India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, கோயமுத்தூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, கோயம்புத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
2024 மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் மொத்தம் 64.81% வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், பாஜக சார்பில் அண்ணாமலையும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.
2019 மக்களவைத் தேர்தல் பொள்ளாச்சி தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட சண்முகசுந்தரம் 1,75,883 (16.32%) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் ஈஸ்வரசாமியும், அதிமுக சார்பில் கார்த்திக் அப்புசாமியும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? உங்கள் கருத்து என்ன?
2019 மக்களவைத் தேர்தல் கோயம்புத்தூர் தொகுதியில், திமுக கூட்டணியில் சிபிஎம் சார்பில் போட்டியிட்ட நடராஜன் 1,79,143 (14.38%) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், பாஜக சார்பில் அண்ணாமலையும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? உங்கள் கருத்து என்ன?
நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் இருந்து 100 மீட்டருக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இதில், கலந்து கொள்ளும் செய்தியாளர்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடா்பாக நேற்று கோவை ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பதிவான வாக்குகள் 94 வாக்கு எண்ணும் மேஜைகளில் 134 சுற்றுகளில் எண்ணப்படுகின்றன. செய்தியாளா்களுக்கு தனியாக ஊடக மையம் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மழைநீர் சேகரிப்பதற்கான முயற்சிகள் சரிவர இல்லாமல் இருப்பதால் காலநிலை மாற்றத்தினால் மழை காலங்களில் மழை நீரானது சாலைகளில் தேங்குகிறது. மழை நீரை முழுமையாக சேமிக்கின்ற வகையில் வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் அமைந்துள்ள பழுதடைந்த மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீர் செய்து மழை நீரை முழுமையாக சேமிக்க வேண்டும் என்றார்.
ஜீவன் ரக் ஷா விருது என்பது துணிச்சலுடன், தாமதம் இன்றி உயிரை காப்பாற்றியதற்காக வழங்கப்படும் விருதாகும். 2024 ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக் ஷா பதக்க விருதுக்கான விண்ணப்பங்கள் https://awards.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 28 ஆம் தேதி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென கலெக்டர் கிராந்திக்குமார் தெரிவித்துள்ளார்.
அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல பகுதியில் வெளியிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப ஆலை வீசி வந்த நிலையில், கோவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.