம் தேதி நடைபெற்றது. வரும் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. கோவை மாவட்டத்தில் ஓட்டு எண்ணும் பணியில், 706 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளில், அசம்பாவிதங்களை தடுக்க, கோவை மற்றும் பொள்ளாச்சியில், 1000 போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக இன்று காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

News June 1, 2024

கோவை அரசு கல்லூரி முதல்வர் பணி ஓய்வு

image

கடந்த 1989-ஆம் ஆண்டு கல்லூரி கல்விப் பணியில் வேதியியல் துறையில் சேர்ந்து பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றிய உலகி கோவை வருவதற்கு முன் கடலூா் பெரியாா் அரசு கலை கல்லூரியின் முதல்வராக இருந்தாா். கடந்த 2021ல் கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநராக நியமிக்கப்பட்ட அவா் பின் கோவை அரசு கலை கல்லூரியின் முதல்வராக கடந்த 2022 டிசம்பா் மாதம் நியமிக்கப்பட்டாா். இவர் நேற்று ஓய்வு பெற்றார்.

News June 1, 2024

கோவையில் இருந்து புறப்படாத விமானம்

image

கோவை -சார்ஜா இடையே ஏர் அரேபியா என்ற விமானம் இயக்க பட்டு வருகிறது. இந்த ஏர் அரேபியா விமானம் 160 பயணிகளுடன் கோவையிலிருந்து இன்று (ஜுன் 01) அதிகாலை 4.15 மணிக்கு செல்ல வேண்டிய விமானத்தில் திடிர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட காரணங்களால் விமானம் புறப்பட வில்லை மேலும் தற்போது வரை இந்த தொழில்நுட்ப கோளாறு சரியாகாததால் இந்த விமானம் இன்னும் புறப்பட வில்லை என விமான நிலைய அதிகாரிகள் கூறினார்.

News June 1, 2024

இந்த வருடம் 2.25 இலட்சம் பேர் மலையேற்றம் – வனத்துறை.

image

கோவை பூண்டி மலையடிவாரத்தில் இருந்து சுயம்பு லிங்கத்தை தரிசிக்க 51/2 கி.மீ தூரம் மலைப்பாதையில் மலையேற்றம் செய்ய வேண்டும். பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த பிப். முதல் இன்று வரை 2.25 லட்சம் பேர் மலையேற்றம் செய்துள்ளனர். இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 25 ஆயிரம் பேர் கூடுதலாக மலையேறி உள்ளதாக இன்று வனத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!